குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.
முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.
Tuesday, March 30, 2010
Tuesday, March 16, 2010
மன்னிக்க வேண்டுகிறேன்
கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!
சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.
முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.
Subscribe to:
Posts (Atom)