முனியப்பன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அதுனால தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர். வீட்டைச் சுத்தி, இருக்க எடத்துல பலவகைச் செடிகளை வளத்துக்கிட்டிருக்கார்.
மதுரை வெயில், சும்மா சொல்லக்கூடாது, அத அனுபவிக்கக் கொடுத்து வைக்கணும். வெயிலோட கடுமை தாக்காம இருக்க முக்கியமான செடிகளை எடத்த மாத்தி வச்சிக்கிட்டே இருப்பார் முனியப்பன். வீட்டுக்குப் பின்னால மாதுளை மரம். அதுக்கடில பூந்தொட்டிய வைக்கலாம்னா ரெண்டு கெள தடுக்குது.
என்ன செய்ய? வேற வழியில்லை. அருவாள வச்சு ரெண்டு கெளயவும் வெட்டுனார். திடீர்னு பின்னால இருந்து ஒரு சத்தம் 'டேய், மரத்த வெட்டாதடா'. திரும்பிப் பாத்தா 7 வயசு அமர், முனியப்பன் தங்கை மகன்.
ஏம்ப்பான்னு அமர்கிட்ட கேட்டார் முனியப்பன். அதுக்கு அமர், "மரத்தை வெட்டிட்டா ஆக்ஸிஜன் எப்படி கிடைக்கும் ?, எப்படி மூச்சு விடுவ?"ன்னான்.
இளம் தளிரின் மனதில் இயற்கையின் தாக்கத்தைப் பாருங்கள். இவ்வளவு அருமையான கருத்து உள்ள பையனை முனியப்பன் ஒடனே கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். நல்ல எண்ணங்களைப் பாராட்டுவதற்கு லேட் பண்ணக் கூடாது.
மரங்கள் நாம் வாழ பிராணவாயு கொடுப்பவை என்று பள்ளியில் அமருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்குத் தான் பாராட்டு.
Wednesday, March 18, 2009
Subscribe to:
Posts (Atom)