Monday, December 22, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் - டாக்டர் KP

செத்தும் சொல்லிக் கொடுக்கிறார் Anatomy - டாக்டர் KP

டாக்டர் K. பொன்னுச்சாமி, K.Pன்னா தான் தெரியும். உடற்கூறியல் துறைல பணிபுரிஞ்சார். இவர் மொதல்ல மதுரை மருத்துவக் கல்லூரியிலும், பிறகு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் Anatomy டிபார்ட்மென்ட்ல துணைப் பேராசிரியரா பணிபுரிஞ்சார். ரெண்டு எடத்துலயும் உள்ள உடற்கூறியல் துறைல உள்ள specimenகள்ல பாதி இவர் ஏற்படுத்துனது தான். மனித உறுப்புகளைப் பாதுகாப்பு திரவத்தில் போட்டு கண்ணாடி jarல் அடைத்து வைப்பது Specimen. ஒவ்வொரு பகுதியும் அழகா, மருத்துவ மாணவர்கள் படிக்கப் புரியற மாதிரி இருக்கும்.

இவர் specimen உண்டாக்குனது 40 வருஷத்துக்கு முன்னால. இன்னமும் ரெண்டு மருத்துவக் கல்லூரிலயும் இருக்கு. பாடம் சொல்லிக் கொடுக்கறதுலயும் மிகவும் தேர்ந்தவர். ரொம்ப சுலபமா புரியற மாதிரி சொல்லிக் கொடுப்பார். மாணவர்களிடம் கண்டிப்பானவர். அவருக்கும், துறை பேராசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன் பணியை ராஜினாமா செய்து வெளியேறினார். முனியப்பனுக்கு அவரிடம் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெளியே வந்த KP பாளையங்கோட்டை அசோக் தியேட்டர் அருகில் மருத்துவராகத் தொழிலை ஆரம்பித்தார். மிகவும் கம்மியான கட்டணம். 1 ரூபாய் 50 காசு. ஊசி போட்டு மாத்திரயும் குடுப்பார். அப்பொழுது இரவு நேரம் 10 லிருந்து 1 மணி வரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அனாடமி டியூசன் எடுப்பார். அந்த இரவுநேர வகுப்பில் முனியப்பனும் ஒரு மாணவன். ரொம்ப எளிதாக, சொல்லிக் கொடுப்பார். 3 மணி நேரமும் போரடிக்காது. பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வரும் நோயாளிகளையும் கவனிப்பார்.

அவர் இப்பொழுது இல்லை. அவர் கடைசியாக வாங்கிய தொகை ரூ. 5. கடைசி வரையிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கூறியல் கற்பித்து வந்தார்.

உடற்கூறியல் மீது அவர் கொண்ட அன்பின் அடையாளச் சின்னமாக இன்றும் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் அவர் உருவாக்கிய Anatomy specimens, இன்னும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடற்கூறியல் சொல்லித் தருகின்றன. செத்தும் சொல்லிக் கொடுக்கிறார் Anatomy.

CASE SHEET (நுரையீரல் கல்யாணம்)

நுரையீரல் கல்யாணம் இல்லப்பா இது.

முனியப்பன் கிளினிக். காலைல 11 மணி இருக்கும். ஒரு 20 வயசுப் பொண்ண சிகிச்சைக்குக் கூட்டிகிட்டு வர்றாங்க. டாக்டர் டேபிள்ல அந்தப் பொண்ணு கைல தலய வச்சுப் படுத்துருது. உட்கார முடியல, 20 நாள் காய்ச்சலாம், மூச்சு வாங்குது. வேற எடத்துல ட்ரீட்மென்ட் பாத்துட்டு முனியப்பன்கிட்ட வர்றாங்க. "பொண்ணுக்கு 4 நாள்ல கல்யாணம். பத்திரிக்கை வச்சாச்சு. கல்யாண மேடைல உட்காரணும்' அப்படிங்கிறாங்க.

முனியப்பனுக்கு ஒரு ஒதறல். நம்மளால முடியுமான்னு. இருந்தாலும், எல்லா டெஸ்ட்டும் பண்ணி, ஸ்கேன் வரைக்கும் பாத்து வியாதி என்னன்னு கண்டுபிடிச்சர்றார். TBயால, ஒரு பக்க நுரையீரல் அவுட். ட்ரீட்மென்ட் கொடுக்குறார். காய்ச்சல் கொறையுது. பொண்ணு கல்யாண மேடைக்குப் போய் கல்யாணமும் முடிஞ்சிருது.

ரெகுலர் செக் அப்புக்கு வந்து வியாதிய சரி பண்ணி, நுரையீரல் பழைய செயல்பாட்டுக்கு வந்துருது. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு 2 பையன்கள். 2ம் நார்மல் டெலிவரி.

பிழைக்குமா, முடியாதாங்கிற பொண்ணு இன்னைக்கு நுரையீரல் சரியாகி, நல்ல சுகமா இருக்கு.

சபாஷ் யாருக்கு ? ஒழுங்கா வைத்தியம் பாத்த அந்தப் பொண்ணுக்கா, டயக்னோஸ் பண்ணி ட்ரீட்மென்ட் குடுத்த நம்மாளு முனியப்பனுக்கா ? .................