Tuesday, March 24, 2009

முனியப்பனும் கட்டு விரியனும்

முனியப்பன் தொழில் ஆரம்பிச்ச புதுசுல வீட்லயும் கேஸ் பார்ப்பார். ஒரு நாள் சாயங்காலம் 5 மணி இருக்கும் 7,8 பேர் வந்தாங்க. பாம்பு கடிச்சிருச்சுன்னாங்க. கடிபட்டவன் கடிபட்ட எடத்துக்கு மேல கால்ல துணிய டைட்டா கட்டியிருக்கான் ஒரு transparent பிளாஸ்டிக் பைய தூக்கி முனியப்பன் டேபிள்ல போட்டாங்க. அதுக்குள்ள குட்டி பாம்பு. 11/2 அடி நீளம் தான்.
கட்டு விரியன் (Russels viper). கடிச்ச பாம்ப சும்மா விடுவாங்களா, கொன்னுதான் கொண்டு வந்தாங்க.

முனியப்பன் பல்ஸ், BP பார்த்து ஒரு TT போட்டு லேட் பண்ணாம ஒடனே மதுரை இராசாசி மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட அனுப்பி வச்சுர்றார். அங்க ஒடனே அட்மிட் பண்ணி கட்டுவிரியன் விஷத்துக்கு மாத்து மருந்து போட்டு ஒரு வாரம் பெட்ல வச்சிருந்து காப்பாத்தி அனுப்புனாங்க.

பாம்புக்கடிய பாத்த ஒடனே முனியப்பனுக்கு "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" பழைய நினைப்பு வந்துச்சு.

நாகப்பாம்பு, கட்டுவிரியன் கடின்னா ஆளை காலி பண்ணிடும். ஒடனே வைத்தியம் பாத்தா காப்பாத்திரலாம். நாகப்பாம்பு விஷம் Neurotoxic, கட்டு விரியன் விஷம் Vasculo toxic, கட்டு விரியன் கடிச்சா இரத்தம் உறையற தன்மையை (Clotting) தன்மையை எழுந்துரும்.

முனியப்பன் பயிற்சி மருத்துவரா இருக்கப்ப பாம்புகடி (கட்டிப்புடி இல்ல) வைத்தியம் நெறய பாத்திருக்கார். கட்டு விரியன் கடிச்சவங்க இரத்தத்தை sample எடுத்து கண்ணுல படுற மாதிரி testtube அ பிளாஸ்டர் போட்டு சொவத்துல ஒட்டி வச்சிருவாங்க. இரத்தம் ஒறையுதான்னு பாக்கத்தான். எப்ப clott ஆகுதோ அதுவரைக்கும் இந்த மாதிரி blood sample அ , testtbeல சுவத்துல ஒட்டி வைச்சு பாத்துக்கிட்டேயிருக்கணும். ரொம்ப விறுவிறுப்பா
இருக்கும். clott ஆனாப்புறம்தான் நோயாளி பொழைச்சான்.

பாம்பு கடிப்பட்ட ஒடனே கால்ல கட்ட போட்டுகிட்டு வந்துட்டா 100% பொழைக்க சான்ஸ். கால்ல கட்ட போடாம, வாய்ல நுரை தள்ளின பெறகு வந்தா பொழைக்கிறது 50% தான்.
கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாது குட்டியா இருந்தாலும் கட்டு விரியின் கட்டுவிரியன்தான்.