Saturday, October 23, 2010

I acept my defeat Dr.SR

முனியப்பன் படிச்சு முடிச்சு, ஹவுஸ் ஸர்ஜன் பண்றப்ப Surgeryல DR.S.ராமகிருஷ்ணன் ms, 4th யூனிட் chiefஆ இருந்தார்.அப்பல்லாம் Super speciality பிரிவுகள்
சென்னைல MMCல மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நேரம். DR.SR தலைல இருந்து கால் விரல் வரை உள்ள எந்த பார்ட்டா இருந்தாலும், ENT , கண் தவிர Operation
பண்றவர். அந்த காலகட்டத்துல அப்டமன் ஸ்கேன். CT ஸ்கேன். MRI ஸ்கேன் இதெல்லாம் கெடையாது. மருத்துவ அனுபவத்தை வச்சுதான் Treatment.

DR.S.R. திறமை முனியப்பனை SR பக்கம் ஈர்த்துச்சு SR யூனிட்லதான் ஹவுஸ் ஸர்ஜனா இருந்தார் முனியப்பன் . பொதுவா மருத்துவ மாணவர்கள்கிட்ட
ஆப்ரேஷன் பண்ற Surgeons தான் attraction. Surgeonsனா அவ்வளவு Craze.ஒடம்ப அறுத்து ஒட்ட வச்சு உசிர காப்பாத்தி Emergency surgeriessல தூள் கெளப்புவாங்க. அதுலயும் ரொம்பத் தெறமையான Surgeions மருத்துவ மாணவர்கள் மத்தில மிகவும் விரும்பப்படற ஆளா இருப்பாங்க.

அப்படி ஒரு Surgeonதான் Dr.S.R. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 4வது யூனிட் chief. Dr.S.R major operation பண்றத பாக்க அடுத்த Unit studentsம் வந்துருவாங்க Thyroid surgeryல மத்த எல்லா Unitலயும் Patientக்கு blood ஒரு பாட்டில் ஏத்துவாங்க.SR மட்டும் blood ஏத்தாமலே Operate பண்ணுவார். முனியப்பன் SRகிட்ட கேட்டார்,"ஏன் சார் நீங்க மட்டும் Blood போட மாட்டீங்கிறீங்க" DR SR சொன்னார், "Dont Insult me" SRக்கு அவர் மேல , அவர் Surgery மேல அவ்வளவு confidence. SR சொன்ன காரணம் " மத்தவங்கள்ளாம் Thyroid surgery யப்ப Surgical shock வந்துரலாம்னு பயந்துகிட்டு Blood போடுறாங்க , நம்ம எதுக்குப்பா பயப்படனும்?

SRன் இந்த boldness முனியப்பனுக்கு பிடிச்சுப் போக, ஹவுஸ் ஸர்ஜனா Surgeryல SR unitல 1 வருஷம் முனியப்பன் வேல பாத்தார்.சீனியர் house surgeonனா stipend கெடையாது. Fees கட்டி வேல பாக்கனும். SRகிட்ட வேல பாத்த 1 வருஷம்தான் முனியப்பனுக்கு எந்த Case ஆ இருந்தாலும் எதிர் கொள்ள தைரியத்தை குடுத்துச்சு.

Senior House Surgeon ஆ வேல பாக்க ஆரம்பிச்சு முனியப்பனுக்கு DR.SRம் அவரோட Asst. Sr ஸ்டீபனும் நல்லா பாடம் சொல்லி கொடுத்தாங்க. Operation பண்றப்ப instrumentஅ சரியா பிடிக்கலை, அவங்க கேட்டகிற கேள்விக்கு பதில் சொல்லலை அப்படின்னா முனியப்பனுக்கு அடி விழுகும், அவங்க கைல என்ன Instrument இருக்கோ அத வச்சு முனியப்பனை அடிப்பாங்க.

நாளா வட்டத்துல முனியப்பனும அவங்ககிட்ட instrument அடி வாங்காத அளவுக்கு தேறிட்டார். SRக்கு 2 Asst . Dr. ஸ்டீபன் மாறிப் போனப்பெறகு Dr.சிதம்பரம் ms & Dr பாலஸ் . இவங்க ரெண்டு பேரும் புதுசுங்கிறதால latest விஷயங்களை முனியப்பனுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

Operation தியேட்டர்ல 3 டேபிள் இருக்கும். மொத டேபிள்ல SRம் ஒரு Asstம் case பண்ணுவாங்க. அடுத்த டேபிள்ல ஒரு Asst case பண்ணுவார். மூணாவது டேபிள்ல முனியப்பன் ஒரு House surgeon அ தொனைக்கு வச்சுகிட்டு Case பண்ணுவார்.
TVMCH திருநெல்வேலி medical college Hospitalல இப்ப 7 Surgical unit இருக்கு. அப்ப 4 unitதான் . அதனால 7 admission day ஒரு மாசத்துக்கு வரும். அந்த 7 நாளும் 24 மணி நேர duty. காலை 7 மணில இருந்து அடுத்த நாள் காலைல 7 மணிவரைக்கும் அந்த unitதான் பொறுப்பு. அடிபட்டு வர்ற Accident case, emergency surgery, ஏற்கெனவே உள்ள ward case அப்படின்னு 24 மணி நேரம் போறதே தெரியாது. மத்த யூனிட் chief லாம் admission day அன்னைக்கும் அவங்க rounds முடிஞ்ச ஒடனே கெளம்பிருவாங்க. ஆனா DRSR அந்த 7 நாளும் TVMC ஆஸ்பத்திரிய விட்டு வெளிய போக மாட்டார். அவசர கேஸ், accident கேஸ்ல அவர் Opinion வாங்கலாம், ரொம்ப
தேவைன்னா, emergency surgeryக்கும் வந்துருவார்.admission Day அன்னைக்கு incharge 1 asst தான் . ஆனா Chiefம் availableஆ இருக்காது SR மட்டும்தான். patient result அவருக்கு முக்கியம். அதே மாதிரி iv unitல postingல வர்ற, 3rd, 4th, final year studentsக்கு classம் நல்லா எடுப்பார். Dr Srகிட்ட எல்லா வார்டும் rounds போற ஒரே ஆளட முனியப்பன் மட்டும்தான்.

இப்படி போய்க்கிட்டிருக்கும் போது ஒரு abdomen case வயித்துல கட்டி, மேல வயித்துல, patient lady, Major operationன்னா ஒரு Asst, முனியப்பனோடதான் களம் எறங்குவார் DRSR. வயித்துல கட்டின்னு abdomenஅ oppen பண்ணா, அது ரொம்ப அபூர்வமான Cancer கட்டி operation பண்ண முடியாத அளவுக்கு Fix ஆகியிருக்கு. SR ஒரே வார்த்தைதான் சொன்னார் "I accept my defeat" எவ்வளவு பெரிய வார்த்தை மத்தவங்கள மாதிரி சப்பக் கட்டு கட்டாம தோல்விய ஒத்துக்கற மனசு யாருக்கு வரும் அதான் Dr.Sr.

Monday, October 18, 2010

ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ

அமர், அஷீவின் அப்பா பெர்னாட்ஷா 1995ல் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிப் போறவர்.

பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.

அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான்.
கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்

காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.

இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.

அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.

Monday, October 11, 2010

பகல் கொள்ளை

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.

முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.

8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.

அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.

"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .

சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.

Saturday, October 2, 2010

அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்

முனியப்பனின் அம்மாதான் சின்னத்தாய். படிப்பு அந்தக் காலத்து SSLC. மதுரைல OCPM & Capron hall ஸ்கூல்ல Hostelல தங்கி படிச்ச வருடங்கள் 1943 to 1949. எல்லா ஸ்கூல்லயும் Prayer நடக்கும். சின்னத்தாய் காலத்துல Prayer என்ன தெரியுமா "Long live queen victoria". பிரிட்டிஷ்க்காரன் ஆட்சில இந்தியா இருந்த நேரம்.

அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.

இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"

அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது. அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.

தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.

Monday, September 27, 2010

மார்ஷல் அமர் ஸ்டார்ட்







மார்ஷல் அமர் ஸ்டார்ட்

அமர், அஷீவோட அண்ணன். 9 வயசாகுது. நல்ல Photographer. அவர் எடுத்த photos பின்னால ஒரு பதிவுல வரும்.

மார்ஷல் அமரோட அண்ணன், செல்லம். மார்ஷலுக்கு வயசு 2. மார்ஷல் கன்னிங்கற வகைய சேர்ந்த வேட்டை நாய். கன்னிங்கறது திருநெல்வேலி, ராஜபாளையம், அம்பாசமுத்திரம் பகுதில உள்ள வேட்டை நாய். அவ்வளவு அறிவு, பாசம் உள்ள நாய். வீட்ல உள்ள பொருட்கள், உயிரினங்களை ஒண்ணும் செய்யாது. காவலுக்கு கெட்டிகாரன். வேற யாரும் மூச்.


முனியப்பன் வீட்ல அமருக்காக வாங்குனதுதான் மார்ஷல். கன்னிவகை. மார்ஷலை ஒருநாள் குட்டில இருந்தே வளத்து வருவது வீட்ல உள்ள எல்லோரும்தான். இருந்தாலும் மார்ஷல், அமர் நட்பு தனி. மார்ஷலும், அமரும் ஓடி பிடிச்சு விளையாடுவாங்க கொஞ்சுவாங்க.

இப்ப கொஞ்ச காலமா புது வெளையாட்ட வெளையாடுறாங்க மார்ஷலும் அமரும். அமர் காலைல குளிச்சு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டுன ஒடனே முனியப்பன் அமருக்கு இட்லி ஊட்டுவார். இப்ப வெளையாட்டே அந்த இட்லிய வச்சுதான்.

மார்ஷல பின்னால கட்டிப் போட்டுருப்பாங்க. "ரெடி, ஸ்டார்ட்" ன ஒடனே, அமர் வீட்ல பின்னால போய் சந்து வழியா முன்னால வருவார், இல்ல பின் பக்கமே வந்துருவார். அவர் வர்ற பக்கத்தை மார்ஷல் காட்டிக் குடுத்துரும். மார்ஷல் அமர் எந்தப் பக்கம் போறாரோ அந்தப் பக்கம் திரும்பிரும்.சே அப்படின்னு சொல்லிகிட்டே அமர் இட்லிய சாப்பிடுவார்.

இப்ப ஒரு மூணு நாளா மார்ஷல் தோத்திருது. காரணம் அமர் வளக்குற 2 பூனை. 2 பூனையும் வீட்ல பின்னால தோட்டத்துக்கு வந்துருது. மார்ஷல் அமரை பாக்குமா, பூனைய பாக்குமா. மார்ஷலோட கவனம் பூனை பக்கம் போயிர்றதால அமர் win பண்ணிர்றார். அதுவும் 50%தான். பூனை disturb பண்ணியும் மார்ஷல் 50% அமர் மேல கவனம் வச்சிருக்கும்.

மார்ஷல் முனியப்பன் வீட்ல எல்லாருக்கும் செல்லம். வீட்டுக்கு சரியான காவல்காரன் மார்ஷல். வெளி ஆள். வேற ஆள் யாரும் உள்ள enter ஆக முடியாது. அமர் மார்ஷலை அண்ணண்னுதான் கூப்பிடுவார். மார்ஷல் அமர் உறவு ஒரு தனி காவியம்

Monday, September 20, 2010

முனியப்பா கூப்பிட்டியா - சுரா

முனியப்பா கூப்பிட்டியா - சுரா


முனியப்பனின் பள்ளி நண்பர் சுரா. இப்ப சென்னைல இருக்கார். Cellல எப்ப கூப்பிட்டாலும்
எடுக்க மாட்டார். திடீர்னு ரெண்டு மாசம் கழிச்சு சுரா "முனியப்பா கூப்பிட்டியா" ம்பார். இது எதுக்கு என்னன்னு புரியலை முனியப்பனுக்கு. நேத்து தினமணி ஜீவாகிட்ட பேசிகிட்டிருக்கப்ப ஜீவா சொன்ன விஷயங்கள். சுரா எப்பவும் Cell போன silent modelல வச்சிருக்கவர். அவருடைய தொடர்புகள் அதிகம். சுரா எழுத்தாளர்ங்கிறதால அடுத்து என்ன எழுதறதுன்னு அதே சிந்தனைல இருக்கவர். அந்த சிந்தனை ஓட்டம் தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த silent mode.

urgent ஆ சுராகிட்ட பேசனும்னா அதுக்கு ஒரே வழி லேகா ரத்னகுமார்கிட்ட சொல்லிரனும். லேகா அட்வர்டைசிங் ரத்னகுமார் சுராகிட்ட சொல்வார். சுராவும் என்ன, ஏதுன்னு பேசிருவார். லேகா ரத்ன குமார் சுராவோட நெருங்கிய நண்பர், சுரா டெய்லி விசிட் பணற ஆபீஸ். இதயம் நல்லெண்ணெக்கு ஆரம்ப காலம் முதல் இன்னைக்கு வரைக்கும் Ad நம்ம லேகா ரத்னகுமார்தான்.

இப்ப சுராவ பத்தி சில வரிகள். சுரா தமிழர்னாலும் மூணார் பக்கத்துல செண்டுவாரைல வளந்தவர். ஆரம்ப கால படிப்பு கேரளாங்கிறதால மலையாளம் எழுத படிக்கத் தெரிந்தவர், சுரா. அப்புறம் High School, college- மதுரை, அப்புறம் சென்னை. கல்லூரில படிக்கிற காலத்துல கையெழுத்து பிரதி நடத்துனவர் சுரா. அப்ப இருந்தே அவருக்கு எழுத்து மோகம். சென்னைக்கு போனவர் சாவி வார இதழ்ல, அப்புறம் குங்குமம், பிலிமாலயா பத்திரிகைல பணி புரிஞ்சார். எடைல சினிமால PRO வா கால் வச்சார். அவர் மக்கள் தொடர்பாளரா பணியாற்றிய திரைப்படங்கள் 180க்கு மேல். பல நடிகர்களுக்கு PRO வா வேற இருந்தார். இவ்வளவு தூரம் இருந்தாலும் எளிமையானவர் சுரா. இன்னம் Busல, Share autoலதான் பயணங்கள்.நக்கீரன் கோபாலுக்கு நல்ல நண்பர் சுரா. நக்கீரன் பதிப்பகத்துல இருந்து வர்ற இனிய உதயம் மாத இதழ்ல இதுவரைக்கும் இவரோட மொழி பெயர்ப்பு நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.

திரை உலக புள்ளி விவரங்கள் அவருக்கு அத்துபடி. Press council மற்றும் திரை உலக PRO சங்கத்துல அவர் உறுப்பினர். எழுத்து, இலக்கிய விழாக்கள், Book fair தான் அவரோட மூச்சு.இப்ப 11.09.10ல முனியப்பன பாக்க பள்ளி நண்பர் Naval officer சங்கர் வந்திருந்தார். சுராவ பத்தி பேச்சு வந்த உடனே "அவன கூப்பிடுன்னு" சங்கர் சொல்ல முனியப்பன் "அவன் போன எடுக்க மாட்டான்பா" அப்படின்னு சொல்லிகிட்டே அரைகுறை மனதோட Cellல சுராவ கூப்பிட்டா, அதிசியம், சுரா போன attend பண்ணிட்டார்.

அப்ப சுரா சொன்ன விஷயம் இது. " இந்த வார குமுதம் பாத்தியா" அப்படின்னு கேட்ட சுரா. மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராஜீவ் காந்தி வந்த விஷயத்தை போட்ருக்கத சொல்லி, ராஜீவ் காந்தி மதுரைக்கு ஏன் வந்தார் அப்படிங்கிறதையும் சொன்னார். சுராகிட்ட கலந்துரையாடி போடப்பட்ட செய்தி அது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான கும்பிட Plan பண்ண ராஜீவ்காந்திய பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல உள்ள சனீஸ்வர பகவான கும்பிட அழைச்சு வந்திருக்காங்க. ஏற்பாடு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் V.N.சிதம்பரம். அடுத்து சுரா சொன்ன விஷயம்தான் ஹைலைட்டே. "சிவாஜி காவடி எடுத்திருக்கார் தெரியுமா ஒனக்கு" கேட்ட சுரா detail ஆ சொல்றார். சிவாஜி கணேசன் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக இலங்கைல இருக்கார். அப்ப வீட்ல பேரப்புள்ளக எல்லாம் பெண்குழந்தைகள். அப்ப சிவாஜியோட கடைசி மக தேன்மொழி மாசமா இருக்காங்க. சிவாஜி இலங்கைல உள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்ல வேண்டிக்கிறார். அடுத்த பேரப்பிள்ளை ஆம்பிள புள்ளயா பெறக்கும்போது ஒனக்கு
காவடி எடுக்கிறேன்னு வேண்டுதல். ஆம்பிள புள்ள பேரப்புள்ளயா பொறந்திருது.
காலங்கள் ஓடுது. இலங்கைல சூழ்நிலை சரியில்லாததால சிவாஜியால அங்க போக முடியல.
மனிதர்கள்கிட்டயே கடன் வைக்காதவர் சிவாஜி. கடவுள்கிட்ட கடன் வைப்பாரா?. அப்ப V. N.
சிதம்பரம் சிவாஜிகிட்ட சொல்றார். இலங்கை முருகன் மாதிரி பழமுதிர் சோலைல இருக்கு. காவடிய அங்க எடுக்கலாம்னு. சிவாஜி சரின்றார். காவடி எடுக்க வந்த சிவாஜிக்கு ஒடம்பு சரியில்லாம போகுது. அப்புறம் என் உயிர் போனாலும் முருகன் கோயில்ல போகட்டும்னு சிவாஜி கணேசன் காவடி எடுத்துர்றார். இந்த மேட்டர் அடுத்து வரும் குமுதம் வார இதழ்ல வருது. சுரா ஒரு தகவல் களஞ்சியம். சுரா போன எடுக்காதத பத்தி எழுத ஆரம்பிச்சு, கடைசில V.N.சிதம்பரம், சிவாஜி பத்தின செய்திகள்ளாம் பாருங்க. V.N. சிதம்பரத்த பத்தி நெறய விஷயங்கள் சொன்னார் சுரா.

சுப்பையா மகன் ராஜசேகர்தான் சுரா. சுராவும் முனியப்பனும் 1973ல எடுத்த போட்டோவும்
சுராவோட சமீபத்து போட்டோவும் இந்த பதிவுல உண்டு. ரெண்டு பேர் இருக்க போட்டோல வெள்ள சட்டை தலைல முடி நெறய இருக்கவர்தான் முனியப்பன், அடுத்தவர் சுரா.


Friday, September 17, 2010

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்க பாண்டி மதுரைல உள்ள கட்டிட காண்ட்ராக்டர்கள்ல ஒரு பெரிய லெவல் ஆள். அவருக்கு காய்ச்சல் அடிக்குது.முனியப்பன் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றார். 102 டிகிரி. அடுத்தநாளும் வர்றார். அன்னைக்கும் 102. முனியப்பன் தங்கபாண்டிய இன்னம் 2 நாளைக்கு
Rest எடுக்க சொல்றார்.

தங்கப்பாண்டி முனியப்பனின் நண்பரும் கூட .சிரிச்சிகிட்டே தங்கப்பாண்டி "நாளைக்கு ஊருக்கு போகனும், Rest எடுக்க முடியாதுங்கிறார்". முனியப்பன் "ஒரு நாள் Rest எடுத்துட்டு அடுத்த நாள் போங்கன்றார்". தங்கபாண்டி நாளைக்கு தூத்துக்குடிக்கு வர்றதா வாக்கு கொடுத்திட்டேன். 15 வருஷமா பேசாம இருந்த தங்கச்சிப் பாக்க ஊருக்கு போறேன்றார். வர்றதா சொல்லியாச்சு போகாமா இருந்தா நல்லா இருக்காது அப்படிங்கிறார்.
கருகிய உறவு துளிர் விடும் போது அதற்கு குறுக்க நிக்க முடியுமா? நிக்கலாமா?

தமிழனின் பலமே உறவுகள்தான். அப்படிப்பட்ட உறவுகள் சிதைந்து சின்னாபின்னாமாயிருக்கும் இந்த காலகட்டத்தில் முறிந்த உறவை
மீண்டும் மலரச் செய்யும் தங்கபாண்டி மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.