அமர், Ashu & முனியப்பன்
முனியப்பன் சொந்தக்கதை சோகக்கதை, காதல் தோல்வி, திருமண தோல்வி. இருந்தாலும் ஆள் ஒரு ஜோக் பார்ட்டி. பொதுவா சபை (கூட்டம்) களை கட்டனும்னா, அதுக்கு ஒரு ஆள் வேணும். நம்ம முனியப்பன் இருக்கற எடம் கலகலப்பாயிரும்.
முனியப்பனைக் கிறுக்குப் பிடிக்க வைக்க ரெண்டு பேர் இருக்கானுவ. முனியப்பன் தங்கச்சி பையங்க. பேரு அமர் 7 வயசு. Ashu 4 வயசு. சின்ன புள்ளைக வெளையாட்டு மாறிக்கிட்டே இருக்கும். புதுசு புதுசா அவனுக கற்பனைல உதிக்கிற வெளையாட்டை வெளையாடுவானுங்க. நாமளும் அதுக்கேத்த மாதிரி update ஆயிரணும், எப்படின்னா, பாட syllabus, Computer, TV, Cell Phone புதுசா update ஆன உடனே நாமளும் அதை தெரிஞ்சிக்கிற மாதிரி, சின்னப் புள்ளைக வெளையாட்டுக்கும் update ஆயிரணும்.
இப்ப ஒரு 4 நாளா அமர், Ashu வெளையாட்டு புதுசா இருக்கு. Ashu அப்பாவாம், முனியப்பன் Ashuவோட பிள்ளையாம். அமர் கார் டிரைவராம். Ashu பிரிகேஜி. முனியப்பன் 60 கிலோ, வெளையாட்டைப் பாருங்க. Ashuவுக்கு ஒரு நாள் பொழுது எப்படிப் போகுதோ, அதை அப்படியே முனியப்பன் சின்னப் பிள்ளையா வெளையாடணும். அமர், Ashu ரெண்டு பேரும் சேந்து விளையாடுவாங்க.
முனியப்பன் தூங்குற மாதிரி படுத்துக்கிடுவார். "ஏ பிள்ளை எந்திரி," Ashu எழுப்ப, "இன்னும் அஞ்சு நிமிஷம்" எந்திரிக்க Ashu மாதிரி முனியப்பன் டைம் கேப்பார். "அஞ்சு நிமிஷம் ஆச்சு எந்திரி" Ashu மறுபடி எழுப்ப முனியப்பன் எந்திரிக்கணும், Ashu முனியப்பன் கையப் பிடிச்சிக்கிட்டு போய் "one toilet போப்பா", பல் தேய்க்க paste குடுப்பார் Ashu (Action தான்). முனியப்பன் பல் தேய்க்கிற மாதிரி நடிக்கணும், பெறகு பிள்ளையக் குளிப்பாட்டி Ashu துவட்டி விடுவார். பெறகு schoolக்கு கெளம்பற மாதிரி, uniform, shoes, lunch box. "டிரைவர் அண்ணன் வந்தாச்சா" முனியப்பன் கேப்பார். அமர் "நான் வந்து 30 மினிட்ஸ் ஆச்சும்பார்". பிறகு முனியப்பன் school bagஅ தோள்ல தூக்கிப்போட்டு schoolக்கு கெளம்பி கார்ல ஒக்காருவார். அமர் காரை ஓட்டிக்கொண்டு போய் முனியப்பனை schoolல drop பண்ணிருவார்.
இந்த வெளையாட்டு நடக்குற நேரம் இரவு 10.30 மணி. எடம் முனியப்பனோட துயில் அறை. school முடிஞ்சு அப்பா Ashu, பிள்ளை முனியப்பனைக் கூப்பிட்டு வருவார். வரும் போது பிள்ளை தண்ணிப் பழ ஜீஸ் குடிக்கும். ரெகுலரா schoolல இருந்து வந்த ஒடனே, அமர் கார் டிரைவர் உதவியுடன் கார் ஓட்டுவார். அதை முனியப்பன் அப்பா பிள்ளை வெளையாட்டுல சேத்துக்கிடுவார். தலையணை - அது மேல pencil box - அதான் car steering. அத பிடிச்சுக்கிட்டு, பின்னால car driver அமர் ஒக்காந்திருக்க, முனியப்பன் car ஓட்டுவார்.
இது இப்ப 4 நாளா நடக்குது. நம்மாளு முனியப்பனும் ஜோக் பார்ட்டில்ல, அவரும் அமர், Ashu கூட சேந்து கலக்குவார். "அப்பா எனக்கு Horlicks குடு". Ashu குடுக்கும் action டம்ளர்க்குள் விரல விட்டு, நாக்குல கைய வச்சுப் பாத்து இன்னும் கொஞ்சம் Horlicks, Ashu ஹார்லிக்ஸ் கொட்டுவார், பிறகு முனியப்பன் குடிப்பார். அமர் சொல்றதையும் அவுத்து விடுவார். "அப்பா டிரைவர் அண்ணனை 3.15க்குக் கூப்பிட வரச்சொல்லுப்பா ", Ashu அமர்கிட்ட சொல்லுவார். பெறகு ஒண்ணு சொல்லுவார் முனியப்பன். அமர், Ashu ரெண்டு பேரும் தலைல அடிச்சிக்கிடுவாங்க. முனியப்பன் "2 toilet கழுவி விடும்"பார். அமர், Ashu ரெண்டு பேரும் "ச்சீய்"ன்ருவாங்க.
Ashu, முனியப்பன் வெளையாட்ல ஓரளவு பங்கெடுத்துக்கிற அமரோட comment, "இப்படி ஒரு பிள்ளை planetல கெடையாது. Outer galaxyலயும் கெடையாது."
சிறு பிள்ளைகளுடன் நம் உறவு உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே போதாது, நமது அருகாமையும் தேவை, அவர்களுடன் கலந்து அவர்களுடைய கற்பனையை, அறிவை மேம்படுத்த வேண்டும்.
முனியப்பனோட அப்பா இதே மாதிரி முனியப்பனை வளத்தார். அதை தங்கச்சி பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பன் பின்பற்றுகிறார்.
Saturday, February 14, 2009
Thursday, February 12, 2009
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (தவசி)
தண்ணி லாரி தவசி
தண்ணி லாரி (water tanker) ஓட்டுற தவசி, மதுரைல அடி மட்டத்துல இருந்து மேல வந்துக்கிட்டிருக்க ஒரு சராசரி மனிதர். முனியப்பன் காலை நடைப் பயிற்சியின் போது தவசிய சந்திப்பார். தவசி அப்ப டூட்டிக்கு போய்க்கிட்டிருப்பார். மொதல்ல வீட்லருந்து டூட்டிக்கு நடந்து போன தவசி, ரொம்ப நாள் கழிச்சு TVS 50, அப்புறம் கொஞ்ச நாள்ல M 80,ரொம்ப நாள் கழிச்சு Hero Honda. நிதானமான, படிப்படியான முன்னேற்றம்.
தவசி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். எல்லா போக்குவரத்துக் கழகத்துலயும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சங்கங்கள் உண்டு. ஆளுங்கட்சிக்காரங்க முக்கியமான வழித்தடங்கள்ல (route) ஓட்டுநர், நடத்துநராயிருப்பாங்க. அது மாதிரி ரொம்ப light duty வண்டிகளும் அவங்க தான். இது prestige (கெளரவம்). அதுல ஒண்ணு தான் தண்ணி லாரி (water tanker). பசுமலை டெப்போல இருந்து லாரிய எடுத்து அரசரடி குடிநீர் நீரேற்று நிலையத்துல லாரில தண்ணிய fill பண்ணி, பசுமலைக்கும், தலைமை அலுவலகத்துக்கும் தண்ணிய கொண்டுபோய் சேர்க்கணும். காலைல 6 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் டுட்டி. அதுக்கப்புறம் rest. மறுபடி அடுத்த நாள் தான் டூட்டி. வாரம் ஒரு நாள் விடுப்பு.
இந்த டூட்டி நேரம் நம்மாளு தவசிக்குப் பிடிச்சுப் போச்சு. அதுனால அந்த வண்டிய மட்டும் ஓட்ற மாதிரி பாத்துக்கிட்டார். ஆட்சி மாறின ஒடனே, இவரும் டக்குன்னு ஒரு துண்டைப் பொத்தி ஆளுங்கட்சி அரசியல்வாதி மூலமா தண்ணி லாரி டூட்டிய தக்க வச்சிக்கிருவார். இப்படி 20 வருஷமா தண்ணி லாரி ஓட்டுனார். யார் கண்ணு பட்டுச்சோ, இந்த தடவை ஆட்சி மாறின ஒடனே இவர் மேல ஒரு கண் வச்சிக்கிட்டிருந்தவங்க மொத வேலையா "தவசிய தண்ணி லாரிய விட்டு எறக்குடா"னு நம்ம தவசிய தண்ணி லாரி டூட்டில இருந்து எறக்கி விட்டுவிட்டாங்க. இப்ப தவசி ரெண்டு வருஷமா சிட்டி பஸ் ஓட்டிகிட்டிருக்கார்.
இவர் தண்ணி லாரி ஓட்டக் காரணம் இல்லாமலா இருக்கும். இவர் வாழ்க்கைல அடிமட்டத்துல இருந்து தன் கையே தனக்குதவின்னு தானே பாடுபட்டு முன்னேறிகிட்டு இருக்கவர். மதியம் 1 மணில இருந்து 11 மணி வரை தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். சைடுல ஒரு ஆட்டோ வாங்கி விட்டார். அது இன்னைக்கு 5 ஆட்டோ வா இருக்கு.
திரை உலகில் நடிகர் சங்கிலி முருகன், நடிகர் செந்தில், நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர்களது குடும்பத்தாருடனும் நெருங்கிய பரிச்சயமுள்ளவர். நடிகர் விஜயகாந்துடனும் தொடர்பு உள்ளவர். சங்கிலி முருகன் பேரவையிலும், ஜெயம் ரவி ரசிகர் மன்ற மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார். திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார்.
தவசியிடம் முனியப்பனுக்குப் பிடித்த விஷயம் அவருடைய பல்வேறு முகங்கள், 1. அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர், 2. அரசியல் 3. திரை உலக தொடர்பு 4. பொது வாழ்க்கை
தண்ணி லாரி (water tanker) ஓட்டுற தவசி, மதுரைல அடி மட்டத்துல இருந்து மேல வந்துக்கிட்டிருக்க ஒரு சராசரி மனிதர். முனியப்பன் காலை நடைப் பயிற்சியின் போது தவசிய சந்திப்பார். தவசி அப்ப டூட்டிக்கு போய்க்கிட்டிருப்பார். மொதல்ல வீட்லருந்து டூட்டிக்கு நடந்து போன தவசி, ரொம்ப நாள் கழிச்சு TVS 50, அப்புறம் கொஞ்ச நாள்ல M 80,ரொம்ப நாள் கழிச்சு Hero Honda. நிதானமான, படிப்படியான முன்னேற்றம்.
தவசி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். எல்லா போக்குவரத்துக் கழகத்துலயும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சங்கங்கள் உண்டு. ஆளுங்கட்சிக்காரங்க முக்கியமான வழித்தடங்கள்ல (route) ஓட்டுநர், நடத்துநராயிருப்பாங்க. அது மாதிரி ரொம்ப light duty வண்டிகளும் அவங்க தான். இது prestige (கெளரவம்). அதுல ஒண்ணு தான் தண்ணி லாரி (water tanker). பசுமலை டெப்போல இருந்து லாரிய எடுத்து அரசரடி குடிநீர் நீரேற்று நிலையத்துல லாரில தண்ணிய fill பண்ணி, பசுமலைக்கும், தலைமை அலுவலகத்துக்கும் தண்ணிய கொண்டுபோய் சேர்க்கணும். காலைல 6 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் டுட்டி. அதுக்கப்புறம் rest. மறுபடி அடுத்த நாள் தான் டூட்டி. வாரம் ஒரு நாள் விடுப்பு.
இந்த டூட்டி நேரம் நம்மாளு தவசிக்குப் பிடிச்சுப் போச்சு. அதுனால அந்த வண்டிய மட்டும் ஓட்ற மாதிரி பாத்துக்கிட்டார். ஆட்சி மாறின ஒடனே, இவரும் டக்குன்னு ஒரு துண்டைப் பொத்தி ஆளுங்கட்சி அரசியல்வாதி மூலமா தண்ணி லாரி டூட்டிய தக்க வச்சிக்கிருவார். இப்படி 20 வருஷமா தண்ணி லாரி ஓட்டுனார். யார் கண்ணு பட்டுச்சோ, இந்த தடவை ஆட்சி மாறின ஒடனே இவர் மேல ஒரு கண் வச்சிக்கிட்டிருந்தவங்க மொத வேலையா "தவசிய தண்ணி லாரிய விட்டு எறக்குடா"னு நம்ம தவசிய தண்ணி லாரி டூட்டில இருந்து எறக்கி விட்டுவிட்டாங்க. இப்ப தவசி ரெண்டு வருஷமா சிட்டி பஸ் ஓட்டிகிட்டிருக்கார்.
இவர் தண்ணி லாரி ஓட்டக் காரணம் இல்லாமலா இருக்கும். இவர் வாழ்க்கைல அடிமட்டத்துல இருந்து தன் கையே தனக்குதவின்னு தானே பாடுபட்டு முன்னேறிகிட்டு இருக்கவர். மதியம் 1 மணில இருந்து 11 மணி வரை தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். சைடுல ஒரு ஆட்டோ வாங்கி விட்டார். அது இன்னைக்கு 5 ஆட்டோ வா இருக்கு.
திரை உலகில் நடிகர் சங்கிலி முருகன், நடிகர் செந்தில், நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர்களது குடும்பத்தாருடனும் நெருங்கிய பரிச்சயமுள்ளவர். நடிகர் விஜயகாந்துடனும் தொடர்பு உள்ளவர். சங்கிலி முருகன் பேரவையிலும், ஜெயம் ரவி ரசிகர் மன்ற மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார். திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார்.
தவசியிடம் முனியப்பனுக்குப் பிடித்த விஷயம் அவருடைய பல்வேறு முகங்கள், 1. அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர், 2. அரசியல் 3. திரை உலக தொடர்பு 4. பொது வாழ்க்கை
Friday, February 6, 2009
கேட்பாரில்லையா ............... ?
குருதி வெறி பிடித்த பிசாசுகளிடம்
இறுதி நாட்களில் பல உயிர்கள்
தமிழினத்தை அழிக்க
தான்தோன்றித் தனமான தாக்குதல்
இருக்கும் ஒரு மருத்துவசாலை - மீதும்
இடைவிடாத குண்டு வீச்சு
தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறென்ன அவர்களிடம்
இன வெறி பிடித்த
இலங்கை அரசைக் கேட்பது யார் ?
தீர்மானங்கள் போட்டால் அது
தீர்வாகுமா ஈழத் தமிழனுக்கு
கடை அடைத்தால்
கஷ்டங்கள் போய் விடுமா ?
மேடையில் முழங்கினால் ஈழத் தமிழன்
மேல்உலகம் செல்வது நின்று விடுமா ?
தொப்புள் கொடி உறவுகள் அரசியலாக்காமல்
தோணி ஏறி துயர்துடைக்க வரலாமே
வீடியோ பாருங்கள் ஈழத் தமிழனின்
விதவிதமான அவலங்கள், அழிவுகள், காரியங்கள்
உலகமே உறங்குது
உலக போலீஸ் அமெரிக்காவும் தான்
ஒபாமா சின்னப் பிள்ளையா
ஒன்றும் தெரியாமல் இருப்பதற்கு
ஐக்கிய நாடுகள் சபை எதற்கு
அநியாயங்களைக் கேட்பதற் கில்லையா ?
கடவுளுக்கும் கண்ணில்லை யென்றால்
காது கேட்கவில்லை யென்றால் ஈழத் தமிழன்
கண்களில் பெருகும் கண்ணீர்
காலத்தை வெல்லும்
இறுதி நாட்களில் பல உயிர்கள்
தமிழினத்தை அழிக்க
தான்தோன்றித் தனமான தாக்குதல்
இருக்கும் ஒரு மருத்துவசாலை - மீதும்
இடைவிடாத குண்டு வீச்சு
தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறென்ன அவர்களிடம்
இன வெறி பிடித்த
இலங்கை அரசைக் கேட்பது யார் ?
தீர்மானங்கள் போட்டால் அது
தீர்வாகுமா ஈழத் தமிழனுக்கு
கடை அடைத்தால்
கஷ்டங்கள் போய் விடுமா ?
மேடையில் முழங்கினால் ஈழத் தமிழன்
மேல்உலகம் செல்வது நின்று விடுமா ?
தொப்புள் கொடி உறவுகள் அரசியலாக்காமல்
தோணி ஏறி துயர்துடைக்க வரலாமே
வீடியோ பாருங்கள் ஈழத் தமிழனின்
விதவிதமான அவலங்கள், அழிவுகள், காரியங்கள்
உலகமே உறங்குது
உலக போலீஸ் அமெரிக்காவும் தான்
ஒபாமா சின்னப் பிள்ளையா
ஒன்றும் தெரியாமல் இருப்பதற்கு
ஐக்கிய நாடுகள் சபை எதற்கு
அநியாயங்களைக் கேட்பதற் கில்லையா ?
கடவுளுக்கும் கண்ணில்லை யென்றால்
காது கேட்கவில்லை யென்றால் ஈழத் தமிழன்
கண்களில் பெருகும் கண்ணீர்
காலத்தை வெல்லும்
Monday, February 2, 2009
நாகேஷ்
மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வேடங்கள் மறக்க முடியாதவை. முனியப்பனின் மனதை மட்டும் கவர்ந்த நடிகரல்ல அவர், உலகத் தமிழர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.
அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.
அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.
'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.
நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.
அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.
அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.
'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.
நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.
Friday, January 30, 2009
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (டாக்டர் நர்கீஸ் பானு)
முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1982ல் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த நேரம், 3 மாதம் அவர் இருந்த unitல் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தார் டாக்டர் நர்கீஸ் பானு. அறிவிலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் தேர்ந்தவர். அவர் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த 1 வருடமும் முனியப்பனின் நண்பராக இருந்தார். அவர் பயிற்சிக் காலம் முடிந்து அவர் நாகர்கோவிலுக்குச் சென்றார்.
1986 ஜனவரியில் நாகர்கோவிலில் நடைபெற்ற டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்திற்கு முனியப்பனுக்கு அழைப்பு வந்தது. முனியப்பன் டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமகன் டாக்டர். அப்துல் சுபான்.
1989ம் வருடம் காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் டாக்டர். நர்கீஸ் பானு பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, முனியப்பன் அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக டாக்டர். நர்கீஸ் பானு மகிழ்ச்சியுடன் சொன்னார்.அதன்பிறகு டாக்டர்.நர்கீஸ் பானுவுடன் தொடர்பு கொள்ள முனியப்பனுக்கு நேரம் கிடைக்கவில்லை. காலம் உருண்டோடியது.
முனியப்பன் தினத்தந்தி, ஹிண்டு நாளிதழ்களை காலையில் வாசிக்கும் வழக்கம் உள்ளவர். அதில் தினத்தந்தியில் போட்டோவுடன் வரும் டாக்டர் பற்றிய விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பார். அதிகமாக வெளிநாடு சென்று திரும்பும் டாக்டர்கள் போட்டோவுடன் கூடிய விளம்பரங்கள் தான் இருக்கும்.
01.01.09 அன்று தினத்தந்தியில் ஒரு டாக்டர் போட்டோ செய்தி வந்திருந்தது. டாக்டர் பேரைப் பார்த்தார் முனியப்பன். டாக்டர் அப்துல் சுபான் என்றிருந்தது. மேலே வபாத்தானார் என்றிருந்தது. அதிர்ச்சியடைந்த முனியப்பன் விளம்பரத்தின் கீழே பார்த்தார். Dr. நர்கீஸ் பானு என்றிருந்தது. உடனே ஆத்தூரில் இருக்கும் Dr. முத்துக் கிருஷ்ணனை தொடர்பு கொண்டார் முனியப்பன்.
மஞ்சள் காமாலையால் Dr. அப்துல் சுபான் மரணத்தைத் தழுவியதாகவும், முதல்நாளே இறுதிச் சடங்குகள் முடிந்ததாகவும், திருச்செந்தூர் கிளை (IMA) இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்குகொண்டதாகவும், Dr. முத்துக் கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.
முஸ்லீம் மதமாதலால் கணவனை இழந்த பெண்கள் 40 நாட்கள் ஆண்களை பார்க்கக் கூடாது என்ற தகவலும் முனியப்பனுக்குக் கிடைத்தது. 14.01.09ல் முனியப்பன் தன் தங்கை, தங்கை கணவர், தங்கை பிள்ளைகளுடன் காயல்பட்டினம் சென்றார். அவருக்கு வியப்பான விஷயம் அங்கு காத்திருந்தது. Dr. நர்கீஸ் பானு ஆலோசனை அறையில் பெண் நோயாளிகளுக்கு மட்டும் அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகச் சொன்னார்கள். முனியப்பனின் தங்கை Dr. நர்கீஸ் பானுவைச் சந்தித்துத் துக்கம் விசாரித்து விட்டு வந்தார்.
முனியப்பனுடைய தங்கையிடம் Dr. நர்கீஸ் பானு அவருடைய கணவர் Dr. அப்துல் சுபானின் தங்கை கணவர் மாடியில் இருப்பதாகவும், முனியப்பனை அவரைச் சந்தித்து விட்டு போகச்சொன்னார். Dr. அப்துல் சுபானின் மைத்துனரை அனைவரும் சந்தித்தனர்.
Dr. நர்கீஸ் பானுவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் பையன் இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இரண்டாவது பையன் பிளஸ் டூவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேரும் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில், அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்ற நேரம். இந்த நேரத்தில் கணவரின் மறைவு Dr. நர்கீஸ் பானுவை எந்த அளவு பாதித்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
கணவர் இறந்த பத்து நாட்களில், அவர்களுடைய நோயாளிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்திற்காகவும், ஆலோசனை அறையில் அமர்ந்த Dr.நர்கீஸ் பானு வீரப்பெண்களின் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.
1986 ஜனவரியில் நாகர்கோவிலில் நடைபெற்ற டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்திற்கு முனியப்பனுக்கு அழைப்பு வந்தது. முனியப்பன் டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமகன் டாக்டர். அப்துல் சுபான்.
1989ம் வருடம் காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் டாக்டர். நர்கீஸ் பானு பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, முனியப்பன் அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக டாக்டர். நர்கீஸ் பானு மகிழ்ச்சியுடன் சொன்னார்.அதன்பிறகு டாக்டர்.நர்கீஸ் பானுவுடன் தொடர்பு கொள்ள முனியப்பனுக்கு நேரம் கிடைக்கவில்லை. காலம் உருண்டோடியது.
முனியப்பன் தினத்தந்தி, ஹிண்டு நாளிதழ்களை காலையில் வாசிக்கும் வழக்கம் உள்ளவர். அதில் தினத்தந்தியில் போட்டோவுடன் வரும் டாக்டர் பற்றிய விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பார். அதிகமாக வெளிநாடு சென்று திரும்பும் டாக்டர்கள் போட்டோவுடன் கூடிய விளம்பரங்கள் தான் இருக்கும்.
01.01.09 அன்று தினத்தந்தியில் ஒரு டாக்டர் போட்டோ செய்தி வந்திருந்தது. டாக்டர் பேரைப் பார்த்தார் முனியப்பன். டாக்டர் அப்துல் சுபான் என்றிருந்தது. மேலே வபாத்தானார் என்றிருந்தது. அதிர்ச்சியடைந்த முனியப்பன் விளம்பரத்தின் கீழே பார்த்தார். Dr. நர்கீஸ் பானு என்றிருந்தது. உடனே ஆத்தூரில் இருக்கும் Dr. முத்துக் கிருஷ்ணனை தொடர்பு கொண்டார் முனியப்பன்.
மஞ்சள் காமாலையால் Dr. அப்துல் சுபான் மரணத்தைத் தழுவியதாகவும், முதல்நாளே இறுதிச் சடங்குகள் முடிந்ததாகவும், திருச்செந்தூர் கிளை (IMA) இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்குகொண்டதாகவும், Dr. முத்துக் கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.
முஸ்லீம் மதமாதலால் கணவனை இழந்த பெண்கள் 40 நாட்கள் ஆண்களை பார்க்கக் கூடாது என்ற தகவலும் முனியப்பனுக்குக் கிடைத்தது. 14.01.09ல் முனியப்பன் தன் தங்கை, தங்கை கணவர், தங்கை பிள்ளைகளுடன் காயல்பட்டினம் சென்றார். அவருக்கு வியப்பான விஷயம் அங்கு காத்திருந்தது. Dr. நர்கீஸ் பானு ஆலோசனை அறையில் பெண் நோயாளிகளுக்கு மட்டும் அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகச் சொன்னார்கள். முனியப்பனின் தங்கை Dr. நர்கீஸ் பானுவைச் சந்தித்துத் துக்கம் விசாரித்து விட்டு வந்தார்.
முனியப்பனுடைய தங்கையிடம் Dr. நர்கீஸ் பானு அவருடைய கணவர் Dr. அப்துல் சுபானின் தங்கை கணவர் மாடியில் இருப்பதாகவும், முனியப்பனை அவரைச் சந்தித்து விட்டு போகச்சொன்னார். Dr. அப்துல் சுபானின் மைத்துனரை அனைவரும் சந்தித்தனர்.
Dr. நர்கீஸ் பானுவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் பையன் இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இரண்டாவது பையன் பிளஸ் டூவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேரும் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில், அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்ற நேரம். இந்த நேரத்தில் கணவரின் மறைவு Dr. நர்கீஸ் பானுவை எந்த அளவு பாதித்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
கணவர் இறந்த பத்து நாட்களில், அவர்களுடைய நோயாளிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்திற்காகவும், ஆலோசனை அறையில் அமர்ந்த Dr.நர்கீஸ் பானு வீரப்பெண்களின் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.
Monday, January 26, 2009
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)
என்ன பித்தளயக் குடுக்கறீங்க ..... ?
நம்ம முனியப்பனோட பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார். வெளிஉலகம் அதிகம் பார்த்திராதவர். பெயர் சண்முக வள்ளி. வள்ளி ஜோக்ஸ்ன்னு சொல்லி ஒரு புக் போடலாம். அந்தளவுக்கு திடீர் ஜோக்ஸ். முனியப்பன் கிளினிக்ல டெட்பாடிக்குப் பல்ஸ் பார்த்தாரே அவரே தான். நோயாளிகளை ஒழுங்கா பாத்திருவார். அதுல correct.
முனியப்பன் cell phoneஅ சார்ஜ் போட வயரை சொருகிருவார் வள்ளி, ஆனா switchஅ ஆன் பண்ண மாட்டார். இந்த மாதிரி எதாவது செஞ்சி சிரிக்க வச்சிருவார்.
இப்ப, அவர் வீட்டுக்காரருக்கு ஒரு பேங்க் செக் குடுக்குறாங்க. அவர் அதை மாத்த நேரமில்லாம என்ன செய்றாரு; நம்ம வள்ளிக்கிட்ட குடுத்து "பேங்க்ல போய் செக்கக் குடுத்து ரூவா வா புள்ள"ன்னு சொல்லிர்றார். வள்ளிக்கு பேங்க் நடைமுறைலாம் தெரியாது. வள்ளி நேரா கிளம்பி பேங்க்ல போய் செக்கக் குடுக்குறாங்க. அந்த பேங்க் காலைல 8 மணியிலிருந்து சாயங்காலம் 8 மணி வரை உள்ள பேங்க். வள்ளி அங்க போன டைம், மாலை 4.30 மணிக்கு. செக்ல வள்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு பித்தளை token குடுக்கிறாங்க.
வள்ளிக்கு அதிர்ச்சியாயிருது. என்னடா நம்ம செக்கக் குடுத்தோம், இந்த ஆளு ரூவா குடுக்காம என்னத்தயோ குடுக்குறாரு. ஒடனே செக்க பேங்க்ல யார்கிட்ட குடுத்தாரோ அவர்கிட்ட நேராவே கேட்டுர்றாரு. "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க?". பேங்க் ஊழியர் அசந்துர்றார். "திருப்பி ஒரு தடவை சொல்லுங்க"ன்னு வள்ளியக் கேக்குறார். வள்ளி டென்ஷன்ல இருக்காங்கள்ல, மறுபடியும் ஒருதட்வை அதே மாதிரி "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க"ன்றார். வள்ளிக்கு 'Voice Box' லவுட் ஸ்பீக்கர் மாதிரி. அவுங்க சொல்றது பேங்க்ல வேல பாக்குற எல்லாத்துக்கும் கேக்குது. பேங்க்ல கூட்டம் வேற இல்லையா, பேங்க்ல உள்ள எல்லாரும் அவங்களை மறந்து சிரிச்சுர்றாங்க.
"பேங்க்ல குடுத்தது token, அது உள்ள நம்பர் படி கூப்பிடுவாங்க. அப்ப cash counterல ரூவா தருவாங்க"ன்னு வள்ளிக்குச் சொல்லிக் குடுக்குறாங்க. அதுபடி வள்ளி ரூவாய வாங்கிட்டு வர்றாங்க.
சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.
நம்ம முனியப்பனோட பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார். வெளிஉலகம் அதிகம் பார்த்திராதவர். பெயர் சண்முக வள்ளி. வள்ளி ஜோக்ஸ்ன்னு சொல்லி ஒரு புக் போடலாம். அந்தளவுக்கு திடீர் ஜோக்ஸ். முனியப்பன் கிளினிக்ல டெட்பாடிக்குப் பல்ஸ் பார்த்தாரே அவரே தான். நோயாளிகளை ஒழுங்கா பாத்திருவார். அதுல correct.
முனியப்பன் cell phoneஅ சார்ஜ் போட வயரை சொருகிருவார் வள்ளி, ஆனா switchஅ ஆன் பண்ண மாட்டார். இந்த மாதிரி எதாவது செஞ்சி சிரிக்க வச்சிருவார்.
இப்ப, அவர் வீட்டுக்காரருக்கு ஒரு பேங்க் செக் குடுக்குறாங்க. அவர் அதை மாத்த நேரமில்லாம என்ன செய்றாரு; நம்ம வள்ளிக்கிட்ட குடுத்து "பேங்க்ல போய் செக்கக் குடுத்து ரூவா வா புள்ள"ன்னு சொல்லிர்றார். வள்ளிக்கு பேங்க் நடைமுறைலாம் தெரியாது. வள்ளி நேரா கிளம்பி பேங்க்ல போய் செக்கக் குடுக்குறாங்க. அந்த பேங்க் காலைல 8 மணியிலிருந்து சாயங்காலம் 8 மணி வரை உள்ள பேங்க். வள்ளி அங்க போன டைம், மாலை 4.30 மணிக்கு. செக்ல வள்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு பித்தளை token குடுக்கிறாங்க.
வள்ளிக்கு அதிர்ச்சியாயிருது. என்னடா நம்ம செக்கக் குடுத்தோம், இந்த ஆளு ரூவா குடுக்காம என்னத்தயோ குடுக்குறாரு. ஒடனே செக்க பேங்க்ல யார்கிட்ட குடுத்தாரோ அவர்கிட்ட நேராவே கேட்டுர்றாரு. "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க?". பேங்க் ஊழியர் அசந்துர்றார். "திருப்பி ஒரு தடவை சொல்லுங்க"ன்னு வள்ளியக் கேக்குறார். வள்ளி டென்ஷன்ல இருக்காங்கள்ல, மறுபடியும் ஒருதட்வை அதே மாதிரி "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க"ன்றார். வள்ளிக்கு 'Voice Box' லவுட் ஸ்பீக்கர் மாதிரி. அவுங்க சொல்றது பேங்க்ல வேல பாக்குற எல்லாத்துக்கும் கேக்குது. பேங்க்ல கூட்டம் வேற இல்லையா, பேங்க்ல உள்ள எல்லாரும் அவங்களை மறந்து சிரிச்சுர்றாங்க.
"பேங்க்ல குடுத்தது token, அது உள்ள நம்பர் படி கூப்பிடுவாங்க. அப்ப cash counterல ரூவா தருவாங்க"ன்னு வள்ளிக்குச் சொல்லிக் குடுக்குறாங்க. அதுபடி வள்ளி ரூவாய வாங்கிட்டு வர்றாங்க.
சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.
Case Sheet
காயங்களும் காரணங்களும்
முனியப்பன்கிட்ட அடிபட்டு காயத்தோட வைத்தியத்துக்கு வர்றவங்களும் உண்டு. சைக்கிள், Two wheeler accidentனா ஒடம்பெல்லாம் சிராய்ப்பு இருக்கும். எலும்பு முறிவு இருக்கலாம். சைக்கிள், Two wheelerல இருந்து skid ஆகி வருவாங்க.
பல் பட்ருச்சு, பாய்ஸன் ஆகாம ஊசி போடுங்கன்னு வருவாங்க. சின்னப் பிள்ளைக அடுத்த பிள்ளைய கடிச்சு வச்சிரும். நம்மாளுக, சண்டையில அடுத்தவனை கடிச்சு வச்சிருவாங்க.
சின்னப் பிள்ளைக சைக்கிள்ல ஒக்காந்து போகும் போது சைக்கிளுக்குள்ள, காலை விட்ரும். எலும்பு முறிவு ஆகாது. இரத்தக்காயம் தான் இருக்கும். புண் முழுசா ஆற 21 நாள்ல இருந்து 42 நாள் வரைக்கும் ஆகும். சைக்கிள், two wheeler ஓட்டிப் பழகும் போது விழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வருவாங்க.
வேல பாக்குற எடத்துல மேலே இருந்து கீழே வந்துருவாங்க. மெஷினுக்குள்ள கைய விட்ருவாங்க. காயம் வெரலக் கேட்ரும், இல்ல சும்மா லேசான கட்டா இருக்கும். இதெல்லாம் வழக்கமா நடக்குறது தான்.
புருஷன் பொண்டாட்டி சண்டைல கெளப்பிருவாங்க. சண்டைல காயமாயிரும். வைத்தியத்துக்கு வர்றவங்க முட்டிட்டேன், இரும்பு சாமான் விழுந்துருச்சு அப்படின்னு எதாவது பொய்க்காரணம் சொல்வாங்க. புருஷன் அடிச்சு மூஞ்சியெல்லாம் வீங்கி ரத்தம் கன்னிப்போயிருக்கும் (contusion), உண்மையச் சொல்ல மாட்டாங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. நம்மளா புரிஞ்சிக்கிட வேண்டியது தான். முனியப்பன் service ஆன ஆளு இல்லையா, பாத்த ஒடனே என்ன நடந்திருக்கும்னு தெரியும். வைத்தியத்தை மட்டும் பாத்து அனுப்பி வச்சிருவார்.
உண்மையான காரணத்தைச் சொல்லாம செத்துப்போன ஒரு நோயாளிய முனியப்பன் இன்னைக்கும் மறக்க முடியாம இருக்கார்.
10 வருஷத்துக்கு முன்னால முனியப்பனுக்கு நல்லா தெரிஞ்சவர் ஒருத்தர், ஒரு நோயாளியக் கூப்பிட்டு வந்தார். "கார் ஓட்டும் போது sudden brake போட்டதுல steering wheel வயித்துல இடிச்சுருச்சு, வயிறு வலிக்குது பாருங்கன்னார்." நோயாளி வாயத் திறக்க மாட்டேங்கறான். முனியப்பன் அவனப் படுக்க வச்சு பரிசோதிக்கிறார். வயித்தை எங்க தொட்டாலும் கல்லு கணக்கா இருக்கு (Abdominal Rigidity). வயித்துக்கு x - ray, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் முனியப்பன். Plain x ray. Abdomenல Air under diaphragm. ஸ்கேன்ல intra abdominal haemorrage. ஒடனே மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த நோயாளிய அனுப்பி வைக்கிறார். அங்க ஒடனே அவசர அறுவை சிகிச்சை பண்றாங்க, ரத்தம் ஏத்துறாங்க. நோயாளி தீவிர சிகிச்சை பண்ணியும் பலன் இல்லாம 2 நாள்ல இறந்துர்றான்.
அந்த நோயாளியக் கூப்பிட்டு வந்தவர், அவரோட சேந்தவங்க எல்லாம் அந்த treatment சம்பந்தமான record எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்திர்றாங்க. அவனுக்கு வயித்துல இரத்தம் கசிஞ்சதுக்குக் காரணம், இவங்க அவனை ஊமை அடியா அடிச்சது தான். நோயாளியும் இவங்களுக்குச் சாதகமா கடைசில சாகிற வரைக்கும் வாயால எதையும் சொல்லாம செத்துப் போய்ட்டான்.
இன்னும் காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை நடைமுறையில் உள்ளது. மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?
முனியப்பன்கிட்ட அடிபட்டு காயத்தோட வைத்தியத்துக்கு வர்றவங்களும் உண்டு. சைக்கிள், Two wheeler accidentனா ஒடம்பெல்லாம் சிராய்ப்பு இருக்கும். எலும்பு முறிவு இருக்கலாம். சைக்கிள், Two wheelerல இருந்து skid ஆகி வருவாங்க.
பல் பட்ருச்சு, பாய்ஸன் ஆகாம ஊசி போடுங்கன்னு வருவாங்க. சின்னப் பிள்ளைக அடுத்த பிள்ளைய கடிச்சு வச்சிரும். நம்மாளுக, சண்டையில அடுத்தவனை கடிச்சு வச்சிருவாங்க.
சின்னப் பிள்ளைக சைக்கிள்ல ஒக்காந்து போகும் போது சைக்கிளுக்குள்ள, காலை விட்ரும். எலும்பு முறிவு ஆகாது. இரத்தக்காயம் தான் இருக்கும். புண் முழுசா ஆற 21 நாள்ல இருந்து 42 நாள் வரைக்கும் ஆகும். சைக்கிள், two wheeler ஓட்டிப் பழகும் போது விழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வருவாங்க.
வேல பாக்குற எடத்துல மேலே இருந்து கீழே வந்துருவாங்க. மெஷினுக்குள்ள கைய விட்ருவாங்க. காயம் வெரலக் கேட்ரும், இல்ல சும்மா லேசான கட்டா இருக்கும். இதெல்லாம் வழக்கமா நடக்குறது தான்.
புருஷன் பொண்டாட்டி சண்டைல கெளப்பிருவாங்க. சண்டைல காயமாயிரும். வைத்தியத்துக்கு வர்றவங்க முட்டிட்டேன், இரும்பு சாமான் விழுந்துருச்சு அப்படின்னு எதாவது பொய்க்காரணம் சொல்வாங்க. புருஷன் அடிச்சு மூஞ்சியெல்லாம் வீங்கி ரத்தம் கன்னிப்போயிருக்கும் (contusion), உண்மையச் சொல்ல மாட்டாங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. நம்மளா புரிஞ்சிக்கிட வேண்டியது தான். முனியப்பன் service ஆன ஆளு இல்லையா, பாத்த ஒடனே என்ன நடந்திருக்கும்னு தெரியும். வைத்தியத்தை மட்டும் பாத்து அனுப்பி வச்சிருவார்.
உண்மையான காரணத்தைச் சொல்லாம செத்துப்போன ஒரு நோயாளிய முனியப்பன் இன்னைக்கும் மறக்க முடியாம இருக்கார்.
10 வருஷத்துக்கு முன்னால முனியப்பனுக்கு நல்லா தெரிஞ்சவர் ஒருத்தர், ஒரு நோயாளியக் கூப்பிட்டு வந்தார். "கார் ஓட்டும் போது sudden brake போட்டதுல steering wheel வயித்துல இடிச்சுருச்சு, வயிறு வலிக்குது பாருங்கன்னார்." நோயாளி வாயத் திறக்க மாட்டேங்கறான். முனியப்பன் அவனப் படுக்க வச்சு பரிசோதிக்கிறார். வயித்தை எங்க தொட்டாலும் கல்லு கணக்கா இருக்கு (Abdominal Rigidity). வயித்துக்கு x - ray, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் முனியப்பன். Plain x ray. Abdomenல Air under diaphragm. ஸ்கேன்ல intra abdominal haemorrage. ஒடனே மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த நோயாளிய அனுப்பி வைக்கிறார். அங்க ஒடனே அவசர அறுவை சிகிச்சை பண்றாங்க, ரத்தம் ஏத்துறாங்க. நோயாளி தீவிர சிகிச்சை பண்ணியும் பலன் இல்லாம 2 நாள்ல இறந்துர்றான்.
அந்த நோயாளியக் கூப்பிட்டு வந்தவர், அவரோட சேந்தவங்க எல்லாம் அந்த treatment சம்பந்தமான record எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்திர்றாங்க. அவனுக்கு வயித்துல இரத்தம் கசிஞ்சதுக்குக் காரணம், இவங்க அவனை ஊமை அடியா அடிச்சது தான். நோயாளியும் இவங்களுக்குச் சாதகமா கடைசில சாகிற வரைக்கும் வாயால எதையும் சொல்லாம செத்துப் போய்ட்டான்.
இன்னும் காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை நடைமுறையில் உள்ளது. மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?
Subscribe to:
Posts (Atom)
