Friday, July 18, 2008

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் தமிழ்நாடு அரசு சார்பா நடந்த AIDS AWARENESS நிகழச்சிக்காக மதுரைல நடந்த ஒரு மீட்டிங்ல சிறப்பரையாற்றினார் கூட்டத்துல மதுரை மாவட்டத்துல உள்ள 80 பள்ளிகளின் ஆசிரியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முனியப்பன் பேசி முடிச்சதும் ஒரு ஆசிரியை கேட்டார் ஒரு அதிரடிக் கேள்வி, தமிழர் பண்பாடு தொன்மையானது, ஒருவனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் உள்ளது. அப்புறம் தமிழ்நாடு ஏன் இந்தியாவுல AIDS அதிகமா உள்ள மாநிலமா இருக்குன்னு கேட்டாங்க, முனியப்பன் பதில் சொன்னார் பாருங்க, மேடம் நீங்க நெனக்கிற கலாச்சாரம் ரொம்ப கம்மியான ஆளுங்ககிட்டதான் இருக்கு தகாத உறவுகள் அதிகமாக இருக்கதாலதான் அதிகமா இருக்குன்னார்.

இந்த ஒழுக்கக்குறைவு எப்படி வருதுன்னு பாருங்க TV சினிமால வர்ற சம்பவங்கள் நிச்சயமா மக்களோட மனச பாதிக்குது.

ARINDHAM CHAUDRY பத்தி கேளுங்க ஒரு பயலுக்கும் தெரியாது (ஒரு சிலரைத் தவிர) ஒரு சினிமா Star பத்தி கேளுங்க. அந்த Star பத்தி Detail ஆ சொல்லுவாங்க அப்படி இருக்கும்போது நடிகர்களின் தனிப்பட்ட வாழக்கையும் சினிமா ரசிகனுக்கு தெரியுது.

1) பழைய காலத்து சாம்பார் காதல் மன்னன் (3 பேரை திருமணம் செய்தவர்)

2)சட்டைய மாத்துற மாதிரி கணவர்களை மாற்றிய லட்சுமிகரமான நடிகை அவருக்குத் தப்பாமல் பிறந்த ஐஸ்வரிய நடிகை.

3) கற்பு நடிகையை ரகசிய தாலி கட்டி கைவிட்ட திலக நடிகர், உடனே சுந்தர இயக்குநரை கைபிடித்த கற்பு நடிகை.

4) முதலில் ஒரு நடிகர் இயக்குநரை திருமணம் பண்ணி அவரை விட்டுவிட்டு, ஒரு வெளிநாட்டுக்காரரை கைபிடித்து ஒரு குழந்தை பெற்று, அவரையும் விரட்டிவிட்டு ஒருகட்டுமஸ்தான Body guard நடிகருடன் வாழ்க்கை நடத்தி வரும் நடிகை.

5) கட்டுமஸ்து நடிகர் மட்டும் லேசானவரா ஒரு பெண்ணை காதல் மணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற, பின் ஒளி நடிகையின் அக்காவுக்காக படமெடுத்து அந்த நடிகையால் குடும்பத்தை சட்ட பூர்வமாக பிரிந்து அந்த நடிகையையும் கைவிட்டு இப்பொழுது வாழ்கையில் ரயில் பயணத்தில் இருக்கிறார்.

சினிமா ரசிகன் மட்டுமல்ல, உலகத் தமிழன் அனைவரும் பார்க்கும் திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலில் ஒரு மனிதன் தவறுவதற்கு அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சினிமா, சினிமா நட்சத்திரங்களின் பங்கும் அடங்கும்.

லேட்டஸ்ட் சினிமா கிசுகிசு உதட்டோ டு உதடு கவ்வி லவ்விய நயன நடிகையும் விரல் வித்தை நடிகரும் பிரிந்து மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கின்றனர். இது மீடியாக்களால் பரபரப்பாக Flash செய்யப்படுகிறது.

முனியப்பன் பக்கங்கள்(2)

முனியப்பன் பக்கங்கள்(2)

நம்ம சினிமா ஆளுங்கள பாருங்க, remake-ல இறங்கிட்டாங்க, படமே remake. பழயபடத்த remake பண்றது, தெலுங்கு படத்த remake பண்றது, பழய பாட்ட remake பண்றது, அப்ப originality என்னாச்சு? அதான் பு ரியலன்னு இல்ல, அவங்க கற்பனை வத்திருச்சா, யோசிக்கிற திறமை இல்லையா?

நம்மாளுகளுக்கு ஒரு கதையோட அவுட்லைன மட்டும் சொல்லுவோம். இது நிசமா நடந்த உண்மைச் சம்பவம்

A 27 year Old woman was run over and killed by a train and her 30 year old lover injured as they stood kissing on a rail track in the Siberian city of Novosibirsk

இத படமாக்குற காதாசிரியர் டைரக்டரோட பேட்டி 'இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மைச் சம்பவத்தை படமாக்கணும்னு அதுக்கான கதைக் கருவை யோசிச்சிகிட்டிருப்பதான் இந்த சம்பவம் பத்தின news என் கண்லபட்ருச்சு. இத படிச்ச ஒடனே என்னால என் கண்ணுல கண்ணீர் வர்றத நிப்பாட்ட முடியல, எவ்வளவு வேதனை இருந்தா ரயில்வே டிராக்ல முத்தத்தை பரிமாறிக்கிட்டு ரெயில்ல அடிபட்டு வாழ்க்கைய முடிச்சிருக்கும் அந்தப்பொண்ணு.

இந்த outline ஐ வச்சி யோசிக்க ஆரம்பிச்சேன், காட்சிகள் தண்ணால வந்து விழுந்துகிட்டே இருக்கு ரெண்டே நாள்ல கதை, திரைக்கதை வசனத்தை எழுதிட்டேன். லைலா-மஜ்னு ரோமியோ-ஜீலியட், அம்பிகாபதி-அமராவதி வரிசைல நம்ப வீரமணி-வேலம்மா சரித்திரம்ங்க.'

இப்படி போகுது அவரோட பேட்டி, நீங்க கொஞ்சம் யோசிச்சு இந்த outlineஅ இப்ப இருக்க நம்மாளுக எப்படி சினிமாவுல கொண்டு வருவாங்கன்னு சொல்லுங்க......

முனியப்பன் பக்கங்கள்

முனியப்பன் பக்கங்கள்(1)

எல்லாருக்கும் வணக்கமுங்கோ. இதுப் பொய்ப்பேருன்னு சின்னப் பிள்ளைக்கும் தெரியுமுங்கோ. என் நண்பர் பேரை (எனக்கு 10 வயசு மூத்தவருங்க) இந்த தொடருக்காக எனக்கு நானே வச்சுக்கிட்டேங்க.

இந்தப் பக்கம் இருக்கறதே எனக்கு இப்பதானுங்க தெரியும், அதான் இவ்வளவு லேட்டு, இந்தப் பக்கத்துல என்ன எழுதலாம்னு யோசிச்சுப் பார்த்தேன், தமிழனைப் பத்திதான் எழுதனும்னு முடிவு பண்ணினேங்கோ.

தமிழனுக்கு என்ன தெரியும், வீரம், காதல், கிரிக்கெட், சினிமா இது நாலு தானுங்க எல்லா பயலுக்கும் தெரியும். விவசாயம், படிப்பு, தொழில பத்தி எழுதலன்னு நினைக்காதீங்க. அதெல்லாம் சம்பாத்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்பட்டதுங்க.

தமிழனோட அடிமனசில ஆழமா பதிஞ்சு இருக்க நாலுதான் காதல், வீரம், கிரிக்கெட்டு, சினிமா. இதில எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சினிமாவைப் பத்தி மட்டும் எழுதப்போறேனுங்க.