Tuesday, July 6, 2010

அகதிக்கு இடமில்லை

ஈழத்தில் இடமில்லை
இங்கும் இடமில்லை
அங்கும் அடிமைதான்
இங்கும் மாற்றமில்லை
அந்நிய நாடுகளில் பலர்
அடைக்கலம் புகுந்தார்
வேலை செய்து பிழைத்தாலும்
வேற்று நாட்டில் புறக்கணிக்கப்படவில்லை
இங்கு அகதியாய் வந்தவர்
இன்னும் இன்னலில்
வக்கீலுக்கு படித்து
வழக்குரைக்க முடியவில்லை
பள்ளியில் மதிப்பெண் எடுத்த மாணவ அகதி தள்ளி வைக்கப்படுகிறான்.
தொழில் கல்வி தேர்வில் வாய்ச் சொற்களால்
அரசை வசைபாடும் சீமான்களே, புயல்களே அநத மாணவனுக்கு குரல் குடுத்தீரா?
அகதி நலனுக்கு என்ன போராடினாய்
தஞ்சம் புகுந்தவனை
தவிக்க விடும் அரசியலமைப்பே
தடைகளை தகர்த்து
தவிக்கும் அவனுக்கு இடம் கொடு
தமிழனாய்ப் பிறந்ததில் தவறில்லை
ஈழத்தின் வாரிசாய் பிறந்ததுதான் அவன் தவறு.
அதிலும் பெரும் தவறு
அவன் இங்கே தஞ்சம் புகுந்ததுதான்.

முனியப்பன் குமுறலுக்கு காரணம்
பாதிக்கப்பட்ட அகதியின் பெயர் : நாகராஜ்
வயது : 17
அகதி முகாம் : பாம்பார் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்
12th Medical cut off : 197.5
Engineering cut off : 197.83
அதியமான் மேல்நிலைப் பள்ளி
மறுக்கப்பட்ட காரணம் : இலங்கை அகதி
இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடையாது