Thursday, August 26, 2010

எனக்கு என்ன Benefit?

முனியப்பனின் மிகவும் close ஆன நண்பர் "A".

"A" க்கு திருமணம் ஆனதிலிருந்தே அவர் மனைவியிடம் ஒத்துப் போகவில்லை. அப்படியிருக்கும் இல்வாழ்க்கையால் Aன் மனைவி தாய்மைப் போறு அடைந்தார். அவர் மனைவி நிறை மாதமாக இருக்கும் பொழுது Aன் மனைவி சொந்தங்கள் வீட்டிற்கு வந்து Aஐ தாக்கி A ன் மனைவியுடன் சென்று விட்டனர்.

A விட்டது சனியன் என்று சந்தோஷமாயிட்டார். 15 நாள் கழித்து Aக்கு ஒரு டெலிகிராம். பையன் பொறந்திருக்கான்னு. ஊருக்கு போன Aன் மனைவி தான் எங்க இருக்கேன்னு எந்த தகவலும் குடுக்கல. மொட்டையா ஒரு தந்தி. A எப்படி போவார்? ஆனாலும் மகன் பொறந்த சந்தோஷத்தை அக்கம் பக்கத்தில உள்ளவங்களுக்கு சந்தோஷமா சாக்லேட் குடுத்து அசத்திட்டார். 3 வருஷம் A க்கும் அவர் மனைவிக்கும் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லாம ஓடிருச்சு.தேவை இல்லாத வேலையை செய்ற முனியப்பளை மாதிரி நட்பு வட்டம் Aஐ அவர் மனைவியோட சேர்த்து வைக்கம் முயற்சில எறங்குறாங். No use.3 வருஷம் கழிச்சி பையன பாக்க A கெளம்பி போனார். போன எடத்துல ஒருத்தன் 'இங்க யாராவது வந்தீங்க கொலை விழுகும்' அப்படிங்கவும் A வம்ப வளக்காம வந்துட்டார். முனியப்பன் Aன் மனைவி தொலைபேசி நம்பர வாங்கி Aகிட்ட குடுத்து அவங்க ரெண்டு பேரயும் பேச விட்டார்.
பேசினாங்க. போன்லயும் சண்டை.அந்தம்மா சரிக்க வரல. மகன் குரல, 3 வயசு பையன் குரல, போன்ல கேட்டு சந்தோஷப்பட்டுக்குவார் A. அந்த போன் சந்தோஷத்துக்கும் வேட்டு வச்சுட்டாங்க. Aன் மனைவி அந்த எடத்த விட்டு பையனோட கெளம்பி போய்ட்டாங்க. போனவங்க போனவங்கதான் . எங்க இருக்காங்கன்னு ஒரு தகவலும் இல்லை.
Aன் அப்பாவும் அம்மாவும் மனசு ரொம்ப ஒடைஞ்சுட்டாங்க என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்னு புலம்பிகிட்டிருந்த A யின் அப்பா, புலம்பிகிட்டே போய்ச் சேந்துர்றார்.
Aன் அம்மா நல்லா விசாரிக்காம கல்யாணத்தை பண்ணி வச்சிட்டேனே ன்னு புலம்பிட்டிருந்தாங்க.

A மறுபடி கல்யாணம் பண்ணாம தானுண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கார். இப்படியே 10 வருஷம் ஓடுது. Aன் மனைவி, A கூட வாழவும் வரல, பிள்ளையவும் Aகிட்ட காமிக்கல. அந்தம்மாவும் மறு கல்யாணம் பண்ணலை. ரெண்டு பேரும் கோர்ட்டு கேசுன்னு அலையல.
முனியப்பன் மருத்துவரில்லையா அவர்கிட்ட வந்ந ஒரு நோயாளி Aன் மனைவி இருக்கும்
எடத்தையும் போன் நம்பரையும் குடுக்கிறார். அந்த நோயாளி Aன் மனைவியோட சொந்தக்காரர். முனியப்பன் Aயின் மனைவியுடன் பேசிப்பாக்குறார். அந்தம்மா பிடி கொடுக்கல, Aகிட்ட போன் நம்பர முனியப்பன் குடுக்கிறார். Aக்கு மறுபடி ஒரு சந்தோஷம். போன் பண்றார்.பையன் லைன்ல வந்தா பேசுவார். வேற யாராவது போனை எடுத்தா, அவங்களே வச்சிருவாங்க. அப்புறம் அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. Lane line cut.

அப்புறம் ஒரு 10 வருஷம் ஓடிருது. நோயாளி சொந்தக்காரர் முனியப்பன்கிட்ட Aயின் பையன்
Engineering படிக்கிறத சொல்வார். 1st Year final year ஆகி பிள்ளையாண்டான் Campus interview ல select ஆயிர்றான்.நோயாளி சொந்தக்காரர் Aன் மனைவியிடம் முனியப்பன் தொடர்பு எண்ணைக் குடுக்கிறார். Aன் மனைவி முனியப்பனிடம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு A கூட Aயின் பையன் பேசுவான் அப்படிங்கிறாங்க.20 வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. பையன் பேசப் போறான். அப்படின்ன A மனசுல ஒரு சந்தோஷம். கரெக்டா ஒரு வருஷம் கழிச்சி Aன் மனைவி முனியப்பன்கிட்ட பேசி ஒரு நம்பர் குடுத்து 'இது பையன் நம்பர், அவரை பேசச் சொல்லுங்கன்னு சொன்ன உடனே, முனியப்பன் Aகிட்ட அந்த நம்பரை
குடுத்துர்றார்'

A மகன்கிட்ட பேசப் போறோம்னு சந்தோஷத்துல நம்பரை தட்டுறா¡. பையன் எடுக்கிறான். "22 வருஷமா நானா மேனேஜ் பண்ணியிருக்கேன், ஒங்க கூட பேசினா எனக்கு என்ன Benefit?". Aக்கு சாட்டையால் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. முனியப்பன்கிட்ட வந்து அழுதார். ஆறுதல் சொல்லி 1 வாரத்துக்கு தூக்க மாத்திரையும் குடுத்து அனுப்பி விட்டார் முனியப்பன்.
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்த A. அவர் மனைவி, கணவனை தெருவில விட்டுட்டு, பிள்ளையவும் தகப்பனை பாக்காம வளத்து, இப்படி ஒரு கேள்வி கேக்குற மாதிரி வளத்துருக்காங்க. Aயின் மனைவிய மனநோயாளிங்கிறதா?, திமிர் பிடிச்சவங்கிறதா?. கல் நெஞ்சம்கிறதா?

A நடை சோர்ந்து போய் விரக்தியாய் இருக்கார். ஆனாலும் இன்னும் அவர் பையன் அவர்கிட்ட வருவான்னு நம்பிக்கையை மட்டும் இழக்காம நாட்களை நகட்டிகிட்டு இருக்கார்.
காலம் Aக்கு ஒரு நல்ல தகவல் சொல்லட்டும்.

Sunday, August 22, 2010

உனக்கு ரெண்டு மூஞ்சி - அஷீ

டேய் குட்டிப் பையான்னு முனியப்பனை கூப்பிடும் அஷீக்குட்டி ஒரு ஜோக் குட்டி.

இப்படிதான் ஒரு நாளு அஷீக்குட்டிக்கு முதுகு அரிக்குது. முதுக சொரிஞ்சு விட சிக்குனது முனியப்பன்தான். அஷீக்குட்ட முதுக சொரிஞ்சுவிட்ட முனியப்பன் கைய எடுத்துர்றார். ஒடனே அஷீக்குட்டி "சொரிஞ்சு விட்டுகிட்டே இருடா" ங்கவும் ஒரே சிரிப்பு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் school லீவுங்கறதால அஷீ , அமர், முனியப்பன் மூணு பேரும் இளநீ குடிக்க போவாங்க. அஷீ ரொம்ப slow வாத்தான், அதுவும் ரசிச்சு எளநீ குடிக்கிற ஆளு. முனியப்பன் " என்ன ஒரு மணி நேரமா எளநீ குடிக்கிற" அப்படின்னா, "10 மணி நேரம் குடிப்பேன்" ஒரே அடியா போட்ருவார்.ஒரு நாள் லீவு time. அஷீவும், அமரும் ஓடிப்பிடிச்சு வெளையாண்டுக்கிட்டிருக்காங்க.மதிய நேரம். முனியப்பன் ஓய்வு எடுக்கிற நேரம், முனியப்பன் படுத்து கெடக்கிறார். திரு திருன்னு ஓடி வந்த அஷீக்குட்டி முனியப்பன் கூட தானும் படுத்து ஒரு Bed sheet அ எடுத்து முனியப்பனையும் சேத்து பொத்தி படுத்துட்டார். பெறகு "அண்ணன் வருவான், ஒனக்கு ரெண்டு மூஞ்சின்னு அவன்கிட்ட சொல்லிருன்னு சொல்லிட்டார் இப்ப முனியப்பன், அஷீ மூஞ்சி மட்டும் தெரியுது."பின்னாலயே அமர் வந்துட்டார். "அஷீ வந்தானா" "இல்ல" "அப்ப ரெண்டு
மூஞ்சி இருக்கு" "எனக்கு ரெண்டு மூஞ்சி" "ok" அப்படின்னு சொல்லிட்டு அமர் போயிர்றார். அஷீவும் முனியப்பனும் பேசாம படுத்துக் கெடக்காங்க. அமர் திரும்பி வர்றார். அதே கேள்வி, அதே பதில். இதே மாதிரி 2 தடவைக்கு அப்புறம் கட்டில்ல ஏறி பெட்ஷீட்டை தூக்கி அமர் "இந்தா இருக்கான்டா" ன்னு சொல்லவும் , அஷீ எந்திரிச்சு ஓட, அமர் பின்னால வெரட்டிக்கிட்டு ஓட, அவங்க வெளையாட்டு தொடருது. டேய் வாடா போடாங்கிறது அன்பின் மிகுதி.

Saturday, August 14, 2010

ஜீவா - சுடர்

முனியப்பன் படிக்கும் போது +2 கிடையாது. P.U.C தான் டாக்டருக்கு படிக்கனும்கிறதால 10th ,11th அப்புறம் PUCல Science group படிச்சார் முனியப்பன். 3 வருஷமும் Hostel வாழ்க்கை. அப்ப 11th ஸ்கூல்ல, PUC காலேஜ்ல. இந்த வருஷமும் முனியப்பன் கூட படிச்சவர் ராஜசேகர். இப்ப ராஜசேகர் சுரான்னு பேர வச்சுகிட்டு சென்னைல இருக்கார். சுரா ஒரு பத்திரிக்கையாளர் சினிமால PROவா இருக்கார். சுரா எழுத்தாளர் வட்டத்துல இருக்கதால எதையாவது எழுதிகிட்டே இருப்பார்.

திடீர்னு ஒரு நாள் சுரா முனியப்பனை கூப்பிடுறார் cellல. நம்ம கூட படிச்சவரு, ஜீவான்னு
பேரு, பக்கத்துலதான் இருக்கார், நீ பேசுன்னு ஜீவாவ Connect பண்ணிவிடுறார் சுரா. முனியப்பனும், ஜீவாவும் செல் போன்ல பேசுறாங்க .37 வருஷத்துக்கு முன்னால படிச்ச PUC வாழ்க்கை ரெண்டு பேரும் பேசி, நேர்ல சந்திச்சா ஞாபகம் வரும்னு ஒரு முடிவுக்கு வர்றா¡ங்க. ஜீவாவும் ஒரு பத்திரிக்கையாளர். தினமணி தமிழ் நாளிதழ், வார இதழ்ல
அவரோட பங்கு உண்டு. ஜீவா முனியப்பனை நல்லெண்ண தேச்சு Oil bath எடுக்கறத பத்தி பேட்டி எடுக்கணும்கிறார். முனியப்பனும் சரின்னு 3 நாள் time கேட்டார். அந்த 3 நாள்ல முனியப்பன் தன்னோட சொந்த oil bath அனுபவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவரோட கருத்து, சித்த மருத்துவர் BSMS கருத்து, பரம்பரை சித்த வைத்தியர் கருத்து, சிகை அலங்கார நிபுணர் (Hair dresser) மசாஜ் நிபுணர் கருத்து, எல்லாத்தையும் சேகரிச்சு, மேட்டர் ரெடி பண்ணிர்றார். 13-07-10ல ஜீவா முனியப்பனை தினமணிக்காக பேட்டி எடுக்கிறார். 4 நாள் கழிச்சு ஜீவாகிட்டருந்து போன் "மகளுக்கு Hemoglobin % 4gm, Hospitalல admit பண்ணியிருக்கேன்" அப்படின்னு. முனியப்பன் ஜீவாவ மகள நல்ல பாத்துகிட சொல்லிர்றார். இது 17-07-10.

2 நாள் கழிச்சு முனியப்பன் ஜீவாவுக்கு போன் பண்ணி கேட்குறப்ப ஜீவா சொல்றார். ப்ளட்ல urea லெவல் கூடிருச்சு, டயாலிஸிஸ் பண்றாங்கன்னு.Urea லெவல் 300. நார்மல் 50குள்ளதான் இருக்கனும். முனியப்பனுக்கு புரிஞ்சு போச்சு.ஜீவாவோட மகளுக்கு கிட்னி(ARF) பெய்லியர். முனியப்பன் ஜீவாகிட்ட kidneyதான் மாத்தனும்" அப்படின்னு சொல்லிர்றார். ஒரு 4 நாள் ஜீவாவும் பேசல, முனியப்பனும் பேசலை. முனியப்பனுக்கு மனசுக்குள்ள ஒரே கவ¨ல் நண்பனோட 23 வயசு மகளுக்கு இப்படி ஆயிருச்சேன்னு. நண்பனை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் முனியப்பன் 4 நாள் பேசலை.

26ந்தேதி முனியப்பன் ஜீவாவை கூப்படுறார்."மக நேத்து இறந்திருச்சின்னு" ஜீவா சொல்லவும் முனியப்பனுக்கு ஷாக். சுராகிட்ட பேசினப்ப, சுரா சொன்ன விஷயங்கள் ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஜீவாவுக்கு 3 பெண் குழந்தைகள். அதுல மூத்த பெண்ணுதான் இறந்தது.
வயசு 23. படிப்பு M.A,Bed. படிச்சு முடிச்சு வேல கெடைச்சு ஏற்காட்ல
teacher வேல 2 மாசம் பாத்திருக்கு. ஒரு மாச சம்பளம் வாங்கியிருக்கு.

11.07.10ல ஜீவாவும் , அவர் மனைவியும் மகள பாக்க ஏற்காடு போயிருக்கங்க, போட்டோ எல்லாம் மகளோட சேந்து எடுத்திருக்காங்க.11.07.10ல நல்லா
இருந்த பொண்ணு 25.07.10ல No more.

"இறந்த பொண்ண பாத்தேன், சிரிக்சுகிட்டே உயிரோட இருக்க மாதிரி இருந்துச்சு"ன்னு சுரா
சொல்லவும் முனியப்பனுக்கு மனசு கஷ்டமாயிருச்சு. ஜீவாவ நேர்ல பாக்கணும்னு, இன்னம் 2 வேலய சென்னைல சேத்து வச்சுகிட்டு 31-07-10 ல ஜீவா வீட்டுக்கு போறார்
முனியப்பன். வெளிய இரங்கல் போஸ்டர்ல சுடர்னு ஜீவா மக பேர். ஜீவா சொல்ல சொல்ல முனியப்பன் கண்ணு குளமாயிருச்சு. " வாழ வேண்டிய பொண்ணு போயிருச்சு வருத்தப்படாதீங்க. மனச தேத்திக்குங்க" னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியும்?
ஜீவா மகளோட 11-07-10ல எடுத்த போட்டோவ cell phone ல காமிக்கிறார். இன்னம் வேதனையாகுது.

சுடர் - குடும்பச் சுடரா இருக்க வேண்டிய பொண்ணு தெய்வச் சுடராயிட்டா.

Sunday, August 8, 2010

தினமணியில் முனியப்பன்



Saturday, August 7, 2010

தினமணியில் முனியப்பன்

8-8-2010 அன்று தினமணியின் துணை இதழில் முனியப்பன் பக்கங்கள் பற்றிய கட்டுரை வெளி வர இருக்கிறது.

Thursday, July 29, 2010

ஒரிஜினல் முனியப்பன்


முனியப்பன்கிற புனை பேர்ல எழுதறது ஒரு கவர்ச்சிக்குத்தான். அப்ப முனியப்பன்!

தென் மாவட்டத்துக்கே உள்ள அடாதுடி நடவடிக்கை, மொரட்டுத்தனம், பேச்சு, மீசை உள்ளவர் ஒரிஜினல்.நம்ம முனியப்பனும் அதே மொரட்டு பகுதிங்கறதால மொரட்டுத்தனத்துல ஊறினவர். ஒரிஜினலும், நம்ம ஆளும் ஒரே பூமிங்கறதால நட்பு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.

ஒரிஜினல் மதுரைல ஒரு பிரபல மூன்றெழுத்து கம்பெனியோட ரப்பர் பேக்டரில வேலை பாத்ததாலயும் மிகுதியான புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாலயும் சுவாசக் குறைபாடு COPD உள்ளவர். முனியப்பன் சிகரட் குடிக்காதய்யான்னு சொன்னா ஒரிஜினல் கேக்க மாட்டார்.

ஒரிஜினல் அப்பப்ப டூவீலர்லருந்து skid ஆகி கீழ விமுந்து எந்திரிக்கிறவர் . Hero honda பவுச்ல ஒரு துணி ரெடியா இருக்கும்காயத்துக்கு கட்டுப்போடத்தான். ஒரு தடவை திருமங்கலம் போய்ட்டு வர்ற்ப்ப நாய் குறுக்க ஓடுனதுல ஒரிஜினல் கீழ விமுந்து வேற இடத்தல அட்மிட் ஆயிட்டார்.

ஒதட்டுக்கு மேல காயம், மீசைல gap விழுந்துருச்சு. கண்ணாடில பாத்தா பாதி மீசய காணோம். ஒரிஜினல பாக்கப் போன நம்ம முனியப்பன்கிட்ட மீசை இல்லைன்னா தொங்கிருவேன்னு சொல்லி பயமுறுத்திட்டார். முனியப்பன் அவர அந்த ஆஸ்பத்திரிலருந்து கடத்திட்டு தன்னோட எடத்துக்கு கூப்பிட்டு வந்து மீசையை சரிபண்ணி விட்டார். பழயபடி மீசை வந்த ஒடனே கூடக் கொஞ்சம் அட்டாச் ஆயிட்டார் ஒரிஜினல்.

முனியப்பனுக்கு இதயத்துல ஒரு சிக்கல் வந்து அதுக்காக சென்னைல ஒரு opinion வாங்கப் போனார். ஒரிஜினல் முனியப்பனும் கூடவே போனார். ரெண்டு பேரும் சென்னைல ஒரு heart டாக்டர்கிட்ட போனாங்க. மொதல்ல ஒரிஜினல் தன்னோட COPD பிரச்சினைய consult பண்ணார்,
வெளிய போய்ட்டார். நம்ம முனியப்பன் தன்னோட consulting முடிச்சுட்டு வெளிய வந்தார். ஒரிஜினலை காணோம். முனியப்பன் கூட வந்த திருப்பதி, கார் டிரைவர் எல்லாரும் ஒரிஜினலை தேட ஆரம்பிச்சாங்க. Hospitalல எல்லா floor லயும், கீழ பார்க்கிங்லயும் தேடுனாங்க, ஒரிஜினல் சிக்கல. செல் போன்லயும் கெடைக்கல. கடைசில அந்த ஆஸ்பத்திரில ஒரு பெட்ல இருந்து ஒரு கை ஆடுது, என்னன்னு பார்த்தா முனியப்பனை ஒரிஜினல் கைய ஆட்டி கூப்பிடுகிறார். ஒரிஜினலை பெட்ல படுக்கப்போட்டு மூக்கு மேல netilaizer (நெடிலைசர்)அ வச்சு அமுக்கி வச்சதால ஒரிஜினலை கண்டு பிடிக்க முடியலை.

போன எடத்துல பாருங்க , நல்லா போன ஒரிஜினலை படுக்கப் போட்டு தேவையில்லாத வேலைய பாத்துட்டாங்க. அந்த hospital ல நெபுலைசரை பிடுங்கி போட்டுட்டு ஒரிஜினலும் முனியப்பனும் எஸ்கேப் ஆயிட்டங்க.

நம்ம முனியப்பனோட அறிவுரையை கிளீன்ஆ பாலோ பண்ணி சிகரட்ட விட்டுட்டார் ஒரிஜினல் முனியப்பன். இப்ப அவரோட COPD பிரச்சினை நல்லா இருக்கு, நல்லா மூச்சு விடமுடிகிறது அவரால.

தேவையில்லத சிகிச்சைகள் தவறான diognosis நெறய இருக்கு , பின்னால ஒரு பதிவுல வரும்.

Tuesday, July 20, 2010

தொழில் வேற நட்பு வேற

என்னதான் நட்பா close ஆக இருந்தாலும், தொழில்னு வரும் போது, அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையை குடுக்கனும். அப்பதான் தொழிலும் , நட்பும் நல்லா இருக்கும். இதுல முனியப்பனுக்கு நல்ல Roll Model அவர் அப்பா கு. வேலுசாமிதான்.

கு.வேலுசாமி பரமக்குடில குற்றவியல் நீதிபதியா பணியாற்றினப்ப அவரும், அந்த ஊர்ல வக்கீலா இருந்த உலக நாயகனோட அண்ணனும் சாயங்காலம் கோர்ட் முடிஞ்ச உடனே கோர்ட் காம்பவுண்ட்ல இருந்த டென்னிஸ் மைதானத்துல டென்னிஸ் வெளையாடுவாங்க. மொத நாள் சாயங்காலம் டென்னிஸ் வெளையாண்டிருப்பாங்க. அடுத்த நாள் காலைல கோர்ட்ல ஒலக நாயகன் வக்கீல் அண்ணனுக்கு எதிரான தீர்ப்பும் இருக்கும். நீதிக்கு முன்னால நட்பா?

எதிரான தீர்ப்பு வந்தாலும் அன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் சாயங்காலம் டென்னிஸ் வெளையாடுவாங்க.அது அவங்க நட்போட இலக்கணம்.

முனியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு ஒரு பள்ளி நண்பர். ரெண்டு பேரும் 2 வருஷம் மதுரைல ஒரு ஸ்கூல்ல வகுப்பு நண்பர்கள். வெள்ளைச்சாமி பின்னால மதுரைல Top Ten அரிசி ஆலை அதிபராயிர்றார். முனியப்பன் மருத்துவம் படிச்சிட்டு தொழில் ரீதியா மதுரைல வந்து செட்டில் ஆகுறார். முனியப்பன் ஸ்கூல்ல ஹாஸ்டல்ல இருந்து படிச்சவர். அதனால மதுரையில ஒண்னும் தெரியாது. முனியப்பன் மதுரைக்கு வந்த உடனே வெள்ளைச்சாமி நண்பனை பார்க்க வந்துர்றார். பழைய பள்ளி வகுப்பு நண்பர்களை அறிமுகப்படுத்தறார். அவங்க எல்லாரும் சேர்ந்து முனிபயப்பனுக்கு மதுரைல உள்ள இண்டு இடுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறாங்க.

முனியப்பன் அரிசி எங்க போய் வாங்குவார்? வெள்ளைச்சாமிகிட்டதான். முனியப்பன் அரிசி வாங்க நேரா போயிடுவார். முனியப்பனுக்கு அரிசிக்கான பில்லை போட்டு ரூபாய் வாங்கிட்டு, அரிசிய வெளிய எடுத்துட்டு போக கேட் பாஸ்ம் போடுவார் வெள்ளை சாமி. அரிசி மில்ல விட்டு அரிசிய கொண்டு போக கேட் பாஸ்.இது வெள்ளைச்சாமியின் சிஸ்டம். முனியப்பனுக்கும் அதேதான்.

தொழில் வேற நட்பு வேற.தொழில்னு வரும் போது என்னதான் நட்பா இருந்தாலும் ரெண்டுக்கும் எடைல ஒரு கோடு இருக்கனும்.முனியப்பனுக்கும் வெள்ளைச்சாமிக்கும் உள்ள நட்பின் வயது, ஜஸ்ட் 39 வருஷம்தான்.