முனியப்பன், December 21 - 2008, போலியோ
போலியோங்கறது, இளம்பிள்ளை வாதம், சின்னப் பிள்ளைகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் வியாதி, ஒரு பக்க கால் நல்லா நடக்க முடியாம போயிடும். இந்த வியாதி, தடுப்பு மருந்துகள் மூலம் தடுக்கப்படக்கூடிய ஒன்று.
இந்தியாவுல போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இந்திய அரசாங்கம் வருடத்திற்கு ஒருமுறை, இந்தியா முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு45 நாள் இடைவெளியில் 2 தடவை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் கொடுக்கிறார்கள்.
2008 டிசம்பர் 21ல ஒரு முகாம் நடந்துச்சு, போலியோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. அதுலஒரு குழந்தை செத்துப் போய்ட்டதா திருப்பி, திருப்பி TVல FLASH பண்றாங்க. என்ன ஆகும்? சின்னப்பிள்ளைங்க இல்லையா.. எல்லா ஊர்லயும் தாய்மார்கள் பதறிப்போய் அவங்கவங்க பிள்ளைய தூக்கிட்டு பக்கத்துல இருக்க அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்குப் பறக்கறாங்க.
முனியப்பன் அவர் கிளினிக்ல சாயங்காலம் 5.30 மணிக்குத் தொழில ஆரம்பிக்கிறார். ஒண்ணொண்ணா பிள்ளையத் தூக்கிட்டு வர ஆரம்பிக்கிறாங்க. "போலியோ சொட்டு மருந்து கொடுத்தோம், பிள்ளை நல்லா இருக்கான்னு செக் பண்ணுங்க".
முனியப்பன் TV என்னைக்காவது பாக்குற ஆளு, அதுனால TVல தனிப்பட்ட ஆதாயத்துக்காக Flash பண்ண News அவருக்குத் தெரியாது. பிள்ளையத் தூக்கிட்டு வர்றவங்க தான் சொல்றாங்க "TV ல சொல்றாங்க. அந்த ஊர்ல போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஒரு பிள்ளை செத்துப்போச்சு, ஒங்க பிள்ளைய பக்கத்துல இருக்க டாக்டர்கிட்ட காமிச்சுக்குங்கன்னு சொல்றாங்க."
முனியப்பன் உடனே அவருடைய நண்பர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர்.சம்பத்-ஐ தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். டாக்டர். சம்பத், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எதுவும் வராது என்று பதட்டத்துடன் வரும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சொல்கிறார்.
பொன்மேனில 2 பிள்ளை செத்துப்போச்சு, மாப்பாளையத்துல 5 பிள்ளை செத்துப்போச்சு, ஆரப்பாளையத்துல 2 பிள்ளை செத்துப்போச்சு இப்படியான புரளி தகவலுடன் முனியப்பனிடம் கூட்டம். முனியப்பன் அவரிடம் வரும் பிள்ளைகளைப் பரிசோதித்து பெற்றோரிடம் "பிள்ளை நல்லா இருக்கு, பயப்படாதீங்க" அப்படின்னு சொல்லி அனுப்புறார்.
இந்த தலைப்புல எழுதக் காரணம் இருக்கு. Flash பண்ணிய TV தனிப்பட்ட ஆதாயத்துக்காக, அது அரசியல். அது நமக்குத் தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த சம்பவத்தால், அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமல்ல, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் போலியோ சொட்டுமருந்து கொடுத்த பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் குவிந்தனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் ஆலோசனை இலவசம். பல தனியார் மருத்துவர்களும் இலவசமாக ஆலோசனை வழங்கினர். சில தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆலோசனைக்குக் கட்டணம் வாங்கினர். தனியார் என்று வரும் பொழுதே ஆலோசனைக்குக் கட்டணம் தான். அதில் தவறில்லை.
கொடுமையான விஷயம், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில், "மாற்று மருந்து போடுகிறோம்னு" சொல்லி ஊசி போட்டு பணம் பறித்தனர். இவர்களை சக மருத்துவர் என்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது. அது ஒரு அவசரமான சூழ்நிலை. அன்னைக்கு சமூக கடமையாற்றாமல் மக்களை ஏமாற்றி சுரண்டியது எந்த வகையில் சேரும் என்று புரியவில்லை. "எரியற வீட்டில் புடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
நம்மாளு முனியப்பன் என்ன செஞ்சிருப்பார். அவர் தான் பொழைக்கத் தெரியாத ஆளாச்சே. ஒருத்தர் கிட்டயும் பணம் வாங்கவில்லை. அவர் போலியோ சொட்டு மருந்து ஆலோசனை வழங்கியது 210 பேருக்கு.
Friday, January 9, 2009
Tuesday, January 6, 2009
CASE SHEET (நச்சுக்கொடி)
முனியப்பனும் நச்சுக்கொடியும்
பிரசவ நேரத்துல மொதல்ல தண்ணிக்குடம் உடையும், அடுத்து பிள்ளை பிறக்கும். கடைசியா நச்சுக்கொடி என்ற நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறும். இது Normal Procedure. சமயத்துல நச்சுக்கொடி வெளியேறாமா நச்சுக்கொடி உள்ளேயே இருந்துக்கிடும். Retained Placenta. அதை வெளியேத்தணும். ஆச்சா, இதுல நம்ம முனியப்பன் எங்க வர்றார் பாருங்க ...
முனியப்பன் அப்ப இளம் மருத்துவர். அப்பத்தான் மருத்துவம் படிச்சு முடிச்சு Private practice ஆரம்பிக்கிறார். எடம் நெல்லை மாவட்டத்துல ஆராம்பண்ணை கிராமம். Note பண்ணிக்குங்க, நம்மாளு ஒரு கிராமத்துல 3 வருஷம் மருத்துவம் பாத்திருக்கார். கிராமப்புற மருத்துவம்.
அந்த கிராமம் முஸ்லீம் சமுதாயத்தினர் பெருமளவு வசிக்கிற கிராமம். மிகவும் பக்தியான Orthodox முஸ்லீம் கிராமம். அப்ப ஒருநாள் அங்க ஒரு பொண்ணுக்கு டெலிவரி. பிரசவம் அரசு ஆஸ்பத்திரில உள்ள உதவி செவிலியர் பாக்குறாங்க. பிள்ளை பிறந்துருச்சு, நச்சுக்கொடி வரலை. எவ்வளவு முயற்சி பண்ணியும் வரலை. "என்ன செய்யலாம், முனியப்பனைக் கூப்பிடு". முனியப்பனைக் கூப்பிட்டு விடுறாங்க.
முனியப்பன் உபகரணங்களோட அவங்க வீட்டுக்குப் போனா 100 - 120 பேர் வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ள 20 - 30 பெண்கள். முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிச்சவர் இல்லையா, தொழில்ல, ஜகஜ்ஜால கில்லாடி. ரெண்டு நிமிஷத்துல நச்சுக்கொடிய (Placenta) வெளியே எடுத்து அவங்க கைல குடுத்துட்டு வந்துர்றார். அவங்களுக்கு பரம திருப்தி.
அந்தக் கிராமம் தான், முனியப்பனுக்கு கிராமத்து மக்களோட பாசத்தையும், அன்பையும் சொல்லிக் கொடுத்தது. இன்னைக்கு 24 வருஷம் கழிச்சும், அங்க போய்ட்டு வர்றார் முனியப்பன்.
O&G பிரசவம் பாக்கறதுல கெட்டிக்காரர்கள் ஆண் மருத்துவர்கள் தான்.
ஆதி காலத்து Dr. நோபிள் அப்புறம் G.பழனிச்சாமி, பாஸ்கர் ராவ், Dr. பழனிவேல் இப்பொழுது Dr.கோபிநாத், Dr.ரத்தினகுமார், Dr.ஸ்ரீராம்குமார், Dr.குரியன் ஜோசப்
பிரசவ நேரத்துல மொதல்ல தண்ணிக்குடம் உடையும், அடுத்து பிள்ளை பிறக்கும். கடைசியா நச்சுக்கொடி என்ற நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறும். இது Normal Procedure. சமயத்துல நச்சுக்கொடி வெளியேறாமா நச்சுக்கொடி உள்ளேயே இருந்துக்கிடும். Retained Placenta. அதை வெளியேத்தணும். ஆச்சா, இதுல நம்ம முனியப்பன் எங்க வர்றார் பாருங்க ...
முனியப்பன் அப்ப இளம் மருத்துவர். அப்பத்தான் மருத்துவம் படிச்சு முடிச்சு Private practice ஆரம்பிக்கிறார். எடம் நெல்லை மாவட்டத்துல ஆராம்பண்ணை கிராமம். Note பண்ணிக்குங்க, நம்மாளு ஒரு கிராமத்துல 3 வருஷம் மருத்துவம் பாத்திருக்கார். கிராமப்புற மருத்துவம்.
அந்த கிராமம் முஸ்லீம் சமுதாயத்தினர் பெருமளவு வசிக்கிற கிராமம். மிகவும் பக்தியான Orthodox முஸ்லீம் கிராமம். அப்ப ஒருநாள் அங்க ஒரு பொண்ணுக்கு டெலிவரி. பிரசவம் அரசு ஆஸ்பத்திரில உள்ள உதவி செவிலியர் பாக்குறாங்க. பிள்ளை பிறந்துருச்சு, நச்சுக்கொடி வரலை. எவ்வளவு முயற்சி பண்ணியும் வரலை. "என்ன செய்யலாம், முனியப்பனைக் கூப்பிடு". முனியப்பனைக் கூப்பிட்டு விடுறாங்க.
முனியப்பன் உபகரணங்களோட அவங்க வீட்டுக்குப் போனா 100 - 120 பேர் வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ள 20 - 30 பெண்கள். முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிச்சவர் இல்லையா, தொழில்ல, ஜகஜ்ஜால கில்லாடி. ரெண்டு நிமிஷத்துல நச்சுக்கொடிய (Placenta) வெளியே எடுத்து அவங்க கைல குடுத்துட்டு வந்துர்றார். அவங்களுக்கு பரம திருப்தி.
அந்தக் கிராமம் தான், முனியப்பனுக்கு கிராமத்து மக்களோட பாசத்தையும், அன்பையும் சொல்லிக் கொடுத்தது. இன்னைக்கு 24 வருஷம் கழிச்சும், அங்க போய்ட்டு வர்றார் முனியப்பன்.
O&G பிரசவம் பாக்கறதுல கெட்டிக்காரர்கள் ஆண் மருத்துவர்கள் தான்.
ஆதி காலத்து Dr. நோபிள் அப்புறம் G.பழனிச்சாமி, பாஸ்கர் ராவ், Dr. பழனிவேல் இப்பொழுது Dr.கோபிநாத், Dr.ரத்தினகுமார், Dr.ஸ்ரீராம்குமார், Dr.குரியன் ஜோசப்
CASE SHEET (ஸ்டார்ட்டிங் டிரபிள்)
Two வீலர்ல ஸ்டார்ட்டிங் டிரபிள் வரும். Four வீலர்ல வரும். Lifeலயும் வரும்.
எப்ப... ?
வாழ்க்கைல முக்கியமான விஷயம் கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச உடனே பர்ஸ்ட் நைட். அங்க வர்ற ஸ்டார்டிங் ட்ரபிள்தான் இந்த டாபிக். எல்லாருக்கும் இது வராது. ஏன்னா மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை. ஒரு சிலருக்குத் தான் இது.
அதுல ஒரு சிலர் முனியப்பன்கிட்ட கல்யாணத்துக்கு அடுத்த நாளே வந்துருவாங்க. சார், அண்ணே அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுவாங்க. வீர விளையாட்டுல்ல, அதுல ஃபெயில் ஆனா எப்படி இருக்கும் ...? மானப் பிரச்சனை.
பொதுவா பயம், செயல்படுறதுல குறைபாடு, அறியாமை இதுல ஒண்ணு தான் இருக்கும். கொஞ்சம் பயத்தைப் போக்கிட்டோ ம்னா போதும். அன்னைக்கே கரெக்டாயிரும். சுருங்கிப்போய், பதறிப்போய் வந்த மூஞ்சி, அடுத்து வரும் போது புன்னகையோடு மலர்ந்திருக்கும் பாருங்க, கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இமயத்தில் கொடி நாட்டிய சந்தோஷம்.
எப்ப... ?
வாழ்க்கைல முக்கியமான விஷயம் கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச உடனே பர்ஸ்ட் நைட். அங்க வர்ற ஸ்டார்டிங் ட்ரபிள்தான் இந்த டாபிக். எல்லாருக்கும் இது வராது. ஏன்னா மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை. ஒரு சிலருக்குத் தான் இது.
அதுல ஒரு சிலர் முனியப்பன்கிட்ட கல்யாணத்துக்கு அடுத்த நாளே வந்துருவாங்க. சார், அண்ணே அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுவாங்க. வீர விளையாட்டுல்ல, அதுல ஃபெயில் ஆனா எப்படி இருக்கும் ...? மானப் பிரச்சனை.
பொதுவா பயம், செயல்படுறதுல குறைபாடு, அறியாமை இதுல ஒண்ணு தான் இருக்கும். கொஞ்சம் பயத்தைப் போக்கிட்டோ ம்னா போதும். அன்னைக்கே கரெக்டாயிரும். சுருங்கிப்போய், பதறிப்போய் வந்த மூஞ்சி, அடுத்து வரும் போது புன்னகையோடு மலர்ந்திருக்கும் பாருங்க, கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இமயத்தில் கொடி நாட்டிய சந்தோஷம்.
Monday, January 5, 2009
மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்
முனியப்பனின் நெல்லை மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்
ஆரம்ப காலத்திலிருந்து முனியப்பனுக்கு
அமர்க்களமான ஆசிரியர்கள்
தண்டபாணி கற்றுத்
தந்த Physiology
பத்மா ராமமூர்த்தி - மாணவர்கள் மிரளும் பெண்புலி
படிக்க வைத்த Biochemistry
கனகாம்பாள் Pharmacology
கண்டிப்பான ஆசிரியை
கலகலப்பான TC
சுலபமாக சொல்லித் தந்த Forenzic Medicine
வகுப்பெடுக்கும் போது புகைபிடிக்கும் (Cigarette)
வழக்கம் உள்ள விழி நிபுணர் வேதாந்தம்
மருத்துவம் சொல்லிக் கொடுத்த
மகத்தான சைலபதி, சுந்தரராஜன்
விடிய விடிய சொல்லிக் கொடுத்த
வேணுகோபால் M.சீனிவாசன்
அறுவை சிகிச்சைக்கு
அதிரடியான DKP
அவரைக் கண்டால்
அலறி ஓடும் அரைகுறை மாணவர்கள்
கரகர குரல் வளம்
கருத்தான பாடம் DKPயிடம்
முறுக்கு மீசை R.Hariharan, அவர் முன்
முறுக்கிய அரும்பு மீசையுடன் முனியப்பன்
மகப்பேறு மருத்துவம் பற்றி
மணியாக சொல்லிய காந்திமதி, விஜயலெட்சுமி
எலும்பு முறிவுக்கு
எடுப்பான முருகேசன்
இளைய தலைமுறை அக்னஸ்ன்
இனிமையான பாட நாட்கள்
வயிற்றில் குத்தி, தோளில் கைபோட்டு
வளர்த்த ஸ்டீபன் சுவாமிதாஸ்
அவசரமான அறுவை சிகிச்சைக்கு, முனியப்பனை
அழைக்கும் அன்பான T.M.வைகுண்டராமன்
அமைதியான S.ராமகிருஷ்ணன், பாலஸ் D. பிரகாஷ்
அவர்களிடமிருந்த அருமையான நாட்கள்
இவர்கள் வார்ப்பில் உருவான முனியப்பன்
இன்றும் அவர்களை நினைக்கிறான் நன்றியுடன்
ஆரம்ப காலத்திலிருந்து முனியப்பனுக்கு
அமர்க்களமான ஆசிரியர்கள்
தண்டபாணி கற்றுத்
தந்த Physiology
பத்மா ராமமூர்த்தி - மாணவர்கள் மிரளும் பெண்புலி
படிக்க வைத்த Biochemistry
கனகாம்பாள் Pharmacology
கண்டிப்பான ஆசிரியை
கலகலப்பான TC
சுலபமாக சொல்லித் தந்த Forenzic Medicine
வகுப்பெடுக்கும் போது புகைபிடிக்கும் (Cigarette)
வழக்கம் உள்ள விழி நிபுணர் வேதாந்தம்
மருத்துவம் சொல்லிக் கொடுத்த
மகத்தான சைலபதி, சுந்தரராஜன்
விடிய விடிய சொல்லிக் கொடுத்த
வேணுகோபால் M.சீனிவாசன்
அறுவை சிகிச்சைக்கு
அதிரடியான DKP
அவரைக் கண்டால்
அலறி ஓடும் அரைகுறை மாணவர்கள்
கரகர குரல் வளம்
கருத்தான பாடம் DKPயிடம்
முறுக்கு மீசை R.Hariharan, அவர் முன்
முறுக்கிய அரும்பு மீசையுடன் முனியப்பன்
மகப்பேறு மருத்துவம் பற்றி
மணியாக சொல்லிய காந்திமதி, விஜயலெட்சுமி
எலும்பு முறிவுக்கு
எடுப்பான முருகேசன்
இளைய தலைமுறை அக்னஸ்ன்
இனிமையான பாட நாட்கள்
வயிற்றில் குத்தி, தோளில் கைபோட்டு
வளர்த்த ஸ்டீபன் சுவாமிதாஸ்
அவசரமான அறுவை சிகிச்சைக்கு, முனியப்பனை
அழைக்கும் அன்பான T.M.வைகுண்டராமன்
அமைதியான S.ராமகிருஷ்ணன், பாலஸ் D. பிரகாஷ்
அவர்களிடமிருந்த அருமையான நாட்கள்
இவர்கள் வார்ப்பில் உருவான முனியப்பன்
இன்றும் அவர்களை நினைக்கிறான் நன்றியுடன்
Thursday, January 1, 2009
CASE SHEET (தாய்-மகன்)
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை இன்னைக்கும் மக்கள் பயப்படுற வியாதி. மஞ்சள் காமாலை வந்தா பாதிப்பேர் என்ன, முக்காவாசிப் பேர் நாட்டு மருந்து சாப்பிடப் போயிருவாங்க.
புதுத் தாமரைப் பட்டில கண்ணுல மருந்து ஊத்துவாங்க. அச்சம்பத்துல தலைல பத்து போடுவாங்க, காரைக்குடில உள்ளுக்கு மருந்து கொடுத்து "வயித்தால (Diarrhoea) போகும். பயப்படாத" அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க. உசிலம்பட்டி பக்கத்தில முன் கைல (Forearm) wrist-க்கு பக்கத்துல வட்டமா சூடு போடுவாங்க.
ஆங்கில வைத்தியம் தனி. முனியப்பன் பாத்த தாயும் மகனும் அசத்திட்டாங்க. தாய்க்கு வயசு 80, மகனுக்கு வயசுக்கு 60. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மஞ்சள் காமாலை. இரத்தத்தில பிலிருபின் அளவு அதிகமாக இருக்கறதால ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்றார் முனியப்பன். ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் ரூம்.
மஞ்சள் காமாலைக்கு முக்கியமா ரெஸ்ட் தேவை, அதுனால முனியப்பன் ஸ்ட்ரிக்டா ரெண்டு பேருக்கும் சொல்லிட்டார். ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, அவங்கவங்க ரூம்லயே இருக்கணும்னு. தாய்-மகன் எதிர் எதிர் ரூம். அப்படியிருந்தும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம 10 நாள் ஓடுது. இரத்தத்துல ரெண்டு பேருக்குமே பிலிருபின் 10க்கு மேல, மஞ்சள் காமாலை டூமச். அதுனால தான் ஒருத்தரை ஒருத்தர் பாக்க தடா, அப்புறம் ரெண்டு பேருக்கும் சுகமாச்சு, அப்பத்தான் ரெண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க விட்டார் முனியப்பன்.
முனியப்பன் டூமச் கண்ட்ரோலா இருக்கக் காரணம் தாய்-மகன், ரெண்டு பேரும் நல்லபடியாகனும்னு தான். அதே மாதிரி தாய் மகன் ரெண்டு பேரும் முனியப்பன் பேச்சை இம்மி பிசகாம கடைப் பிடிச்சு நல்லா சுகமா வீட்டுக்குத் திரும்பினாங்க.
தாய்ப்பாசம், பிள்ளைப் பாசம் ரெண்டையும் தாண்டி, தாய் மகன் ரெண்டு பேரும் இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்.
மஞ்சள் காமாலை இன்னைக்கும் மக்கள் பயப்படுற வியாதி. மஞ்சள் காமாலை வந்தா பாதிப்பேர் என்ன, முக்காவாசிப் பேர் நாட்டு மருந்து சாப்பிடப் போயிருவாங்க.
புதுத் தாமரைப் பட்டில கண்ணுல மருந்து ஊத்துவாங்க. அச்சம்பத்துல தலைல பத்து போடுவாங்க, காரைக்குடில உள்ளுக்கு மருந்து கொடுத்து "வயித்தால (Diarrhoea) போகும். பயப்படாத" அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க. உசிலம்பட்டி பக்கத்தில முன் கைல (Forearm) wrist-க்கு பக்கத்துல வட்டமா சூடு போடுவாங்க.
ஆங்கில வைத்தியம் தனி. முனியப்பன் பாத்த தாயும் மகனும் அசத்திட்டாங்க. தாய்க்கு வயசு 80, மகனுக்கு வயசுக்கு 60. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மஞ்சள் காமாலை. இரத்தத்தில பிலிருபின் அளவு அதிகமாக இருக்கறதால ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்றார் முனியப்பன். ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் ரூம்.
மஞ்சள் காமாலைக்கு முக்கியமா ரெஸ்ட் தேவை, அதுனால முனியப்பன் ஸ்ட்ரிக்டா ரெண்டு பேருக்கும் சொல்லிட்டார். ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, அவங்கவங்க ரூம்லயே இருக்கணும்னு. தாய்-மகன் எதிர் எதிர் ரூம். அப்படியிருந்தும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம 10 நாள் ஓடுது. இரத்தத்துல ரெண்டு பேருக்குமே பிலிருபின் 10க்கு மேல, மஞ்சள் காமாலை டூமச். அதுனால தான் ஒருத்தரை ஒருத்தர் பாக்க தடா, அப்புறம் ரெண்டு பேருக்கும் சுகமாச்சு, அப்பத்தான் ரெண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க விட்டார் முனியப்பன்.
முனியப்பன் டூமச் கண்ட்ரோலா இருக்கக் காரணம் தாய்-மகன், ரெண்டு பேரும் நல்லபடியாகனும்னு தான். அதே மாதிரி தாய் மகன் ரெண்டு பேரும் முனியப்பன் பேச்சை இம்மி பிசகாம கடைப் பிடிச்சு நல்லா சுகமா வீட்டுக்குத் திரும்பினாங்க.
தாய்ப்பாசம், பிள்ளைப் பாசம் ரெண்டையும் தாண்டி, தாய் மகன் ரெண்டு பேரும் இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்.
நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
ஒரு ரூபாய் டாக்டர்
ஒத்த ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை குடுக்க முடியுமா ? குடுத்தார் 1980களில் ஒரு டாக்டர். அவர் பேரே ஒரு ரூபா டாக்டர், அவர் மருத்துவத் தொழில் பாத்தது மேலப்பாளையம் திருநெல்வேலி. அவர் பேரு டாக்டர் சாகுல் ஹமீது.
திருநெல்வேலில எல்லா டாக்டரும் அந்த காலகட்டத்துல 3 ரூபாய் அல்லது 5 ரூபாய்க்கு ஊசி போட்டுக்கிட்டிருந்த நேரம், இவர் மட்டும் 1 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். அப்ப சிறப்பு மருத்துவர் கூட பீஸா 10 ரூபாய் தான் வாங்கிட்டிருந்தாங்க. கைல காசு இல்லைன்னா .... ஃப்ரியா ஊசி போட்டு, கைல செலவுக்கும் காசு குடுப்பார்.
முனியப்பன் நெல்லைய விட்டு வந்து 25 வருஷமாச்சு. இப்ப டாக்டர் சாகுல் ஹமீது எப்படியிருக்கார்னு விசாரிச்சுப் பாத்தா, டாக்டர் மேற்படிப்பா MS படிச்சு ஆபரேசன் பண்ணிகிட்டு நல்லா இருக்கார்னு சொன்னாங்க.
இப்ப திருநெல்வேலி பேட்டைல அவர் இருக்கார்.
ஒத்த ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை குடுக்க முடியுமா ? குடுத்தார் 1980களில் ஒரு டாக்டர். அவர் பேரே ஒரு ரூபா டாக்டர், அவர் மருத்துவத் தொழில் பாத்தது மேலப்பாளையம் திருநெல்வேலி. அவர் பேரு டாக்டர் சாகுல் ஹமீது.
திருநெல்வேலில எல்லா டாக்டரும் அந்த காலகட்டத்துல 3 ரூபாய் அல்லது 5 ரூபாய்க்கு ஊசி போட்டுக்கிட்டிருந்த நேரம், இவர் மட்டும் 1 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். அப்ப சிறப்பு மருத்துவர் கூட பீஸா 10 ரூபாய் தான் வாங்கிட்டிருந்தாங்க. கைல காசு இல்லைன்னா .... ஃப்ரியா ஊசி போட்டு, கைல செலவுக்கும் காசு குடுப்பார்.
முனியப்பன் நெல்லைய விட்டு வந்து 25 வருஷமாச்சு. இப்ப டாக்டர் சாகுல் ஹமீது எப்படியிருக்கார்னு விசாரிச்சுப் பாத்தா, டாக்டர் மேற்படிப்பா MS படிச்சு ஆபரேசன் பண்ணிகிட்டு நல்லா இருக்கார்னு சொன்னாங்க.
இப்ப திருநெல்வேலி பேட்டைல அவர் இருக்கார்.
Saturday, December 27, 2008
முனியப்பனும் குழந்தைகளும்
குழந்தைகளை முனியப்பனுக்குப் பிடிக்கும்
குழந்தைகளுக்கும் முனியப்பனைப் பிடிக்கும்
ஒரு விரல் நீட்டி, ஊசி போட்ட பின்
மிரட்டிய ஒன்றரை வயது சந்தியா சென்னையில்
ஊசிபோடு என்று தரையில்
உருண்ட மூன்று வயது பிரியா now BE
முனியப்பன் is a bad boy என்று
மூன்று பேப்பரில் எழுதிய
ஆறுவயது ராஜசூர்யா now BE
"Doctor loves children"
டக்கென எழுதிய ஜெயா I std Now +2
ஊசி போட்டபின் தாய் தந்தையை
உண்டு இல்லை என்றாக்கும் தீபிகா 2std.
போடுவதற்கு ஊசி எடுக்கும் வேளையில்
ஓடி escape ஆகும் ஒரு சில Boys
தனியாக வந்து
தனக்கென ட்ரீட்மென்ட் பார்க்கும்
முத்து சாரதா 4th std.
ஆஸ்பத்திரி சாலையில் திரும்பியவுடன்
அழுக ஆரம்பிக்கும் 2-3 வயசு குழந்தைகள்
அடிபட்டு தையல்போட
அலறும் குழந்தைகள்
அரட்டிய உடன்
ஆகும் கப்சிப்
ஆஸ்பத்திரி வரும் வழியில் வணக்கம் சொல்லும்
அருகிலுள்ள சிறுவர்கள்
கன்சல்டிங் கதவு திறந்தவுடன்
கண்சிமிட்டி சிரிக்கும் 4-8 வயசுகள்
கைகாட்டி டாட்டா காட்டும் 1-3 வயசுகள்
கையால் flying kiss கொடுக்கும் 1-2 வயசுகள்
சிறு பிள்ளைகளின் சிருங்கார
சிரிப்புக்கு ஈடு இணை இல்லை
கள்ளங் கபடமில்லா சிரிப்பில்
கலந்த ஒரு வெட்கம் காண்பது ஒரு சுகம்
கண்சிமிட்டி கைகுலுக்கி
கரமசைக்கும் சிறுபிள்ளைகளை
அனுதினம் கடப்பது
அசைபோடும் அனுபவம்
குழந்தைகள் பலவகை அந்த
குதூகலம் அனுபவிக்கக் கொடுத்த
...................................இறைவனுக்கு நன்றி
குழந்தைகளுக்கும் முனியப்பனைப் பிடிக்கும்
ஒரு விரல் நீட்டி, ஊசி போட்ட பின்
மிரட்டிய ஒன்றரை வயது சந்தியா சென்னையில்
ஊசிபோடு என்று தரையில்
உருண்ட மூன்று வயது பிரியா now BE
முனியப்பன் is a bad boy என்று
மூன்று பேப்பரில் எழுதிய
ஆறுவயது ராஜசூர்யா now BE
"Doctor loves children"
டக்கென எழுதிய ஜெயா I std Now +2
ஊசி போட்டபின் தாய் தந்தையை
உண்டு இல்லை என்றாக்கும் தீபிகா 2std.
போடுவதற்கு ஊசி எடுக்கும் வேளையில்
ஓடி escape ஆகும் ஒரு சில Boys
தனியாக வந்து
தனக்கென ட்ரீட்மென்ட் பார்க்கும்
முத்து சாரதா 4th std.
ஆஸ்பத்திரி சாலையில் திரும்பியவுடன்
அழுக ஆரம்பிக்கும் 2-3 வயசு குழந்தைகள்
அடிபட்டு தையல்போட
அலறும் குழந்தைகள்
அரட்டிய உடன்
ஆகும் கப்சிப்
ஆஸ்பத்திரி வரும் வழியில் வணக்கம் சொல்லும்
அருகிலுள்ள சிறுவர்கள்
கன்சல்டிங் கதவு திறந்தவுடன்
கண்சிமிட்டி சிரிக்கும் 4-8 வயசுகள்
கைகாட்டி டாட்டா காட்டும் 1-3 வயசுகள்
கையால் flying kiss கொடுக்கும் 1-2 வயசுகள்
சிறு பிள்ளைகளின் சிருங்கார
சிரிப்புக்கு ஈடு இணை இல்லை
கள்ளங் கபடமில்லா சிரிப்பில்
கலந்த ஒரு வெட்கம் காண்பது ஒரு சுகம்
கண்சிமிட்டி கைகுலுக்கி
கரமசைக்கும் சிறுபிள்ளைகளை
அனுதினம் கடப்பது
அசைபோடும் அனுபவம்
குழந்தைகள் பலவகை அந்த
குதூகலம் அனுபவிக்கக் கொடுத்த
...................................இறைவனுக்கு நன்றி
Subscribe to:
Posts (Atom)
