Thursday, January 27, 2011

அரோகரா குமார்

அரோகரா குமார்

முனியப்பன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரில படிச்சதால, House Surgen, Senior House

surgeion ஆ Dr.S.R.கிட்ட இருந்ததால நோயாளிகளோட நோயை எதிர் கொள்றதுல அதிரடி ஆட்டக்காரர்.

எந்த Case ஆ இருந்தாலும் பயப்படாம எடுப்பார். heart attchஆ Cancerஆ, Major operation ஆ, அசராம பார்க்க கூடிய ஆள். இப்ப அமர், அஷ¥வை வளக்க வேண்டியதால 10 வருஷமா தடுப்பாட்டக்காரர் மாதிரி சிக்கல் இல்லாத Case மட்டும் பாக்குறார் நம்ம ஆளு. அமர் இப்ப ஓரளவுக்கு தன்னோட வேலைய தானே பாத்துக்கறார். "அந்த பயம் இருக்கட்டும்" னு முனியப்பனை மிரட்டும் அஷீ செட் ஆக இன்னம் 3 வருஷம் ஆகும். அதுக்கப்புறம் அதிரடியாய் நோயாளிகளை கவனிக்க வேண்டியதுதான். என்ள ஓவரா Build up னு பாக்கறீங்களா.30 கிலோமீட்ர் தள்ளி இருந்தாலும் visit போய் பாக்குற நம்ம முனியப்பன் இப்ப 10 வருஷமா, பக்கத்துல இருந்தாலும் visit போறதில்லை. காரணம் - நேரமின்மை. அப்படியிருந்தும் என்னைக்காவது ஒரு நாள் ரொம்ப தெரிஞ்சவங்களுக்காக visit போக
வேண்டியதிருக்கும் . visit போற time காலைல 7 மணி. இப்பதான் முனியப்பனின் நண்பர் வக்கீல் சேகர் சார், ஒரு visit கூப்பிட்டார் . சேகரோட senior வக்கீல் ரெங்கநாதன். ரெங்கநாதனோட மாமா சீனிவாசன் சுகமில்லாம இருக்கார். முனியப்பன் sunday போய் பாக்குறார். ரொம்ப weakஆ இருக்கார்.சீனிவாசன். வலது இடுப்புல neck of FUMUR பிராக்சர். 2 மாசத்துக்கு முன்னால ஆனது. operate பண்ண முடியாது. சும்மா வூட்ல வச்சு இருந்து பாருங்கன்னு அனுப்பிர்றாங்க. சீனிவாசனுக்கு Diabetes வேற. சும்மா படுததே கெடக்கிறதால முதுகில புண் ஆயிருது. Bed sore. அந்த ஆஸ்பத்திரில இருந்தே சீனிவாசனுக்கு புண்ணூக்கு
மருந்து போட, Diabetesக்கு Insulin போட ஆள் அனுப்புறாங்க. நெஞ்சுல சளி வேற.
முனியப்பன் பாத்துட்டு Bed soreக்கு சளிக்கு, மாத்திரை, மருந்து கொடுத்துட்டு ஆள் ரொம்ப weak ஆ இருக்கார். தேர்றதுக்கு ஒரு மாசம் ஆகும் அப்படின்னு சொலலிர்றார். Bed soreல இருந்து pus culture எடுக்க சொல்லிட்டு வந்துர்றார். wednesday வக்கீல் ரெங்கநாதன் சார், pus culture ரிப்போட்டோட வர்றார். கிருமி CLEBSIELLA கிளப்ஸில்லா. சீக்கிரம் போகாது, ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அத வெரட்டணும். Thursday மதியானம் 12 மணிக்கு வக்கீல் சேகர் மொபைல்ல கூப்பிறார். ரங்கநாதன் சார் மாமா மூச்சு விடக் கஷ்டப்படுறார். போய்
பாருங்க" முனியப்பனும் ஊசி மருந்துகளை எடுத்துட்டு கெளம்பறார் கூட துணைக்கு
குமார். Two வீலர்ல கெளம்புறப்ப, "அரோகரா"ன்னு சொல்லிட்டு குமார் பின்னால
ஏறி ஒக்காறார். முனியப்பன், "ஏய் அரோகரா போட்டுட்ட, அங்க ஆயிறப் போதுடா"
அப்படின்னு சொல்லிகிட்டே ரங்கநாதன் சார் வீட்டுக்கு போயாச்சு. அரோகராதான். Patient
out. சில புது அறிமுகங்கள் இப்படி சோகத்துல ஆரம்பிக்கிறது உண்டு. சில சமயம் சோகத்துலயும் காமெடி கலந்துருது.