Friday, October 17, 2008

முனியப்பனின் காதலி

நங்கையை பற்றிய
நாலெட்ஜ் இல்லாத
முனியப்பன் வாழ்க்கையில்
காதல் காற்று வீசியது
வீசியவள் பேரழகியில்லை
வளைவுகள் சரிவரப் பெற்றவள்
ஒரே துறையில், ஒரே இடத்தில், இருக்கவும்
ஒரே வேகமான காதல்
முனியப்பன் பாடத்தை பற்றிய பேச்சாளனல்லவா
பேசுவதற்கு குறிப்பெடுப்பாள் பேதையவள்
வக்கனை காட்டுபவள்
வஞ்சிக்காமல் சிரிக்கவும் செய்வாள்
படிக்கட்டுகளில் வளர்ந்த காதல்
இக்கட்டில் சிக்காமல் வளர்ந்தது
ஓட்டலுக்கு சாப்பிடப் போனால்
பில் கட்டுபவள் அவள்தான்
டீ குடிக்க போனால் சேலைகட்டிய இடுப்பில்
காடிச்சீப்பில் காசு வைத்திருப்பவளும் அவள்தான்
அய்யா அம்மா என்று
பணிபுரிபவர்கள் அழைக்க
அம்சமான காதல் வளர்ந்தது
சொல்லால் கொள்ளாமல் ஒருநாள்
காணாமல் போனான் முனியப்பன்
காதலனை காணாமல் தவித்தாள்
காரணம் புரியாமல் மயக்கம் போட்டாள்
பதறிய தோழிகள், மேலதிகாரிகள்
மருத்துவ காரணம் தேடினால்
மயக்கத்திற்கான காரணம் ஒன்றுமில்லை
அவர்களுக்கு தெரியுமா காதலின் அருமை
முனியப்பன் காணாமல் போகவில்லை
காதலியிடம் சொல்லாமல்
அறுவை சிகிச்சையில் இருந்தான்
அசராமல் தேடியவள்
கண்டு பிடிக்காமல் விடுவாளா என்ன?
கண்டு பிடித்து போனும் போட்டாள்
மீண்டும் வந்தவனை
கண்டு துள்ளி ஓடினாள்
காதருகே ஒற்றை ரோஜாவுடன்
காதலும் வளர்ந்தது
பிரச்சினைகளும் வளர்ந்தது
காதல் பயணம் சுகமானது
கப்பல் கவிழாதவரை
நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காது
சொன்னவள் அவள்
விதி எனும் சூறாவளியில்
சிக்கிய காதல் சின்னாபின்னமானது
விதி விளையாடிய விளையாட்டு
காதலர் இருவரையும் புரட்டிப் போட்டது
உள்ளத்தை கொடுத்து
உதடுகளையும் கொடுத்தவளுக்கு
உதவவில்லை காலம்
தொழில் படிப்பால் பணத்தில்
துவளவில்லை இருவரும்
வெவ்வேறு இடங்களில்
வேறொரு துணையோடு வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வீசிய
காதல் தென்றல் மறக்குமா?
முனியப்பன் காதலை, காதலியை மறக்கவில்லை
காதலியும் மறந்திருக்க மாட்டாள்
காதல் புதைக்கப்படும் போது, அழுத
கண்ணீர் வற்றும் போது
காதல் வரலாறாகிறது.

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஓட்டுநர், நடத்துநர், பேருந்து

ஒரு பேருந்து (Bus) ஓடணும்னா அதுக்கு ஒரு ஓட்டுநர் (Driver) பயணிகளுக்கு டிக்கட் போட ஒரு நடத்துநர் (Conducter) தேவை, அப்பத்தான வழித்தடத்தில் (Route) பயணிகள் பஸ் போகும். இது வழக்கமான வியம் தானே, அப்படீங்கறீங்களா, வழக்கமான விஷயம் தான், இதப் படிங்க.

மதுரைல இருந்து ஒரு பஸ் ஒரு ஊருக்கு புறப்பட்டு போகுது, ஓட்டுநரும், நடத்துநரும் உற்சாக பானம் லைட்டா ஏத்தின நெலமைல டிரிப் எடுக்கறாங்க. 20 கிலோ மீட்டர் தாண்டின ஒடனே ஒரு ஊர் வருது. வண்டி நிக்குது. ஊர் வந்தா பஸ்ஸ நிப்பாட்டி ஆளை ஏத்துறது, இறக்குறது தான நடக்கும். இங்கயும் அப்படித்தான். ஆனா பஸ்ல வந்த எல்லாரையும்,மீதி காசை கைல குடுத்து எறக்கிவிட்டுட்டாங்க., ஊருக்குப் போறோம் அப்படின்னு அந்த பஸ்ல வந்த எல்லாருக்கும் எப்படி இருந்திருக்கும் ?.

ஓட்டுநரும், நடத்துநரும், எங்க போவாங்க, நேரா அரசு மதுக்கடைதான், சரக்க கொஞ்சம் ஊத்திகிட்டு இன்னும் கொஞ்சம் கைல எடுத்துகிட்டு பஸ்ல ஏறி எங்க போனாங்க? பஸ் போற பாதையா? அதெப்படி? ஒரு பக்க (oneway) ரோட்ல பஸ்ஸ ஓட்டிட்டு போய், நிப்பாட்டி சரக்கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது இப்படியிருக்க, பஸ் உரிமையாளர் என்ன செஞ்சாங்க?, பஸ் வரவேண்டிய டயத்துக்கு ஊருக்கு வரல, நடுல எங்கயாவது பிரேக்டவுண் ஆயிருக்கான்னு பாக்குறதுக்கு, பஸ்ஸோட வழித்தடத்துல வந்தா பஸ்ஸ காணோம். மதுரைல மேலிடத்துக்கு போன் பண்ணிட்டு, பஸ் எங்கயிருக்கும்னு தேட ஆரம்பிச்சு, கடைசில ஒரு வழியா பஸ்ஸ கண்டு பிடிச்சுட்டாங்க, ஓட்டுநரும் நடத்துநரும் முழிச்சிகிட்டா இருப்பாங்க?, மட்டை (flat). உபயம் அரசு மது. குடி, குடியை மட்டும் கெடுக்கல, பஸ் பயணிகளோட பயணத்தையும் கெடுத்துருச்சு.

வெங்கட்ராமன்

இவர் M.E. (சாப்ட்வேர்) என்ஜினீயர். பெங்களுருவில் டெக்ஸாஸ் கம்பெனியில் ஆபிசராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. படிக்கும்பொழுது 4வருடமும் தொடர்ந்து கோல்ட் மெடல் வாங்கினார். அடுத்து

M.E. சாப்ட்வேர் பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIM & IIS கல்வி நிறுவனங்களில் படித்தார். அங்கும் கோல்ட்மெடல் தான்.

படித்து முடித்ததும், அவரை MNC எனப்படும் மல்டி நேஷனல் கம்பெனிகள் அவரை வெளிநாட்டில் வேலை பார்க்க அழைப்பு விடுத்தன.

அவருடைய தகப்பனார் திரு ராமகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை தலைவராகவும், பேராசியராகவும்

இருந்தார். அவர் தன்னுடைய மகன் இந்தியனாக இருக்க வேண்டும். அவருடைய உழைப்பு இந்தியாவில்தான் இருக்க வேண்டும். என்று

ஆசைப்பட்டார். தந்தையை போல எண்ணமுள்ள மகனும் வெளிநாடு செல்லாமல் பெங்களுருவில் 'டெக்ஸாஸ்' என்ற மிகப்பெரிய கம்பெனியில்

ஆரம்பத்திலேயே மேலதிகா??யாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களுருவில் 1600 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி

குடியிருப்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அண்ணா பல்கலைகழகத்தில் B.E. படித்த 4 வருடமும் படிப்புக்கான தங்கப்பதக்கம், பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIS கல்வி

நிறுவனத்தில் M.E. பயின்ற 1 வருடத்திலும் தங்கப்பதக்கம் பெற்று, அயல் நாட்டுக்கு வேலைக்கு போகாமல் இந்தியாவில் பெங்களுருவில்

பணிபுரியும் திரு.வெங்கட்ராமன் மிகப்பெரிய பாராட்டுக்குரியவர். அவர் தந்தை திரு.ராமகிருஷ்ணனும் பாராட்டுக்குரியவர்.

ரஜினி, சிரஞ்சீவி, விஜயகாந்த்

ரஜினி வாய்ஸ் இது தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ரஜினி அரசியலுக்கு வருவார், வருவார்னு தமிழக மக்கள் ரொம்ப எதிர்பார்த்தார்கள், அவரும் எப்ப வருவேன்னு தெரியாது, ஆனா கரெக்டான டயத்துக்கு வருவேன்னு பஞ்ச் டயலாக் விட்டுகிட்டே இருந்தார். கடைசியா அவர் டுபுக்குன்னு தமிழக மக்கள் புரிஞ்சிகிட்டாங்க.

இப்பவும் பாருங்க ஒகனேக்கல் பிரச்சினைல ஒரு வாய்ஸ் குடுத்தார். குசேலன் பட ரிலீஸ் டயத்துல ரஜினி ஒரு பல்டி அடிச்சார் பாருங்க, அவர் பஞ்ச் டயலாக்கை விட சூப்பர் அதான், ரஜினி சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்க நடிகரா மட்டும் நின்னுக்குங்க, தமிழக மக்களோட பிரச்சினைகளுக்காக வாய்ஸ் குடுக்கிற தகுதி உங்களுக்கு இல்லை. ஒங்களுக்கு ஒங்க படம் ஓடணும்கிற சுயநலம் மட்டும் தான்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு.

ரஜினிய பத்தி பாத்துட்டோம். இப்ப விஜயகாந்த்தை பாப்போமா, இவர், மொதல்ல வலுவான பொருளாதார பிண்ணனிய உண்டாக்கிக்கிட்டார். பிறகு மக்களுக்கு உதவித் திட்டங்களை அவருடைய பிறந்த நாளைக்கு செயல்படுத்த ஆரம்பிச்சார். படங்கள்லயும் நல்லவன் மற்றும் அக்கிரம் செய்பவர்களை தண்டிக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார், மக்களின் மனதை ஒரளவுக்கு கவர்ந்தார்.

அரசியலுக்கு வருவேன், வருவேன்னு, ரஜினி மாதிரி சொல்லிக்கிட்டே இல்லாம, திடீர்னு அரசியலுக்கு வந்தார். பா.ம.க. கோட்டையான விழுப்புரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபீல்ட் ஒர்க் எனப்படும் கள வேலைகளில் இவர் கெட்டிக்காரர். இவர் செல்லும் இடமெல்லாம் இவர் பேச்சை கேட்க மக்கள் திரளாக கூடுகிறார்கள். இவர் கட்சியின் வாக்கு வங்கியும் கூடிக்கொண்டே வருகிறது. இவருடைய பலம் இவருடைய துணைவியார் மற்றும் தொண்டர்கள்.

இன்னும் ரெண்டு பெரிய நடிகர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே சாதிக் கட்சியினர், ஆகையால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை.

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிய பாத்தீகளா, ஆம்பிளை சிங்கம். அரசியல்ல குதிச்சிட்டார். ஆகஸ்ட் 17ல் அவர் ஒரு கூட்டத்தில் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்காக, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கட்சியின் பெயர், கொடி முதலியன எல்லோரையும் கலந்து ஆலோசித்து சொல்வதாக சொல்லியிருக்கார். அவருடைய அறிவிப்பு அவரோட ரசிகர்கள் கிட்ட ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கியிருக்கு. ஆந்திர அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கடைசில பாருங்க சிரஞ்சீவி ஆகஸ்ட் 26ந் தேதி 'பிரஜா ராஜ்யம்'னு கட்சி ஆரம்பிச்சுட்டார். கட்சி கொடி, கொள்கைகள் எல்லாத்தையும் மீட்டிங் போட்டு அறிவிச்சுட்டாரு, திருப்பதில நடந்த கூட்டம் திருப்பதிய உலுக்கி எடுத்துருச்சு. 10 லட்சம் பேர கூட்டுறதுன்னா லேசான விஷயமா?. அசத்தி காட்டிட்டார் சிரஞ்சீவி, 18 ட்ரெய்ன், 3000 பஸ்ல கூட்டத்துக்கு ஆட்கள். அதுக்கு மேல மத்த வாகனங்களில் 3000 போலீஸ் + 3000 தொண்டர்கள் பாதுகாப்பு, எங்க போய்ட்டார் பாருங்க சிரஞ்சீவிய

ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி இப்ப ஒங்களுக்கு புருஞ்சிருக்கும்.