Tuesday, March 30, 2010

தோட்டக்காரன் முனியப்பன்

குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.

முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.

தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.

முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.