Saturday, November 20, 2010

கல்யாணத்தை நிறுத்து - TVMC

கல்யாண மேடைல மணமகன், மணமகள், நடத்தும் அய்யர், மேடைக்கு முன்னால வாழ்த்த வந்திருக்கும் ஆட்கள், கெட்டி மேள சத்தத்தோடு அய்யர் தாலி எடுத்துக் குடுக்கும் போது தலைக்கு மேல தாய்மாமன் "உய்ய்ய்" னு பறந்து வந்து கல்யாணத்த நிறுத்துன்னா எப்படி இருக்கும் .

"ஆ" ன்னு மயக்கம் போட்ட பெண்கள், பயத்துல நடுங்கி சத்தம் கொடுத்த பெண்கள் அதிகம். பய்ப்படாத ஆண்களும் இல்லை.

இதெல்லாம் எங்கன்னு பாக்குறீங்களா.

மணமகன், மணமகள், அய்யர், தாய்மாமன் எல்லாமே எலும்புக்கூடு. இருட்டு ரூம்ல மேடைல மட்டும் வெளிச்சம். பின்னால இருந்து தலைக்கு மேல எலும்புக்கூடு, ஸ்டீரியோ எப்க்ட்ல பறந்து மேடைக்கு வந்தா எப்படி இருக்கும். அரட்டிட்டாங்க.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவ கண்காட்சி 1977ல.

இந்த அமைப்பு Dr.ஜெயகர் ஜோசப், Dr.ராஜ்குமார் பண்ணது.

எலும்புக்கூடு கல்யாணம் 1977 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண்காட்சில டாப் நிகழ்ச்சி.

எலும்புக்கூடு மணமகனும், மணமகளும் எலும்புக்கூடு அய்யர் எடுத்துக் கொடுக்க மால எல்லாம் மாத்துவாங்க, சிரி சிரின்னு சிரிச்சு ஆர்வமா பாத்துக்கிட்டிருந்த Audience பின்னால இருந்து தலைக்கு மேல தாய்மாமன் எலும்புக்கூடு பறந்து வந்த உடனே டர்ராயிருவாங்க.