முனியப்பன்கிட்ட வேலை பாக்குற வள்ளி இருக்காங்களே வெளி உலகம் தெரியாம வளந்தவங்க இப்ப கல்யாணம் ஆகி வீட்டுக்காரர் டூவீலர்ல மதுரய சுத்துறாங்க. அவங்க சொந்தகாரங்க வீட்டு விசேஷம் - ராமநாதபுரம் மாவட்டத்துல மதுரய விட்டு வெளி மாவட்டத்துக்கு டூவீலர்ல வீட்டுக்காரரோட சந்தோஷமா போறாங்க. போக வேண்டிய ஊருக்கு போற வழில ஜிலு ஜிலுன்னு காத்து, மழை. போன எடத்துல இருட்டாயிடுச்சு, மழை வேற பெய்யுது, "தங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க". வள்ளி வீட்டுக்காரரோட அங்க தங்கிர்றாங்க. விடிய விடிய காத்து மழை. வள்ளி சந்திக்காத Climate. அடுத்த நாள் அந்த Climate, எடத்த விட்டு பிரிய மனசில்லாம அங்கருந்து கெளம்பி மதுரைக்கு வந்து வேலைக்கும் வந்துர்றாங்க. மதுரைல அணலடிக்குது. வெக்கை தாங்க முடியாம வள்ளி முனியப்பன்கிட்ட, "நீங்கல்லாம் எப்படித்தான் மதுரைல இருக்கீங்களோ அங்கல்லாம் குளு குளுன்னு இருக்கு". ராமநாதபுரத்த பத்தி அவங்களுக்கு ஊட்டி மாதிரி ஒரு எண்ணம் உண்டாயிடுச்சு. அவங்க அனுபவிச்ச Climateஐ ரசிச்சு சொல்றாங்க. முனியப்பனுக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?. லைலா புயல் கடலோர மாவட்டங்கள்ல காத்தோட மழைய குடுத்துச்சு. வள்ளி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு போனப்ப லைலா புயலோட எபக்ட் அங்க. அதனால தான்,
புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.
Friday, June 11, 2010
Wednesday, May 19, 2010
நெனச்சு கலலைப்படுறியா - அஷீ
முனியப்பனின் அய்யாம்மா (அப்பாவை பெத்த மகராசி) குருவம்மா 7 பிள்ளையை பெத்துட்டு 1939ல இறந்துர்றாங்க. அவங்க மகன் (முனியப்பனோட அப்பா) கு. வேலுசாமி நீதித்துறையில பணியாற்றினதால முனிப்பபனும் பல ஊர்கள்ல படிச்சு வளர்ந்தார். அதனால சொந்தங்களோட உறவாடி வளர முனிப்பனுக்கு வாய்ப்பில்லாம போயிடுச்சு. கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சை விடுமுறையில மட்டும் சொந்தங்களை பார்க்க வாய்ப்பு. அதுலயும் மதுரை, M.கல்லுப்பட்டி, போடி, மூணார்னு ஒரு ரவுண்ட் சொந்தங்களை முழுமையா உணர முடியலை.
இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.
அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.
அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.
அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.
அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.
இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.
அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.
அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.
அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.
அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.
Tuesday, April 27, 2010
400 ரூபா - Bell's Palsy
மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
Monday, April 19, 2010
நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!
முனியப்பனுக்கு நேரும் நோயாளி அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும்.
20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.
முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.
அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.
பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.
20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.
முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.
அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.
பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.
Tuesday, April 6, 2010
மொட்டை- லட்சன்
நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
Tuesday, March 30, 2010
தோட்டக்காரன் முனியப்பன்
குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.
முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.







முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.







Tuesday, March 16, 2010
மன்னிக்க வேண்டுகிறேன்
கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
Subscribe to:
Posts (Atom)
