Monday, October 18, 2010

ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ

அமர், அஷீவின் அப்பா பெர்னாட்ஷா 1995ல் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிப் போறவர்.

பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.

அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான்.
கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்

காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.

இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.

அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.