Monday, September 27, 2010

மார்ஷல் அமர் ஸ்டார்ட்







மார்ஷல் அமர் ஸ்டார்ட்

அமர், அஷீவோட அண்ணன். 9 வயசாகுது. நல்ல Photographer. அவர் எடுத்த photos பின்னால ஒரு பதிவுல வரும்.

மார்ஷல் அமரோட அண்ணன், செல்லம். மார்ஷலுக்கு வயசு 2. மார்ஷல் கன்னிங்கற வகைய சேர்ந்த வேட்டை நாய். கன்னிங்கறது திருநெல்வேலி, ராஜபாளையம், அம்பாசமுத்திரம் பகுதில உள்ள வேட்டை நாய். அவ்வளவு அறிவு, பாசம் உள்ள நாய். வீட்ல உள்ள பொருட்கள், உயிரினங்களை ஒண்ணும் செய்யாது. காவலுக்கு கெட்டிகாரன். வேற யாரும் மூச்.


முனியப்பன் வீட்ல அமருக்காக வாங்குனதுதான் மார்ஷல். கன்னிவகை. மார்ஷலை ஒருநாள் குட்டில இருந்தே வளத்து வருவது வீட்ல உள்ள எல்லோரும்தான். இருந்தாலும் மார்ஷல், அமர் நட்பு தனி. மார்ஷலும், அமரும் ஓடி பிடிச்சு விளையாடுவாங்க கொஞ்சுவாங்க.

இப்ப கொஞ்ச காலமா புது வெளையாட்ட வெளையாடுறாங்க மார்ஷலும் அமரும். அமர் காலைல குளிச்சு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டுன ஒடனே முனியப்பன் அமருக்கு இட்லி ஊட்டுவார். இப்ப வெளையாட்டே அந்த இட்லிய வச்சுதான்.

மார்ஷல பின்னால கட்டிப் போட்டுருப்பாங்க. "ரெடி, ஸ்டார்ட்" ன ஒடனே, அமர் வீட்ல பின்னால போய் சந்து வழியா முன்னால வருவார், இல்ல பின் பக்கமே வந்துருவார். அவர் வர்ற பக்கத்தை மார்ஷல் காட்டிக் குடுத்துரும். மார்ஷல் அமர் எந்தப் பக்கம் போறாரோ அந்தப் பக்கம் திரும்பிரும்.சே அப்படின்னு சொல்லிகிட்டே அமர் இட்லிய சாப்பிடுவார்.

இப்ப ஒரு மூணு நாளா மார்ஷல் தோத்திருது. காரணம் அமர் வளக்குற 2 பூனை. 2 பூனையும் வீட்ல பின்னால தோட்டத்துக்கு வந்துருது. மார்ஷல் அமரை பாக்குமா, பூனைய பாக்குமா. மார்ஷலோட கவனம் பூனை பக்கம் போயிர்றதால அமர் win பண்ணிர்றார். அதுவும் 50%தான். பூனை disturb பண்ணியும் மார்ஷல் 50% அமர் மேல கவனம் வச்சிருக்கும்.

மார்ஷல் முனியப்பன் வீட்ல எல்லாருக்கும் செல்லம். வீட்டுக்கு சரியான காவல்காரன் மார்ஷல். வெளி ஆள். வேற ஆள் யாரும் உள்ள enter ஆக முடியாது. அமர் மார்ஷலை அண்ணண்னுதான் கூப்பிடுவார். மார்ஷல் அமர் உறவு ஒரு தனி காவியம்

Monday, September 20, 2010

முனியப்பா கூப்பிட்டியா - சுரா

முனியப்பா கூப்பிட்டியா - சுரா


முனியப்பனின் பள்ளி நண்பர் சுரா. இப்ப சென்னைல இருக்கார். Cellல எப்ப கூப்பிட்டாலும்
எடுக்க மாட்டார். திடீர்னு ரெண்டு மாசம் கழிச்சு சுரா "முனியப்பா கூப்பிட்டியா" ம்பார். இது எதுக்கு என்னன்னு புரியலை முனியப்பனுக்கு. நேத்து தினமணி ஜீவாகிட்ட பேசிகிட்டிருக்கப்ப ஜீவா சொன்ன விஷயங்கள். சுரா எப்பவும் Cell போன silent modelல வச்சிருக்கவர். அவருடைய தொடர்புகள் அதிகம். சுரா எழுத்தாளர்ங்கிறதால அடுத்து என்ன எழுதறதுன்னு அதே சிந்தனைல இருக்கவர். அந்த சிந்தனை ஓட்டம் தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த silent mode.

urgent ஆ சுராகிட்ட பேசனும்னா அதுக்கு ஒரே வழி லேகா ரத்னகுமார்கிட்ட சொல்லிரனும். லேகா அட்வர்டைசிங் ரத்னகுமார் சுராகிட்ட சொல்வார். சுராவும் என்ன, ஏதுன்னு பேசிருவார். லேகா ரத்ன குமார் சுராவோட நெருங்கிய நண்பர், சுரா டெய்லி விசிட் பணற ஆபீஸ். இதயம் நல்லெண்ணெக்கு ஆரம்ப காலம் முதல் இன்னைக்கு வரைக்கும் Ad நம்ம லேகா ரத்னகுமார்தான்.

இப்ப சுராவ பத்தி சில வரிகள். சுரா தமிழர்னாலும் மூணார் பக்கத்துல செண்டுவாரைல வளந்தவர். ஆரம்ப கால படிப்பு கேரளாங்கிறதால மலையாளம் எழுத படிக்கத் தெரிந்தவர், சுரா. அப்புறம் High School, college- மதுரை, அப்புறம் சென்னை. கல்லூரில படிக்கிற காலத்துல கையெழுத்து பிரதி நடத்துனவர் சுரா. அப்ப இருந்தே அவருக்கு எழுத்து மோகம். சென்னைக்கு போனவர் சாவி வார இதழ்ல, அப்புறம் குங்குமம், பிலிமாலயா பத்திரிகைல பணி புரிஞ்சார். எடைல சினிமால PRO வா கால் வச்சார். அவர் மக்கள் தொடர்பாளரா பணியாற்றிய திரைப்படங்கள் 180க்கு மேல். பல நடிகர்களுக்கு PRO வா வேற இருந்தார். இவ்வளவு தூரம் இருந்தாலும் எளிமையானவர் சுரா. இன்னம் Busல, Share autoலதான் பயணங்கள்.நக்கீரன் கோபாலுக்கு நல்ல நண்பர் சுரா. நக்கீரன் பதிப்பகத்துல இருந்து வர்ற இனிய உதயம் மாத இதழ்ல இதுவரைக்கும் இவரோட மொழி பெயர்ப்பு நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.

திரை உலக புள்ளி விவரங்கள் அவருக்கு அத்துபடி. Press council மற்றும் திரை உலக PRO சங்கத்துல அவர் உறுப்பினர். எழுத்து, இலக்கிய விழாக்கள், Book fair தான் அவரோட மூச்சு.இப்ப 11.09.10ல முனியப்பன பாக்க பள்ளி நண்பர் Naval officer சங்கர் வந்திருந்தார். சுராவ பத்தி பேச்சு வந்த உடனே "அவன கூப்பிடுன்னு" சங்கர் சொல்ல முனியப்பன் "அவன் போன எடுக்க மாட்டான்பா" அப்படின்னு சொல்லிகிட்டே அரைகுறை மனதோட Cellல சுராவ கூப்பிட்டா, அதிசியம், சுரா போன attend பண்ணிட்டார்.

அப்ப சுரா சொன்ன விஷயம் இது. " இந்த வார குமுதம் பாத்தியா" அப்படின்னு கேட்ட சுரா. மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராஜீவ் காந்தி வந்த விஷயத்தை போட்ருக்கத சொல்லி, ராஜீவ் காந்தி மதுரைக்கு ஏன் வந்தார் அப்படிங்கிறதையும் சொன்னார். சுராகிட்ட கலந்துரையாடி போடப்பட்ட செய்தி அது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான கும்பிட Plan பண்ண ராஜீவ்காந்திய பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல உள்ள சனீஸ்வர பகவான கும்பிட அழைச்சு வந்திருக்காங்க. ஏற்பாடு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் V.N.சிதம்பரம். அடுத்து சுரா சொன்ன விஷயம்தான் ஹைலைட்டே. "சிவாஜி காவடி எடுத்திருக்கார் தெரியுமா ஒனக்கு" கேட்ட சுரா detail ஆ சொல்றார். சிவாஜி கணேசன் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக இலங்கைல இருக்கார். அப்ப வீட்ல பேரப்புள்ளக எல்லாம் பெண்குழந்தைகள். அப்ப சிவாஜியோட கடைசி மக தேன்மொழி மாசமா இருக்காங்க. சிவாஜி இலங்கைல உள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்ல வேண்டிக்கிறார். அடுத்த பேரப்பிள்ளை ஆம்பிள புள்ளயா பெறக்கும்போது ஒனக்கு
காவடி எடுக்கிறேன்னு வேண்டுதல். ஆம்பிள புள்ள பேரப்புள்ளயா பொறந்திருது.
காலங்கள் ஓடுது. இலங்கைல சூழ்நிலை சரியில்லாததால சிவாஜியால அங்க போக முடியல.
மனிதர்கள்கிட்டயே கடன் வைக்காதவர் சிவாஜி. கடவுள்கிட்ட கடன் வைப்பாரா?. அப்ப V. N.
சிதம்பரம் சிவாஜிகிட்ட சொல்றார். இலங்கை முருகன் மாதிரி பழமுதிர் சோலைல இருக்கு. காவடிய அங்க எடுக்கலாம்னு. சிவாஜி சரின்றார். காவடி எடுக்க வந்த சிவாஜிக்கு ஒடம்பு சரியில்லாம போகுது. அப்புறம் என் உயிர் போனாலும் முருகன் கோயில்ல போகட்டும்னு சிவாஜி கணேசன் காவடி எடுத்துர்றார். இந்த மேட்டர் அடுத்து வரும் குமுதம் வார இதழ்ல வருது. சுரா ஒரு தகவல் களஞ்சியம். சுரா போன எடுக்காதத பத்தி எழுத ஆரம்பிச்சு, கடைசில V.N.சிதம்பரம், சிவாஜி பத்தின செய்திகள்ளாம் பாருங்க. V.N. சிதம்பரத்த பத்தி நெறய விஷயங்கள் சொன்னார் சுரா.

சுப்பையா மகன் ராஜசேகர்தான் சுரா. சுராவும் முனியப்பனும் 1973ல எடுத்த போட்டோவும்
சுராவோட சமீபத்து போட்டோவும் இந்த பதிவுல உண்டு. ரெண்டு பேர் இருக்க போட்டோல வெள்ள சட்டை தலைல முடி நெறய இருக்கவர்தான் முனியப்பன், அடுத்தவர் சுரா.


Friday, September 17, 2010

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்க பாண்டி மதுரைல உள்ள கட்டிட காண்ட்ராக்டர்கள்ல ஒரு பெரிய லெவல் ஆள். அவருக்கு காய்ச்சல் அடிக்குது.முனியப்பன் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றார். 102 டிகிரி. அடுத்தநாளும் வர்றார். அன்னைக்கும் 102. முனியப்பன் தங்கபாண்டிய இன்னம் 2 நாளைக்கு
Rest எடுக்க சொல்றார்.

தங்கப்பாண்டி முனியப்பனின் நண்பரும் கூட .சிரிச்சிகிட்டே தங்கப்பாண்டி "நாளைக்கு ஊருக்கு போகனும், Rest எடுக்க முடியாதுங்கிறார்". முனியப்பன் "ஒரு நாள் Rest எடுத்துட்டு அடுத்த நாள் போங்கன்றார்". தங்கபாண்டி நாளைக்கு தூத்துக்குடிக்கு வர்றதா வாக்கு கொடுத்திட்டேன். 15 வருஷமா பேசாம இருந்த தங்கச்சிப் பாக்க ஊருக்கு போறேன்றார். வர்றதா சொல்லியாச்சு போகாமா இருந்தா நல்லா இருக்காது அப்படிங்கிறார்.
கருகிய உறவு துளிர் விடும் போது அதற்கு குறுக்க நிக்க முடியுமா? நிக்கலாமா?

தமிழனின் பலமே உறவுகள்தான். அப்படிப்பட்ட உறவுகள் சிதைந்து சின்னாபின்னாமாயிருக்கும் இந்த காலகட்டத்தில் முறிந்த உறவை
மீண்டும் மலரச் செய்யும் தங்கபாண்டி மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.

Thursday, September 9, 2010

கரைச்சாச்சு என்ன செய்றது திலகம்

கண்ரமாணிக்கத்தை சேர்ந்த ராமநாதன் - திலகம் மதுரைல இருக்காங்க. ராமநாதன் மருந்துக்கடைல வேலை பாக்கிறவர். அவர் மகனும் மதுரைல ஒரு மருந்துக் கம்பெனில வேல பாக்குறான்.

ராமநாதன் 55 வயசாச்சு, முடியெல்லாம் கிட்டத்தட்ட நரைச்சிருச்சு. ஆனா dye அடிக்காம 10 வருஷமா இருக்கார். திலகத்துக்கு மூட்டு வலின்னு ட்ரீட்பெண்டுக்கு வாராங்க. அப்ப ராமநாதன் தலைமுடி full ஆ கறுப்பாயிருக்கு. என்னன்னு கேட்டா ராமநாதன் சிரிக்கிறார்.திலகம் ஒரு போடு போட்டாங்க பாருங்க முனியப்பன் அசந்துட்டார் "கரைச்சாச்சு" மீதியாய் போச்சு. அப்புறம் என்ன செய்றது?" திலகம் தலைக்கு dye அடிக்க கரைச்சது அதிகமாகவும், அதை waste பண்ணாம அவங்க வீட்டுக்காரருக்கு அடிச்சு விட்டுட்டாங்க