முனியப்பன் clinic வச்சிருக்க ஏரியால ஒரு ஏட்டையா (Head Constable) . மதுரை S.S.காலணி போலீஸ் ஸ்டேஷன்ல வேல பாத்துக்கிட்டிருந்தார். நீரிழிவு (Diabetes) வியாதிக்காரர்.
ஒரு நாள் முனியப்பன் அவரை ரோட்ல கிராஸ் பண்ணும் போது பாக்குறார். ஏட்டையா ரொம்ப மெலிஞ்சிருந்தார். முனியப்பன் டூ வீலரை நிப்பாட்டி ஏட்டையாவ clinic வரச் சொன்னார். டெஸ்ட் பண்ணிப் பாத்தா ரத்தத்துல சுகர் கண்டபடி எகிறியிருக்கு. TB வியாதி வேற நுரையீரலத் தாக்கியிருக்கு. சுகருக்கு இன்சுலின் போட்டு, TBக்கும் ஊசி, மாத்திரை குடுத்து முனியப்பன் ஏட்டையாவ சுகமாக்கிர்றார். ஒரே ஒரு அட்வைஸ் ஏட்டையாவுக்கு. தண்ணி அடிக்கக்கூடாது. ஏன்னா, ஏட்டையா சூப்பர் தண்ணி பார்ட்டி.
தண்ணி அடிக்காதன்னா யாராவது கேப்பானா...? ஏட்டையா ஊத்துறார். போலீஸ் யூனிஃபார்ம்லேயே எங்கயாவது flat ஆகி ரோட்ல கூட படுத்துக்கிடப்பார். யாராவது தெரிஞ்ச ஆள் அவரத் தூக்கிக்கொண்டு போய் அவர் வீட்ல விட்ருவாங்க.
முனியப்பன் கிட்ட ஏட்டையா அப்பப்ப வருவார். ரத்தத்துல சுகர் 300க்கு கொறையாது. முனியப்பன் சத்தம் போடுவார். ஏட்டையாவா கேக்குற ஆளு. 'அவன் கெடக்கான் டாக்டரு'ன்னு அவர் மனசுக்குள்ளயே வச்சிக்கிருவார். டெய்லி தண்ணி தான்.
ஒரு தடவை விராட்டிபத்து போலீஸ் செக்போஸ்ட்ல 150 ஃபுல் பாட்டிலோட ஒரு ஆட்டோ வ நிப்பாட்டிர்றாங்க. பாண்டிச்சேரிலருந்து கடத்திக்கிட்டு வந்த சரக்கு. ஆட்டோ வ விட்டுட்டு அதுல வந்த மூணு பேரும் எறங்கி ஓடுறானுவ. செக் போஸ்ட்ல நம்ம ஏட்டையாவும் டூட்டில இருக்கார். ஏட்டையாவ பாட்டில பாத்துக்கிட சொல்லிட்டு SI யும் ரெண்டு கான்ஸ்டபிளும் ஓடுறவங்களைப் பிடிக்க ஓடுறாங்க. எவன் பிடிபடுவான் ... ? மூணு பேரும் எஸ்கேப். SI திரும்பி வந்து பாத்தா, அந்த நாலுல ஒரு பாட்டில ஓபன் பண்ணி முக்காவாசியக் குடிச்சி முடிச்சிட்டார் நம்ம ஏட்டையா. எவ்வளவு சின்சியரான டூட்டி பாருங்க...?
குடியும் சுகரும் பிரண்ட்ஸ். குடிக்க குடிக்க சுகர் கொறையாது. இது நடைமுறை, குடிய நிப்பாட்டுனா சுகர் கொறையும். நம்ம ஏட்டையாவா குடிய நிப்பாட்டுற ஆளு.
டெய்லி குடிக்கறதுக்கு எதாவது நடக்கணும்ல. அதெப்படி நடக்காம இருக்கும். ஏட்டையாவுக்கு கைல, கால்ல வெரல்ல புண்ணு வர ஆரம்பிச்சது. வெரல் அழுகி (Diabetic Gangrene) ஏட்டையா கைலயும், கால்லயும் 6 வெரல கட் பண்ணி எடுத்தாச்சு.
வெரல் போனா என்ன...? குடிய நிப்பாட்ட முடியுமா? ஏட்டையா குடிச்சிகிட்டே இருக்கார். கண்ல பார்வை கொறைய ஆரம்பிக்குது. தமிழ்நாட்ல உள்ள எல்லா கண் ஆஸ்பத்திரிலயும் காட்டுறார். சுகரக் கண்ட்ரோல் பண்ணாததால (Uncontrolled Diabetes) பார்வைக்கு வாய்ப்பில்லை. லேசர் தான் வைக்க முடியும், மேஜிக் மாதிரி எதுவும் செய்ய முடியாது அப்படின்னு சொல்லிர்றாங்க. கண்ணோட கதை முடிஞ்சிருச்சு.
டூ வீலர்ல முனியப்பன்கிட்ட தானே வந்தவர், கொஞ்ச நாள் கழிச்சு நடந்து வர்றார் (கண் பார்வை கொறையுதுல்ல...). நடந்து வந்தவர், அப்புறம் அதுவும் முடியாம ஆட்டோல வர்றார். ஒரு நிதானத்துல வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்குப் போய்க்கிட்டிருந்தார். இப்ப அதுவும் முடியாம வீட்டுக்குள்ளேயே மொடங்கிக் கெடக்குறார். வீட்டுக்குள்ள நடக்கிறதுக்கே யாராவது help பண்ணனும்.
கண் கெட்ட பெறகு சூர்யநமஸ்காரம்பாங்க. கண் பார்வை முழுசா போன பெறகு இப்ப நம்ம ஏட்டையா இப்ப குடிக்கறதில்லை.
Sunday, June 7, 2009
Tuesday, June 2, 2009
Boxing 11 ரவுண்டு - Ashu
4 வயசு Ashuக் குட்டி முனியப்பன் தங்கச்சி மகன். அவனும் அவன் அண்ணன் 7 வயசு அமரும் முனியப்பனைப் பாடாப் படுத்திருவானுக. இரவு 10.30க்கு நைட் ரவுண்ட்ஸ் டூ வீலர்ல. Ashu கையக் காட்டுற பக்கம் எல்லாம் வண்டிய ஓட்டிட்டுப் போகனும் (ஆளுக, போக்குவரத்து குறைவான பகுதி தான்). ரவுண்ட்ஸ் முடிஞ்ச உடனே வெளையாட்டு.
இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.
Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.
அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......
இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.
Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.
அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......
Sunday, May 24, 2009
நக்காரணர்
நக்காரணர்...கேள்விப்படாத பேரா இருக்கா. பழந்தமிழர்கள் கையாண்ட வார்த்தை இது.
பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,
வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.
ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.
வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.
பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்
பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,
வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.
ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.
வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.
பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்
Tuesday, May 12, 2009
பேப்பர் சீனிவாசன் - எதுக்குன்னு புரியலை
பேப்பர் சீனிவாசன். பேப்ர் போடுறவன். 32 வயசு. பேப்பர் ஏஜென்சி எடுத்து நாளிதழ்கள், வார இதழ்கள், வீடுவீடாப் போடுறவன். பெட்டிக் கடை வச்சிருக்கான். அதுலயும் நாளிதழ், பத்திரிகைகள். பெட்டிக்கடை வச்சா சிகரெட், மிட்டாய் விக்கணும்ல, உண்டு. மெயின் தொழில் பேப்பர், புக்.
மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.
முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).
ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).
இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?
மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.
முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).
ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).
இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?
Friday, May 8, 2009
Case Sheet (முனியப்பனும் 'தல' யும்)
முனியப்பன் மதுரையில் ஒரு பொது மருத்துவர். அவரிடம் ஒரு விநோதமான கேஸ்.
மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு
வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.
ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.
அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?
பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !
மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு
வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.
ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.
அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?
பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !
Monday, May 4, 2009
சண்டையும் சமாதானமும்
உன் குத்துக்கள்
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது
முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு
காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று
தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்
மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது
முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு
காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று
தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்
மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....
Thursday, April 30, 2009
வழக்கொழிந்த பழக்கங்கள்
தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.
இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.
ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.
பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.
பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.
ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.
பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.
பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
Subscribe to:
Posts (Atom)
