Saturday, July 19, 2008

சினிமா டிக்கட்

முனியப்பன் பக்கங்கள் (5)

சினிமா டிக்கெட் எப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும்.

1990 வரைக்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புன்னு பிரிச்சு ஒவ்வொரு Class-க்கும் தனித்தனி ரேட் வச்சிருப்பாங்க. Ticket Counter ல ஒரு rate எழுதி வச்சிருப்பானுக. Counterல அந்த rateக்கு தான் ticket

படம் House Full ஆன ஒடனே Black Marketல தியேட்டருக்கு வெளியே ticket விக்கிறதுக்குன்னே ஒரு group இருந்துச்சு. இடம் கிடைக்காதவங்க கள்ள மார்க்கெட் டிக்கெட்ட வாங்கிட்டு படம்பாக்க போவாங்க. 1990ல டிக்கெட் விலயை கூட்டனும்னு அரசாங்கத்துக்கு கோரிக்கை வச்சாங்க. தியேட்டரில் படம் பாக்க கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி கொடுத்துச்சு. Counter-ல எழுதியிருக்க ரேட்டுக்கே டிக்கெட்ட குடும்பாங்க. படம் house Full ஆனா black ல டிக்கட்ட வாங்கி பாப்பாங்க. இது 2001 வரைக்கும் தொடர்ந்துச்சு. Black-ல ticket விக்கறவனை Police பிடிச்சுட்டு போகும்

2001ல புதிய தமிழக அரசு அழைத்தவுடனே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்லாம் போய் அரசாங்கத்து கிட்ட போய் முறையிட்டாங்க. எங்க தொழில் ரொம்ப நசிஞ்சி போச்சு. அதனால திரைப்படம் வெளியிட்ட மொத ரெண்டு வாரத்துக்கு தியேட்டர்ல டிக்கட் கட்டணம் இல்லாம நாங்களே ஒரு நுழைவு கட்டணத்தை நிர்ணயிச்சு வாங்கிக்கிறோம்னாங்க. தமிழக அரசும் கட்டணத்தை கூட்டி மொத ரெண்டு வாரம் மட்டும் கூடுதலா வசூல் பண்ணிக்கலாம்னு உத்தரவு போட்டுச்சு.

Black Market யே காணோம் ஒழிஞ்சு போச்சு. தியேட்டர் கவுண்டர்லயே பகல் கொள்ளை, ராத்திரிக் கொள்ளை, கூட்டுக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டானுவ. Black Market காரன விட சம்பாதிக்க ஆரம்பிச்சானுக. கொள்ளையடிக்கிறதுக்கு ஒரு limitடே இல்லை.

உச்ச நட்சத்திரம் படம்னா 400 ரூபா வரைக்கும் விக்கிறானுக. தியேட்டர் கவுண்டர்லயே ticket சீட்டுல நுழைவு coupon மட்டும் தான் எழுதியிருக்கானுக. ஆனா அதுல டிக்கட் இவ்வளவுன்னு ரேட் கிடையாது. படம் ரிலீஸ் டயத்துல 100 ரூபாய்க்கு குறைச்சு டிக்கெட்டே குடுக்கிறதில்ல. கூட்டம் குறைஞ்ச பிறகும் டிக்கெட் கவுன்ட்டர்ல என்ன ரேட் எழுதியிருக்கோ அதை விட double ரேட்தான் வாங்குறாங்க. இத படத்தை தியேட்டரை விட்டு தூக்குற வரைக்கும் செய்றாங்க. இத அரசாங்கமும் வேடிக்கை பாக்குது.

உச்ச நட்சத்திரத்தின் கடைசியா வந்தா சத்ரபதி படத்தோடOpening Show Ticket தலைநகர்ல ரூ1500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு)

இப்படி இருக்கும் போது எப்படிய்யா படம் பாக்க தியேட்டருக்கு போவானுக ....?

திரைப்படங்களின் வாழ்நாள்

முனியப்பன் பக்கங்கள் (4)

ஒரு காலத்துல திரைக்கு வந்த அத்தனை படமும் குறைஞ்சது 25நாள் ஓடும். நல்ல படம்னா, 100 நாள் 175 நாள். அது MGR, சிவாஜி காலம். எல்லா ஊர்லயும் ஓடி முடிக்க 3 வருஷம் ஆகும். ரஜினி, கமல் ஆரம்ப காலங்கள்ல அப்ப கூட இதே நிலை இருந்துச்சு சினிமா தான் மக்களுக்கு ஒரே பொழுது போக்கு.

அப்புறம் படிப்படியா திரைப்படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரமே வெளியேற ஆரம்பிச்சது. நல்ல படங்கள் மட்டும் 50நாள் 100நாள் 175நாள் ஓட ஆரம்பிச்சது TV-ல, DD-ல திரைப்பட நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் திரைப்படம். மக்கள் இந்த ரெண்டு நேரமும் தெருவுல கூட நடமாடமாட்டாங்க.

அடுத்த காலகட்டம் 2நாள் 3நாள் ஓடக் கூடிய படங்கள்லாம் வர ஆரம்பிச்சது. பெரிய நடிகர்களின் படங்களும் 100 நாளை தாண்ட முடியாம போயிருச்சு. வெள்ளி விழா படங்களோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சது. அப்ப தனியார் சேனல்கள் நிறைய ஆரம்பிச்சாங்க. முக்கியமான நிகழ்ச்சியா எல்லா சேனல்லயும் திரைப்படங்கள், பாட்டுகள், கிளிப்பிங்ஸ் இடம் பெற ஆரம்பிச்சது. தியேட்டர்ல கூட்டம் குறைய ஆரம்பிச்ச உடனே, திரையுலகினர் எல்லாம் சேந்து TV மேல பழிய போட்டாங்க. எங்க வாழ்க்கையை TV கெடுத்துருச்சு அப்படின்னு பேச ஆரம்பிச்சாங்க.

TV-ல சினிமாவ காட்டுனதால தியேட்டர்ல கூட்டம் குறையல. உண்மை என்னன்னா இந்த கால கட்டத்துல மக்கள் சினிமா பாக்குறத குறைக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஒட்டு மொத்தமா தமிழ்நாட்ல உள்ள பிள்ளைக எல்லாம் Engineering, Medical, MBA, MCA -னு படிக்கிறதுல வாழ்க்கைல முன்னேற ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க Transport வசதிகள் வேன் டாக்ஸி அதிகமாச்சு. ஜனங்கள்லாம் கோவில், குளம், பிக்னிக்னு டூர் அடிக்க ஆரம்பிச்சாங்க. சினிமாவ மக்கள் மறக்க ஆரம்பிச்சு தமிழ்நாட்ல பாருங்க எல்லா ஜனமும் சம்பாதிக்க பொழைக்க ஆரம்பிச்சாங்க. டீக்கடை பெஞ்சுல ஒக்காந்திருக்கது வெட்டியா திரியறது எல்லாம் ரொம்பக் கொறைஞ்சிடுச்சி. எல்லாரும் வேலைபாக்க பொழைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது சினிமாக்காரனுக்கு புரியல TV-வந்து அவனுக வாழ்க்கையவே சீரழிச்சுட்டதா நெனக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்த காலகட்டம் பெரிய நடிகர்களோட படங்களே 20நாளைக்கு அப்புறம் காத்து வாங்க ஆரம்பிச்சிருச்சி ஒரு காட்சிக்கு 150பேர் வந்தாலே மிகப்பெரிய விஷயம். காட்சிய பாக்க ஆளில்லாம 4பேர் 5பேர் வந்தா எப்படி show காட்டுவான்? தியேட்டர்ல show வையே cancel பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 100 படம் வந்தா 10 படத்துக்கு போட்ட காசு திரும்பி வந்தாலே பெரிய விஷயமாயிருச்சு

மக்கள் ரொம்ப வெவரமாயிட்டாங்க. சினிமா ரசிகன், சினிமா பாக்கறவங்கன்னு ரெண்டு பிரிவா ஆயிருச்சு. சினிமா ரசிகன் அவனோட நடிகன் நடிச்ச படத்தை மட்டும் கண்டிப்பா பாத்துருவான். மத்த படத்த பாக்குறது ரெண்டாம்பட்சம். சினிமா பாக்குறவங்க குரூப் இருக்கு பாத்தியளா ரொம்ப ரொம்ப வெவரமானவுக. படம் தயாரிப்புல இருக்கும் போதே இந்தப்படத்தை பாக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணிருதாக

அப்ப அதிர்ச்சி வைத்தியம் சினிமாக்காரனுக்குத் தானவே வேணும். கண்டபடி படம் எடுக்கறத நிப்பாட்டி ஒழுங்கா படம் எடுத்தா படம் பாக்க வருவானுவ

மூணு வருடம் வாழ்நாளா இருந்த திரைப்படத்தோட இன்றைய வாழ்நாள் 100 நாட்களுக்குள் முடிந்துவிடுகிறது.