நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
Tuesday, April 6, 2010
Tuesday, March 30, 2010
தோட்டக்காரன் முனியப்பன்
குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.
முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.







முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.







Tuesday, March 16, 2010
மன்னிக்க வேண்டுகிறேன்
கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
Tuesday, February 23, 2010
ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா - அஞ்சுகம்
குபீர் சிரிப்பலைகள் எதிர்பாராமல் என்றாவது எழும். சிரிப்பை யாராலும் அடக்க முடியாது.
முனியப்பனின் பால்ய பருவத்தில் அடிக்கடி சளி, இளைப்பு காரணமாக அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. மூன்று Course ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அவருக்கு போட்ப்பட்டது. ஒரு couse என்பது 90 ஊசி. ஆக 3 x 90 = 270 ஊசிகள். ஸ்டெரப்டோமைசின் ஊசியின் பக்க விளைவு Ototoxicity செவி கேட்கும் திறனை குறைத்து விடும்.
இப்பொழுது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஸ்ரெப்டோமைசின் போட நேரிட்டாலும் 45 ஊசிதான். நெடு நாள் குணப்படுத்த முடியாத MDRTB க்கு மட்டும் ஊசி. அவ்வளவுதான். ototoxic என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.
270 ஊசி முனியப்பனுக்கு என்ன பாடுபடுத்தியிருக்கும். செவி கேட்கும் திறன் சற்று குறைவு.
16.02.10ந் தேதி குண்டு குமார் ஊசி போட வந்திருக்கார். அப்பொழுது அஞ்சுகம் என்ற நோயாளி ஊசி போட வருகிறார். அவர் செவி கேட்கும் திறன் முற்றிலும் குறைந்தவர். முனியப்பன் குமாரிடம் " நமக்கே காது சரியா கேக்காது, இந்த அம்மாவுக்கு சுத்தமா கேக்காது" என்று சொல்லி விட்டு அஞ்சுகத்தை பரிசோதனை பண்ணி treatment எடுக்கிறார்.
அடுத்தநாள் 17.02.10 அதே போல குண்டு குமார் ஊசி போட வந்த நேரத்தில் அஞ்சுகமும் ஊசி போட வருகிறார். அஞ்சுகம் தனக்கு உள்ள வியாதி முதல் நாள் இருந்ததுக்கு இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினார்.
"இப்ப ஒங்களுக்கு காது நல்லா கேட்குது. காது ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா"
அடக்க முடியாத பொறுக்க முடியாத சிரிப்பு குமாருக்கு, முனியப்பனுக்கு சிரிப்பை கிளப்பி விட்ட அஞ்சுகமும் சிரிப்பில் சேர்ந்து கொள்ள ஒரே சிரிப்பு.
இந்த மாதிரி சிரிக்கும் சமயங்கள் மனசு இலகுவாயிருக்கும். நடிகர்கள் மாதிரி, மருத்துவர்களை கவனிக்கும் நோயாளிகள் உண்டு. அதில் ஒருவர்தான் அஞ்சுகம்.
முனியப்பனின் பால்ய பருவத்தில் அடிக்கடி சளி, இளைப்பு காரணமாக அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. மூன்று Course ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அவருக்கு போட்ப்பட்டது. ஒரு couse என்பது 90 ஊசி. ஆக 3 x 90 = 270 ஊசிகள். ஸ்டெரப்டோமைசின் ஊசியின் பக்க விளைவு Ototoxicity செவி கேட்கும் திறனை குறைத்து விடும்.
இப்பொழுது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஸ்ரெப்டோமைசின் போட நேரிட்டாலும் 45 ஊசிதான். நெடு நாள் குணப்படுத்த முடியாத MDRTB க்கு மட்டும் ஊசி. அவ்வளவுதான். ototoxic என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.
270 ஊசி முனியப்பனுக்கு என்ன பாடுபடுத்தியிருக்கும். செவி கேட்கும் திறன் சற்று குறைவு.
16.02.10ந் தேதி குண்டு குமார் ஊசி போட வந்திருக்கார். அப்பொழுது அஞ்சுகம் என்ற நோயாளி ஊசி போட வருகிறார். அவர் செவி கேட்கும் திறன் முற்றிலும் குறைந்தவர். முனியப்பன் குமாரிடம் " நமக்கே காது சரியா கேக்காது, இந்த அம்மாவுக்கு சுத்தமா கேக்காது" என்று சொல்லி விட்டு அஞ்சுகத்தை பரிசோதனை பண்ணி treatment எடுக்கிறார்.
அடுத்தநாள் 17.02.10 அதே போல குண்டு குமார் ஊசி போட வந்த நேரத்தில் அஞ்சுகமும் ஊசி போட வருகிறார். அஞ்சுகம் தனக்கு உள்ள வியாதி முதல் நாள் இருந்ததுக்கு இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினார்.
"இப்ப ஒங்களுக்கு காது நல்லா கேட்குது. காது ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா"
அடக்க முடியாத பொறுக்க முடியாத சிரிப்பு குமாருக்கு, முனியப்பனுக்கு சிரிப்பை கிளப்பி விட்ட அஞ்சுகமும் சிரிப்பில் சேர்ந்து கொள்ள ஒரே சிரிப்பு.
இந்த மாதிரி சிரிக்கும் சமயங்கள் மனசு இலகுவாயிருக்கும். நடிகர்கள் மாதிரி, மருத்துவர்களை கவனிக்கும் நோயாளிகள் உண்டு. அதில் ஒருவர்தான் அஞ்சுகம்.
Tuesday, February 9, 2010
இசை அரசி பேரன் பொறந்தாச்சு
இசை அரசி பேரன் பொறந்தாச்சு
இசை அரசி மதுரைல ஒரு தபால் துறை ஊழியரா பணியில இருந்தாங்க.
அவங்க வீட்டுக்காரரு உடற்பயிற்சி ஆசிரியரா அரசு மேல்நிலைப் பள்ளியில வேலைப் பாக்குறார். பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணு. 2 குழந்தைகள் அவங்களுக்கு பிள்ளைகள் வளர்றாங்க. பொண்ணு PG முடிச்சு B.Ed., பண்ணுது. பையன் +2 முடிச்சு காலேஜ்ல மொத வருஷம்.
ஒரு குடும்பம் நல்லா இருக்குறது கடவுளுக்கு பிடிக்காதுல்ல. தண்ணி தொட்டி கழுவ போன மகன், மேல 3வது மாடியில இருந்து தவறி விழுந்துர்றான். பெத்த பிள்ளை ரத்த வெள்ளத்துல, தலை காயத்தோட உயிரில்லாம ... பெத்த தாயால எப்படி தாங்க முடியும்? இசை அரசி அதிர்ச்சியில உறைஞ்சுர்றாங்க. அவங்க வீட்டுக்காரரும் அதே நிலைதான். ஒரு வருஷம் ஆகுது. இசை அரசியோட கணவரும் போய்ச் சேந்துர்றார். அடுத்தடுத்து ரெண்டு உயிரிழப்பு. அதுவும் சாகக்கூடிய வயசு கெடையாது. இசை அரசி கடுமையான அதிர்ச்சியில இருக்காங்க.
முனியப்பனை பார்க்க வந்தா அழுதுருவாங்க. அழுகவிட்டு, ஆறுதல்படுத்தி அனுப்பிருவார். அவங்க மகளுக்கு அரசு வேலை கெடைச்சு ஆசிரியராயிர்றாங்க. மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மருமகனும் அரசு ஆசிரியர். மொதல்ல இசை அரசிக்கு பேத்தி பொறக்குது.PG முடிச்சு B.Ed.,
இசை அரசி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர்றாங்க. அப்புறம் முனியப்பனை பாக்க வர்றப்போ அழுக மாட்டாங்க. கண்ணு மட்டும் கலங்கும். இப்ப அவங்க பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பிறக்குது. ஆண் குழந்தை பேரனை பார்த்ததும் இசை அரசி சந்தோஷமாயிர்றாங்க. பேரன் வடிவில மகன் அவங்களுக்கு தெரியிறான்.
எல்லா குடும்பத்துலயும் உள்ள பழக்கம் இது. உயிருக்கு உயிரானவங்க இறந்த பிறகு, அடுத்து பொறக்குற குழந்தை வடிவில அவங்க தெரியிறது ஐதீகம்னு கூட சொல்லலாம்.
மகன் பேரன் வடிவில வந்து இசை அரசிக்கு புத்துணர்ச்சியை குடுத்திருக்கான். வாழ்க்கை சந்தோஷமா, சலிப்பில்லாம போறதுக்கு ஒரு பிடிப்பு வேணும். பேரன்கிற பிடிப்பு இசை அரசியை இனிமே கண்கலங்காம பாத்துக்கும்.
இசை அரசி மதுரைல ஒரு தபால் துறை ஊழியரா பணியில இருந்தாங்க.
அவங்க வீட்டுக்காரரு உடற்பயிற்சி ஆசிரியரா அரசு மேல்நிலைப் பள்ளியில வேலைப் பாக்குறார். பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணு. 2 குழந்தைகள் அவங்களுக்கு பிள்ளைகள் வளர்றாங்க. பொண்ணு PG முடிச்சு B.Ed., பண்ணுது. பையன் +2 முடிச்சு காலேஜ்ல மொத வருஷம்.
ஒரு குடும்பம் நல்லா இருக்குறது கடவுளுக்கு பிடிக்காதுல்ல. தண்ணி தொட்டி கழுவ போன மகன், மேல 3வது மாடியில இருந்து தவறி விழுந்துர்றான். பெத்த பிள்ளை ரத்த வெள்ளத்துல, தலை காயத்தோட உயிரில்லாம ... பெத்த தாயால எப்படி தாங்க முடியும்? இசை அரசி அதிர்ச்சியில உறைஞ்சுர்றாங்க. அவங்க வீட்டுக்காரரும் அதே நிலைதான். ஒரு வருஷம் ஆகுது. இசை அரசியோட கணவரும் போய்ச் சேந்துர்றார். அடுத்தடுத்து ரெண்டு உயிரிழப்பு. அதுவும் சாகக்கூடிய வயசு கெடையாது. இசை அரசி கடுமையான அதிர்ச்சியில இருக்காங்க.
முனியப்பனை பார்க்க வந்தா அழுதுருவாங்க. அழுகவிட்டு, ஆறுதல்படுத்தி அனுப்பிருவார். அவங்க மகளுக்கு அரசு வேலை கெடைச்சு ஆசிரியராயிர்றாங்க. மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மருமகனும் அரசு ஆசிரியர். மொதல்ல இசை அரசிக்கு பேத்தி பொறக்குது.PG முடிச்சு B.Ed.,
இசை அரசி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர்றாங்க. அப்புறம் முனியப்பனை பாக்க வர்றப்போ அழுக மாட்டாங்க. கண்ணு மட்டும் கலங்கும். இப்ப அவங்க பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பிறக்குது. ஆண் குழந்தை பேரனை பார்த்ததும் இசை அரசி சந்தோஷமாயிர்றாங்க. பேரன் வடிவில மகன் அவங்களுக்கு தெரியிறான்.
எல்லா குடும்பத்துலயும் உள்ள பழக்கம் இது. உயிருக்கு உயிரானவங்க இறந்த பிறகு, அடுத்து பொறக்குற குழந்தை வடிவில அவங்க தெரியிறது ஐதீகம்னு கூட சொல்லலாம்.
மகன் பேரன் வடிவில வந்து இசை அரசிக்கு புத்துணர்ச்சியை குடுத்திருக்கான். வாழ்க்கை சந்தோஷமா, சலிப்பில்லாம போறதுக்கு ஒரு பிடிப்பு வேணும். பேரன்கிற பிடிப்பு இசை அரசியை இனிமே கண்கலங்காம பாத்துக்கும்.
Tuesday, January 26, 2010
கங்கண சூரிய கிரகணம்
ஜனவரி 15 ஆம் தேதி மத்தியானம் எல்லாரும் சூரிய கிரகணம் பார்த்திருப்போம். ரொம்ப நல்லா தெரிஞ்சது. முனியப்பனுக்குத் தோதான மதியம் 1.20 மணிக்கு முழு சூரிய கிரகணம்.
எல்லாரும் பாத்ததப் போய் ..... அப்படின்னு நௌக்கிறீங்களா
எல்லாரையும் போல் எக்ஸ்ரே வச்சு பாத்தது முனியப்பன் குடும்பம். ஆனா அவங்க வீட்ல தரைல நிழலா விழுந்தது சூரிய கிரகணம். வெள்ளை வளையம் சூரியன், கருப்பு வட்டம் சந்திரன். போட்டோ எடுத்தது அஷிவோட அண்ணன் அமர். கேமரா பானசோனிக் டிஜிட்டல்.


விண்வெளி அதிசயம் முனியப்பன் வீட்டுத் தரையிலும் தெரிந்தது தான் அதிசயம்.
எல்லாரும் பாத்ததப் போய் ..... அப்படின்னு நௌக்கிறீங்களா
எல்லாரையும் போல் எக்ஸ்ரே வச்சு பாத்தது முனியப்பன் குடும்பம். ஆனா அவங்க வீட்ல தரைல நிழலா விழுந்தது சூரிய கிரகணம். வெள்ளை வளையம் சூரியன், கருப்பு வட்டம் சந்திரன். போட்டோ எடுத்தது அஷிவோட அண்ணன் அமர். கேமரா பானசோனிக் டிஜிட்டல்.
விண்வெளி அதிசயம் முனியப்பன் வீட்டுத் தரையிலும் தெரிந்தது தான் அதிசயம்.
Thursday, January 14, 2010
பத்து மாதம் வயித்து வலி
வித்தியாசமான நோயாளிகள் முனியப்பனைப் பார்க்க வருவார்கள்
டிசம்பர் 15, 2009 இரவு 9.15 மணிக்கு முனியப்பன் கன்சல்டிங் ரூமில் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவசரமாக ஒரு 45 வயசுப் பெண்மணி முனியப்பனின் ரூமிற்குள் நுழைகிறார். "மகளுக்கு முதல் குழந்தை பிறந்து பத்து மாசம் ஆச்சு. இன்னும் பீரியட்ஸ் வரலை, இப்ப வயித்த வலிக்குதுங்குறா, உள்ள படுக்க வச்சிருக்கேன்" அப்படிங்கிறார்.
முனியப்பன் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், தனது ஆஸ்தான உதவியாளர் வள்ளியை அழைத்து என்ன என்று பார்க்கச் சொல்கிறார். வள்ளி பரிசோதிக்கப் போன வேகத்தில் திரும்பி வர்றார். வந்து "சார் மாசமா இருக்கு சார்"னு சொல்கிறார். முனியப்பன் வள்ளி கிட்ட வலிக்கு ஊசியப் போடுன்னுட்டு நோயாளியோட தாயாரைக் கூப்பிட்டு "ஏம்மா, ஒன் மக மாசமா இருக்கது ஒனக்குத் தெரியலையா? போய் லேடி டாக்டரைப் பாருங்கம்மான்னு" சொல்றார்.
வள்ளி ஊசி போட்டு வந்துர்றார். நோயாளியப் போய் "மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாது"ன்னு கேட்க முனியப்பன் கெளளம்பி போறார். வள்ளியும் துணைக்குப் போறாங்க. பெண் நோயாளிய ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது பெண் உதவியாளர் கூட இருக்கணும். இது தொழில் நியதி. சூடா ஒரு வார்த்தை கேட்டுட்டு பரிசோதிப்போம்னு போன முனியப்பனுக்கும், வள்ளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. குழந்தையோட தலை வெளியே வந்துருச்சு, பிரசவம் ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம இந்த மாதிரி மாட்டிக்கிடற சூழ்நிலைகள் வரும். பிரசவத்துக்கான உபகரணங்கள் இல்லை. பிரசவம் நடக்குது, என்ன செய்றது? மருத்துலவ ஆலோசனைக்கு 7 நோயாளிகள் வெயிட்டிங்.
சிக்கலான சூழ்நிலைல தான் முனியப்பனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்யும். முனியப்பன் வள்ளியோட பிரசவம் பார்க்க ஆரம்பிச்சுர்றார். முனியப்பனுக்கு சோதனை வைக்காம பிள்ளை பிறந்திருது. 9.15க்கு வந்த பேஷண்டுக்கு 9.25க்கு பிரசவம். 10 நிமிஷத்துல பிள்ளையோட குவா குவா சத்தம் கேட்டதும், ஆஸ்பத்திரில இருந்த எல்லாருக்கும் ஒரே சிரிப்பு, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அடுத்து செய்ய வேண்டியதை யோசிச்சார் முனியப்பன். பிள்ளை பொறந்துருச்சு, இனி CORD STRUCTURES கட் பண்ணணும். PLACENTA வெளிய வரணும். பிறந்த குழந்தய MECONIUM சுத்தம் பண்ணணும்.
முனியப்பன் வெளில நின்ன ஒரு ஆட்டோல ஏறி பக்கத்துல இருந்த lady டாக்டர் கிட்ட போய் சொன்ன உடனே, அவங்க ஒரு உதவியாளரை அனுப்புனாங்க. முனியப்பன் இல்லாம தாயும் பிள்ளையோட வள்ளி தனியா. வள்ளிக்கு இது புது அனுபவம். முனியப்பன் 7 நிமிஷத்துல ஆளோட திரும்பி வந்துர்றார். அதுக்குள்ள மொபைல்ல வள்ளி "சார் கொடி கழுத்தச் சுத்தி இறுக்கமா இருக்கு", முனியப்பன் "ஒரு வெரல வச்சு அழுத்தமா பிடி" வள்ளி "பயமாயிருக்கு" முனியப்பன் "பயப்படாத" இப்படி வேற calls.
வள்ளியும் அந்த உதவியாளரும் சேர்ந்து தாயையும், பிள்ளையையும் சுத்தம் பண்ணி, எல்லா வேலையும் முடிஞ்சுருது. தாயும், பிள்ளையும் நலம். இரவு மணி 10.20, 9.10க்கு வயித்த வலியோட வந்த பொண்ணு 10.20க்கு கைல குழந்தையோட. தாயையும், பிள்ளையையும் பேறு காலத்துக்கான அடுத்த கட்ட மருத்துவ கண்காணிப்புக்கு அதே lady டாக்டர்கிட்ட அனுப்பிர்றார் முனியப்பன்.
இதுக்கிடைல, முனியப்பன் கிளினிக் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அப்படின்னு ஒரு கூட்டம் சேந்துருது. எல்லாரும் அந்தப் பொண்ணோட தாயாரை வைறாங்க "மக வயிறு வீங்கியிருக்கு, மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாம போச்சு"ன்னு.
இதுக்கெல்லாம் காரண கர்த்தா அந்தப் பொண்ணோட ஆம்படையான் இப்ப வர்றான். கோவிலுக்கு மாலை போட்டிருக்கான். முனியப்பன் அவனைக் கோபமாகவே கேட்கிறார், "ஏம்ப்பா ஒன் பொண்டாட்டி மாசமா இருக்கது ஒனக்கு எப்படிப்பா தெரியாம போச்சு" அதுக்கு அவன் "சாமி, நான் ஒண்ணும் செய்யலை, மாலை போட்ருக்கேன் சாமி" அப்படின்றார். முனியப்பனுக்கு கடுப்பாயிருது "எலேய் நீ இப்ப தாண்டா மாலை போட்ருக்கே " அப்படின்றார்.
ஒரு பொண்ணு மாசமாயிருக்கது அந்தப் பொண்ணுக்கோ, தாயாருக்கோ, வீட்டுக் காரனுக்கோ எப்படி தெரியாம இருக்கும் ? முழு கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும் ?.
டிசம்பர் 15, 2009 இரவு 9.15 மணிக்கு முனியப்பன் கன்சல்டிங் ரூமில் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவசரமாக ஒரு 45 வயசுப் பெண்மணி முனியப்பனின் ரூமிற்குள் நுழைகிறார். "மகளுக்கு முதல் குழந்தை பிறந்து பத்து மாசம் ஆச்சு. இன்னும் பீரியட்ஸ் வரலை, இப்ப வயித்த வலிக்குதுங்குறா, உள்ள படுக்க வச்சிருக்கேன்" அப்படிங்கிறார்.
முனியப்பன் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், தனது ஆஸ்தான உதவியாளர் வள்ளியை அழைத்து என்ன என்று பார்க்கச் சொல்கிறார். வள்ளி பரிசோதிக்கப் போன வேகத்தில் திரும்பி வர்றார். வந்து "சார் மாசமா இருக்கு சார்"னு சொல்கிறார். முனியப்பன் வள்ளி கிட்ட வலிக்கு ஊசியப் போடுன்னுட்டு நோயாளியோட தாயாரைக் கூப்பிட்டு "ஏம்மா, ஒன் மக மாசமா இருக்கது ஒனக்குத் தெரியலையா? போய் லேடி டாக்டரைப் பாருங்கம்மான்னு" சொல்றார்.
வள்ளி ஊசி போட்டு வந்துர்றார். நோயாளியப் போய் "மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாது"ன்னு கேட்க முனியப்பன் கெளளம்பி போறார். வள்ளியும் துணைக்குப் போறாங்க. பெண் நோயாளிய ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது பெண் உதவியாளர் கூட இருக்கணும். இது தொழில் நியதி. சூடா ஒரு வார்த்தை கேட்டுட்டு பரிசோதிப்போம்னு போன முனியப்பனுக்கும், வள்ளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. குழந்தையோட தலை வெளியே வந்துருச்சு, பிரசவம் ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம இந்த மாதிரி மாட்டிக்கிடற சூழ்நிலைகள் வரும். பிரசவத்துக்கான உபகரணங்கள் இல்லை. பிரசவம் நடக்குது, என்ன செய்றது? மருத்துலவ ஆலோசனைக்கு 7 நோயாளிகள் வெயிட்டிங்.
சிக்கலான சூழ்நிலைல தான் முனியப்பனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்யும். முனியப்பன் வள்ளியோட பிரசவம் பார்க்க ஆரம்பிச்சுர்றார். முனியப்பனுக்கு சோதனை வைக்காம பிள்ளை பிறந்திருது. 9.15க்கு வந்த பேஷண்டுக்கு 9.25க்கு பிரசவம். 10 நிமிஷத்துல பிள்ளையோட குவா குவா சத்தம் கேட்டதும், ஆஸ்பத்திரில இருந்த எல்லாருக்கும் ஒரே சிரிப்பு, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அடுத்து செய்ய வேண்டியதை யோசிச்சார் முனியப்பன். பிள்ளை பொறந்துருச்சு, இனி CORD STRUCTURES கட் பண்ணணும். PLACENTA வெளிய வரணும். பிறந்த குழந்தய MECONIUM சுத்தம் பண்ணணும்.
முனியப்பன் வெளில நின்ன ஒரு ஆட்டோல ஏறி பக்கத்துல இருந்த lady டாக்டர் கிட்ட போய் சொன்ன உடனே, அவங்க ஒரு உதவியாளரை அனுப்புனாங்க. முனியப்பன் இல்லாம தாயும் பிள்ளையோட வள்ளி தனியா. வள்ளிக்கு இது புது அனுபவம். முனியப்பன் 7 நிமிஷத்துல ஆளோட திரும்பி வந்துர்றார். அதுக்குள்ள மொபைல்ல வள்ளி "சார் கொடி கழுத்தச் சுத்தி இறுக்கமா இருக்கு", முனியப்பன் "ஒரு வெரல வச்சு அழுத்தமா பிடி" வள்ளி "பயமாயிருக்கு" முனியப்பன் "பயப்படாத" இப்படி வேற calls.
வள்ளியும் அந்த உதவியாளரும் சேர்ந்து தாயையும், பிள்ளையையும் சுத்தம் பண்ணி, எல்லா வேலையும் முடிஞ்சுருது. தாயும், பிள்ளையும் நலம். இரவு மணி 10.20, 9.10க்கு வயித்த வலியோட வந்த பொண்ணு 10.20க்கு கைல குழந்தையோட. தாயையும், பிள்ளையையும் பேறு காலத்துக்கான அடுத்த கட்ட மருத்துவ கண்காணிப்புக்கு அதே lady டாக்டர்கிட்ட அனுப்பிர்றார் முனியப்பன்.
இதுக்கிடைல, முனியப்பன் கிளினிக் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அப்படின்னு ஒரு கூட்டம் சேந்துருது. எல்லாரும் அந்தப் பொண்ணோட தாயாரை வைறாங்க "மக வயிறு வீங்கியிருக்கு, மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாம போச்சு"ன்னு.
இதுக்கெல்லாம் காரண கர்த்தா அந்தப் பொண்ணோட ஆம்படையான் இப்ப வர்றான். கோவிலுக்கு மாலை போட்டிருக்கான். முனியப்பன் அவனைக் கோபமாகவே கேட்கிறார், "ஏம்ப்பா ஒன் பொண்டாட்டி மாசமா இருக்கது ஒனக்கு எப்படிப்பா தெரியாம போச்சு" அதுக்கு அவன் "சாமி, நான் ஒண்ணும் செய்யலை, மாலை போட்ருக்கேன் சாமி" அப்படின்றார். முனியப்பனுக்கு கடுப்பாயிருது "எலேய் நீ இப்ப தாண்டா மாலை போட்ருக்கே " அப்படின்றார்.
ஒரு பொண்ணு மாசமாயிருக்கது அந்தப் பொண்ணுக்கோ, தாயாருக்கோ, வீட்டுக் காரனுக்கோ எப்படி தெரியாம இருக்கும் ? முழு கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும் ?.
Subscribe to:
Posts (Atom)
