தந்தையிடம் வளர்ந்த
தனயன் முனியப்பன்
தவழ ஆரம்பித்தவுடன்
தந்தையிடம் சேர்ந்தவன்
மழலைகள் வளர்வதைக் கண்டு
மகிழ்ச்சி அடைந்தவன் நீ
காய்ச்சல் முனியப்பனுக்கு
கைகோர்த்து பக்கத்தில் படுப்பாய் நீ
பறந்து விடும் காய்ச்சல்
மறுபடி வராது
வெள்ளம் சூலப்புரம் ஓடையில் மகனை
தோளில் தூக்கி வெள்ளத்தைக் கடந்தவன் நீ
இரு தோள்களில்
இரு மகன்களையும் தொங்க விட்டு
சுற்றி விளையாடிய
சூப்பர் தந்தை நீ
காலாண்டு அரையாண்டு விடுமுறைக்கு
கல்லுப்பட்டி போடி மதுரை
முழுப்பரீட்சை லீவுக்கு
மூணார் camp ஒரு மாதம்
அனுப்பி வைத்தவன் நீ விடுமுறையை
அனுபவித்தவர்கள் நாங்கள்
அச் அம்மா தும்முவார்கள்
அச் அப்பா தும்மியவன் முனியப்பன்
செல்ல வேண்டும் சுற்றுலா
சென்று வா
மருத்துவம் படிக்கணும்
மறுக்காத தந்தை நீ
உன்னிடம் பிடித்தது
உணர்வுடன் நீ கொடுத்த சுதந்திரம்
எதில் குறை வைத்தாய்
உன்னைக் குறை சொல்ல
பிள்ளை வளர்க்க
பிறருக்கு ஒரு ரோல் மாடல் நீ .................
Wednesday, December 17, 2008
Subscribe to:
Posts (Atom)