ரொம்ப நாளாச்சா ....... ஹி ஹி
முனியப்பன் நோயாளிகளுடன் நன்றாகப் பழகக் கூடியவர். அதுனால அவர்கிட்ட பெர்ஸனல் விஷயங்களையும் சிலர் பேசுவாங்க.
அப்படி ஒருத்தர்தான் 60 வயசு நம்மாளு. இவரு ஒரு நாள் முனியப்பன் கிட்ட அசதிக்கு ஊசி போட வந்தார். ஊசி போடுறதுக்கு முன்னாடி சிரிச்சிக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சார். அவரு சம்சாரமும் பக்கத்துல இருக்காங்க. "நேத்து ராத்திரி தூக்கம் வரலயா ...... ரொம்ப நாளாச்சா ....." இன்னும் கொஞ்சம் சிரிச்சார். தன்னுடைய மனைவிகிட்ட, உறவு வச்சுக்கிட்டத சொல்லாமல் சொன்னார்.
எவ்வளவு நாகரீகமாக, இயற்கையான ஒரு விஷயத்தை, நம்மாளு சிம்பிளா சொன்னார் பாத்திகளா ..... ?
Monday, December 1, 2008
முனியப்பனின் அதிகாலை
விடியும் நேரம்
விழிப்பவன் முனியப்பன்
காலை எழுந்த உடன்
காபி காலைக் கடன்
புத்துணர்வுக்காக
புறப்படுவான் நடை பயிற்சிக்கு
விடிவதற்கு முன் கிளம்பினால்
விடிய ஆரம்பிக்கும் போது திரும்புவான்
பரபரப்பு இல்லா நேரத்தில்
பால்கேனுடன் பால் காரர்கள்
போக்குவரத்துக் கழக
பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்
வீட்டு வேலைக்குச் செல்லும்
வேலைக்கார மகளிர்
காய் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்
காய்கறி விற்கும் பெண்கள் கூடையுடன்
அதிகாலை இவர்களுக்கு மட்டுமா ......... ?
அதிவேகமாக ஓடும் விளையாட்டு வீரர்கள்
உடல் மெலிய நடப்பவர்கள்
உடல் வியாதிக்காக நடப்பவர்கள்
உடல் நலத்துக்காக நடப்பவர்கள்
உடல் உறுதிக்காக நடப்பவர்கள்
நடைபயிலும் பெருசுகளின்
நடைபாதை சாமி தரிசனம்
தொலைவில் இருக்கும் தொழிற்சாலைக்கு
காலையில் செல்லும் தொழிலாளர்கள்
மாணவர்கள் இல்லாத காலையா
மாணவர்களின் சைக்கிள் பயணம்
நல்ல மார்க் வாங்க
நல்ல மேற் படிப்புக்காக காலை டியூசன்
இத்தனை பேரைக் ........... கடந்து
......................................புத்துணர்வுடன் முனியப்பன்
விழிப்பவன் முனியப்பன்
காலை எழுந்த உடன்
காபி காலைக் கடன்
புத்துணர்வுக்காக
புறப்படுவான் நடை பயிற்சிக்கு
விடிவதற்கு முன் கிளம்பினால்
விடிய ஆரம்பிக்கும் போது திரும்புவான்
பரபரப்பு இல்லா நேரத்தில்
பால்கேனுடன் பால் காரர்கள்
போக்குவரத்துக் கழக
பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்
வீட்டு வேலைக்குச் செல்லும்
வேலைக்கார மகளிர்
காய் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்
காய்கறி விற்கும் பெண்கள் கூடையுடன்
அதிகாலை இவர்களுக்கு மட்டுமா ......... ?
அதிவேகமாக ஓடும் விளையாட்டு வீரர்கள்
உடல் மெலிய நடப்பவர்கள்
உடல் வியாதிக்காக நடப்பவர்கள்
உடல் நலத்துக்காக நடப்பவர்கள்
உடல் உறுதிக்காக நடப்பவர்கள்
நடைபயிலும் பெருசுகளின்
நடைபாதை சாமி தரிசனம்
தொலைவில் இருக்கும் தொழிற்சாலைக்கு
காலையில் செல்லும் தொழிலாளர்கள்
மாணவர்கள் இல்லாத காலையா
மாணவர்களின் சைக்கிள் பயணம்
நல்ல மார்க் வாங்க
நல்ல மேற் படிப்புக்காக காலை டியூசன்
இத்தனை பேரைக் ........... கடந்து
......................................புத்துணர்வுடன் முனியப்பன்
யானை - ஹெர்னியா - முனியப்பன்
குடலிறக்கம்ங்கிறது ஹெர்னியா. சாதாரணமா, Indirect inguinal Hernia தான் அதிகம். அடுத்து Direct inguinal Hernia.
அதுக்கப்பறம் அறுவை சிகிச்சை செய்த இடத்துல வரும் Incisional Hernia, அதுக்கடுத்து தொப்புளில் வரும் Umbilical Hernia, மிக அபூர்வமாக பெண்களுக்கு Femoral Hernia.
நம்ம பேஷண்ட் X, திருநெல்வேலி. ஒரு கோயிலுக்கு பக்கத்தில நிக்கிறார். அந்த வழியா அந்தக் கோயில் யானை வருது. வர்ற யானையை சீண்டுறார். யானைக்கு என்ன செய்யத் தெரியும் .. ? X - ஐத் துதிக்கையால தூக்கிக் கீழே போட்டு வயித்துல ஒரு மிதி. யானை அதுக்கு மேல X - ஐ எதும் செய்ய விடாம யானைப் பாகன் கொண்டு போறார்.
X - ஐத் தூக்கி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு (TVMC Hospital) கொண்டு வர்றாங்க. அவசரப் பிரிவுல அட்மிட் பண்றாங்க.
அறுவை சிகிச்சை யூனிட்ல இருந்து வந்து X ஐப் பரிசோதிக்கிறாங்க. X வயித்துல யானை மிதிச்சதுல குடலைப் பாதுகாக்கக் கூடிய அப்டாமினல் சதைகள் கிழிஞ்சு Traumatic Hernia. காயத்தினால் ஹெர்னியா. அறுவை சிகிச்சை யூனிட்ல நம்ம
முனியப்பனும் ஒருத்தர்.
X க்கு ஆப்பரேஷன் பண்ணி ஆப்பரேஷன் சக்சஸ். பேஷண்டும் நல்லா சுகமா அவர் வீட்டுக்குப் போறார். வித்தியாசமான கேஸ் இத மாதிரி எங்க கெடைக்கும் ? இந்த கேஸப் பத்தி நம்மாளு முனியப்பன் தயார் பண்ணி ஒரு டாக்டர் மீட்டிங்லயும் பேசி அசத்திர்றார்.
கோயில் யானைய சீண்டுனா அதுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
அதுக்கப்பறம் அறுவை சிகிச்சை செய்த இடத்துல வரும் Incisional Hernia, அதுக்கடுத்து தொப்புளில் வரும் Umbilical Hernia, மிக அபூர்வமாக பெண்களுக்கு Femoral Hernia.
நம்ம பேஷண்ட் X, திருநெல்வேலி. ஒரு கோயிலுக்கு பக்கத்தில நிக்கிறார். அந்த வழியா அந்தக் கோயில் யானை வருது. வர்ற யானையை சீண்டுறார். யானைக்கு என்ன செய்யத் தெரியும் .. ? X - ஐத் துதிக்கையால தூக்கிக் கீழே போட்டு வயித்துல ஒரு மிதி. யானை அதுக்கு மேல X - ஐ எதும் செய்ய விடாம யானைப் பாகன் கொண்டு போறார்.
X - ஐத் தூக்கி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு (TVMC Hospital) கொண்டு வர்றாங்க. அவசரப் பிரிவுல அட்மிட் பண்றாங்க.
அறுவை சிகிச்சை யூனிட்ல இருந்து வந்து X ஐப் பரிசோதிக்கிறாங்க. X வயித்துல யானை மிதிச்சதுல குடலைப் பாதுகாக்கக் கூடிய அப்டாமினல் சதைகள் கிழிஞ்சு Traumatic Hernia. காயத்தினால் ஹெர்னியா. அறுவை சிகிச்சை யூனிட்ல நம்ம
முனியப்பனும் ஒருத்தர்.
X க்கு ஆப்பரேஷன் பண்ணி ஆப்பரேஷன் சக்சஸ். பேஷண்டும் நல்லா சுகமா அவர் வீட்டுக்குப் போறார். வித்தியாசமான கேஸ் இத மாதிரி எங்க கெடைக்கும் ? இந்த கேஸப் பத்தி நம்மாளு முனியப்பன் தயார் பண்ணி ஒரு டாக்டர் மீட்டிங்லயும் பேசி அசத்திர்றார்.
கோயில் யானைய சீண்டுனா அதுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
மாரல் கிளாஸ்
மாரல் கிளாஸ்
மாரல்னா நல்லொழுக்கம். இதப்பத்தி ஸ்கூல்ல வாரத்துக்கு ஒரு பீரியட் கிளாஸ் எடுப்பாங்க. இப்ப அந்த வகுப்பு கிடையாது. ஸ்கூல் Time Table ல மட்டும் மாரல் கிளாஸ் இருக்கலாம்.
அடிப்படையா மனிதனுக்கு ஒழுக்கம் தேவை. அதை சொல்லிக் கொடுத்து, சமுதாயத்துல நல்ல நிலமைக்கு வர்றதுக்கும், சமுதாயத்துக்கு பயன்படர்றதுக்கும், சமுதாயம் நல்லா இருக்க உழைக்குறதுக்கும் தான் மாரல் கிளாஸ்.
இப்ப இருக்குற சுயநலமான ஒலகத்துல, சமுதாயம் எப்படி இருந்தா ... ? எவன் எப்படி போனா என்ன ...? அப்புறம் எதுக்கு மாரல் கிளாஸ். நியாயமான சிந்தனை. ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஒரு ஓரத்துல ஈரம் கசியுது.
மாரல்னா நல்லொழுக்கம். இதப்பத்தி ஸ்கூல்ல வாரத்துக்கு ஒரு பீரியட் கிளாஸ் எடுப்பாங்க. இப்ப அந்த வகுப்பு கிடையாது. ஸ்கூல் Time Table ல மட்டும் மாரல் கிளாஸ் இருக்கலாம்.
அடிப்படையா மனிதனுக்கு ஒழுக்கம் தேவை. அதை சொல்லிக் கொடுத்து, சமுதாயத்துல நல்ல நிலமைக்கு வர்றதுக்கும், சமுதாயத்துக்கு பயன்படர்றதுக்கும், சமுதாயம் நல்லா இருக்க உழைக்குறதுக்கும் தான் மாரல் கிளாஸ்.
இப்ப இருக்குற சுயநலமான ஒலகத்துல, சமுதாயம் எப்படி இருந்தா ... ? எவன் எப்படி போனா என்ன ...? அப்புறம் எதுக்கு மாரல் கிளாஸ். நியாயமான சிந்தனை. ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஒரு ஓரத்துல ஈரம் கசியுது.
முனியப்பனின் மழைக் காலங்கள்
இரவுப் பறவை முனியப்பனுக்கு
இரவு மழை பிடிக்கும்
பணிக்கு இடையூறு இல்லை
பணி முடிந்த நேரம் பெய்யும் மழை
ஊர் சுற்ற
உல்லாசமாகத் திரிய
மனசைத் தூண்டும்
மனம் போன போக்கில்
மழையில் நனைந்த
மழைக் காலங்கள் மறக்காதவை
மேல வெளிவீதி ரயில் நிலையம்
முழங்கால் தண்ணீரில்
மோட்டார் பைக் சைலன்சர்
முங்காமல்
ஆக்சிலேட்டரை அழுத்தி
அசத்திய காலங்கள்
கட்டபொம்மன் சிலை பக்கம்
உருட்டி வரும் டூ வீலருக்கு
ஸ்பார்க் பிளக் கிளீன் பண்ணும்
ஸ்மார்ட்டான திடீர் மெக்கானிக்குகள்
தண்ணீர் ஓடும் தெற்கு மாசி வீதி
தப்பாத சிம்மக்கல்
தண்ணீர் புரண்டோ டும் இடங்களில்
தவறாமல் சீறிப் பாய்ந்த காலங்கள்
முனியப்பன் வண்டியில்
முழுவீச்சில் சுற்றிய பருவங்கள்
கண்ணை மறைக்கும்
கடுமையான மழையிலும்
உற்சாகமாக வண்டி ஓட்டி
உடை நனைந்து
உடைமைகள் நனைந்து
உடல் நனைந்து
தலை நனைந்த
நனைந்த உடையோடு இன்னும்
நனைய கடை காபி
இன்னும் கொஞ்சம் சுற்றி
இனி முடியாது போதும்
வழியும் தண்ணீரை
வடிய விட்டு
வீட்டில் நுழைய
துவட்ட துண்டோ டு தாய்
சொத சொத உடையை மாற்றி
கதகதப்பாக காபி
உடல் வலி
உபயம் மழை
அந்த சுகம்
அடுத்த ஒரு மழை நாளில் ..............
இரவு மழை பிடிக்கும்
பணிக்கு இடையூறு இல்லை
பணி முடிந்த நேரம் பெய்யும் மழை
ஊர் சுற்ற
உல்லாசமாகத் திரிய
மனசைத் தூண்டும்
மனம் போன போக்கில்
மழையில் நனைந்த
மழைக் காலங்கள் மறக்காதவை
மேல வெளிவீதி ரயில் நிலையம்
முழங்கால் தண்ணீரில்
மோட்டார் பைக் சைலன்சர்
முங்காமல்
ஆக்சிலேட்டரை அழுத்தி
அசத்திய காலங்கள்
கட்டபொம்மன் சிலை பக்கம்
உருட்டி வரும் டூ வீலருக்கு
ஸ்பார்க் பிளக் கிளீன் பண்ணும்
ஸ்மார்ட்டான திடீர் மெக்கானிக்குகள்
தண்ணீர் ஓடும் தெற்கு மாசி வீதி
தப்பாத சிம்மக்கல்
தண்ணீர் புரண்டோ டும் இடங்களில்
தவறாமல் சீறிப் பாய்ந்த காலங்கள்
முனியப்பன் வண்டியில்
முழுவீச்சில் சுற்றிய பருவங்கள்
கண்ணை மறைக்கும்
கடுமையான மழையிலும்
உற்சாகமாக வண்டி ஓட்டி
உடை நனைந்து
உடைமைகள் நனைந்து
உடல் நனைந்து
தலை நனைந்த
நனைந்த உடையோடு இன்னும்
நனைய கடை காபி
இன்னும் கொஞ்சம் சுற்றி
இனி முடியாது போதும்
வழியும் தண்ணீரை
வடிய விட்டு
வீட்டில் நுழைய
துவட்ட துண்டோ டு தாய்
சொத சொத உடையை மாற்றி
கதகதப்பாக காபி
உடல் வலி
உபயம் மழை
அந்த சுகம்
அடுத்த ஒரு மழை நாளில் ..............
Monday, November 24, 2008
காதல் போஸ்ட்மார்ட்டம்
டெட் பாடிக்குத் தான் போஸ்ட்மார்ட்டம்
டெட்பாடி காதல் தோல்வியும்தான்
என் சட்டையில் .....
உன் நெற்றிக் குங்குமம்
என் புஜத்தில் .....
உன் பிச்சிப்பூ வாசம்
ஏன் நெருங்கிப் பழகினாய்
என்னை ஏமாற்றவா .... ?
உன் முதுகின் மச்சம் காட்டிய நீ
என் முதுகில் குத்தி விட்டாயே
என்னிடம் எதைக்கண்டு
என்னைக் காதலித்தாய் .... ?
என்னை நாசம் பண்ணவா
இன்னொருவர் சொல் கேட்டா
உன்னைப் பெண் கேட்க
என் வீட்டார் வரவில்லை
உன்னைப் பெண் கேட்டு
உன் வீட்டிற்கு நான் வந்தேனே
ஏன் என்னை ஏமாற்றினாய்
என்னைப் பித்தனாக்கவா .....?
சென்னை முகவரி கொடுத்தாய்
உன்னை அழைக்க ஆள் அனுப்பினேன்
விதி விளையாடியது அன்று
வீரமங்கை இந்திரா மரணம் - கலவரம்
காலம் கோழைகளுக்காக அல்ல
காலம் துணிந்தவனுக்குத் தான்
அன்றைய தவறை
இன்று உணர்ந்திருப்பாய்
ஏழையாயிருந்தாலும்
கோழையா யிருக்காதே
காதல் துரோகி இல்லை நீ
காதல் கோழை நீ
டெட்பாடி காதல் தோல்வியும்தான்
என் சட்டையில் .....
உன் நெற்றிக் குங்குமம்
என் புஜத்தில் .....
உன் பிச்சிப்பூ வாசம்
ஏன் நெருங்கிப் பழகினாய்
என்னை ஏமாற்றவா .... ?
உன் முதுகின் மச்சம் காட்டிய நீ
என் முதுகில் குத்தி விட்டாயே
என்னிடம் எதைக்கண்டு
என்னைக் காதலித்தாய் .... ?
என்னை நாசம் பண்ணவா
இன்னொருவர் சொல் கேட்டா
உன்னைப் பெண் கேட்க
என் வீட்டார் வரவில்லை
உன்னைப் பெண் கேட்டு
உன் வீட்டிற்கு நான் வந்தேனே
ஏன் என்னை ஏமாற்றினாய்
என்னைப் பித்தனாக்கவா .....?
சென்னை முகவரி கொடுத்தாய்
உன்னை அழைக்க ஆள் அனுப்பினேன்
விதி விளையாடியது அன்று
வீரமங்கை இந்திரா மரணம் - கலவரம்
காலம் கோழைகளுக்காக அல்ல
காலம் துணிந்தவனுக்குத் தான்
அன்றைய தவறை
இன்று உணர்ந்திருப்பாய்
ஏழையாயிருந்தாலும்
கோழையா யிருக்காதே
காதல் துரோகி இல்லை நீ
காதல் கோழை நீ
Tuesday, November 18, 2008
நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (குடிகாரன் - நம்பர் 1)
இவர் குடிகாரர்களில் நம்பர் 1 ஆ செலக்ட் பண்ண காரணம் இருக்கு.
இவர் ஒரு கரைவேட்டி மந்திரியின் மைத்துனர். மந்திரி இவருக்கு லாரியெல்லாம் வாங்கிக் கொடுத்தார். லாரிய வச்சு இவர் என்ன பொழைக்கவா போறார். குடிச்சே லாரியக் காலி பண்ணிட்டார்.
அப்பப்ப முனியப்பன் கிட்ட வருவார். 30 ரூபாய் வாங்கிட்டுப் போவார். எங்க? குடிக்கத்தான். இப்படியே போய்க்கிட்டிருந்துச்சா;
ஒரு நாள் காலைல 6.30க்கு முனியப்பன் வீட்டுக்கு வந்தார். முனியப்பனைப் பாத்த ஒடனே அழுக ஆரம்பிச்சார். "என் மக செத்துப் போச்சுன்னார்." வாங்கன்னு சொல்லி அவரை டூவீலர்ல பின்னால ஒக்கார வச்சு முனியப்பனும் கூடக் கெளம்பினார். பொறவு கேதம்ல.
பெரியார் பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் ரவுண்டானா வந்ததும், வண்டிய நிப்பாட்ட சொல்லி, "மாலை வாங்க ரூவா குடுங்க"ன்னு கேட்டு 50 ரூவா வாங்கிட்டுப் போனவரு .... போனவரு தான்.
முனியப்பன் 15 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கெளம்பி போயிட்டாரு. 3 மாசம் கழிச்சு முனியப்பன் ஆபிசுக்கு மேற்படியான் வந்தாரு. மொதல்ல அவருக்கு ஒரு அடியப் போட்டாரு முனியப்பன்.
குடிக்க காசு வேணும்கிறதுக்காக தன்னோட மகள் செத்துப்போயிட்டதா சொல்லி காசு வாங்கினார் பாருங்க. குடிப்பழக்கம் மனுஷனை எப்படில்லாம் பேச வைக்குது பாருங்க... குடிக்க ஒரு காரணம் மக செத்துப் போயிட்டா. கொடுமைடா சாமி ......
இவர் ஒரு கரைவேட்டி மந்திரியின் மைத்துனர். மந்திரி இவருக்கு லாரியெல்லாம் வாங்கிக் கொடுத்தார். லாரிய வச்சு இவர் என்ன பொழைக்கவா போறார். குடிச்சே லாரியக் காலி பண்ணிட்டார்.
அப்பப்ப முனியப்பன் கிட்ட வருவார். 30 ரூபாய் வாங்கிட்டுப் போவார். எங்க? குடிக்கத்தான். இப்படியே போய்க்கிட்டிருந்துச்சா;
ஒரு நாள் காலைல 6.30க்கு முனியப்பன் வீட்டுக்கு வந்தார். முனியப்பனைப் பாத்த ஒடனே அழுக ஆரம்பிச்சார். "என் மக செத்துப் போச்சுன்னார்." வாங்கன்னு சொல்லி அவரை டூவீலர்ல பின்னால ஒக்கார வச்சு முனியப்பனும் கூடக் கெளம்பினார். பொறவு கேதம்ல.
பெரியார் பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் ரவுண்டானா வந்ததும், வண்டிய நிப்பாட்ட சொல்லி, "மாலை வாங்க ரூவா குடுங்க"ன்னு கேட்டு 50 ரூவா வாங்கிட்டுப் போனவரு .... போனவரு தான்.
முனியப்பன் 15 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கெளம்பி போயிட்டாரு. 3 மாசம் கழிச்சு முனியப்பன் ஆபிசுக்கு மேற்படியான் வந்தாரு. மொதல்ல அவருக்கு ஒரு அடியப் போட்டாரு முனியப்பன்.
குடிக்க காசு வேணும்கிறதுக்காக தன்னோட மகள் செத்துப்போயிட்டதா சொல்லி காசு வாங்கினார் பாருங்க. குடிப்பழக்கம் மனுஷனை எப்படில்லாம் பேச வைக்குது பாருங்க... குடிக்க ஒரு காரணம் மக செத்துப் போயிட்டா. கொடுமைடா சாமி ......
Subscribe to:
Posts (Atom)
