Sunday, May 24, 2009

நக்காரணர்

நக்காரணர்...கேள்விப்படாத பேரா இருக்கா. பழந்தமிழர்கள் கையாண்ட வார்த்தை இது.

பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,

வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.

ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.

வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.

பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்