கிராமத்து மக்கள் எப்பவுமே வெளிப்படையா பேசறவங்க. மதுரையே ஒரு பெரிய கிராமம் தான். அதச் சுத்தி உள்ள கிராமங்கள்ல இருந்து வைத்தியம் பாக்க மதுரைக்கு வருவாங்க.
தும்மக்குண்டுன்னு ஒரு ஊர்.... செக்காணத்துல இருந்தும் போகலாம், திருமங்கலத்துல இருந்தும் போகலாம், உசிலம்பட்டில இருந்தும் போகலாம். மதுரைல இருந்து 45 கிமீ. அங்க இருந்து பேச்சி வந்தாங்க.
முனியப்பன் கிட்ட முழங்கால் வலின்னு ஊசி போட வந்தாங்க.
பேச்சிக்கு முழங்கால் வலி ... 40 ‡ 50 வயசுல யாராயிருந்தாலும் வரும். Knee Joint மொத்த உடம்பையும் தாங்குற இணைப்பு. அதில lubrication இருக்கும். வயசாகும் போது wear & tear ல lubrication fluid கொறஞ்சு வலி வரும்.
சிலிம் பாடின்னா கொஞ்ச நாள்ல வலி போயிரும். கொஞ்சம் எக்சர்சைஸ், கொஞ்சம் மாத்திரை அவ்வளவு தான்... சொகமாயிரும்.
குண்டானவங்க .. obese னா சிக்கல் தான். Osteoarthritis வந்துரும். அதுக்கு மாத்திரை, பிசியோ தெரபின்னு போய்க்கிட்டே இருக்கும். சொகமாகாது.
தும்மக்குண்டு பேச்சி சிலிம் பாடிங்கிறதால முழங்கால் வலி சரியாயிடுச்சி. நாலஞ்சு தடவ முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தாங்க. நல்லாய்ட்டாங்க.
அவங்க ட்ரீட்மெண்டுக்கு வந்த மொதநாள் ஜோக் அடிச்சிட்டாங்க. சும்மா ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்கன்னு. அங்க இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க. கிராமத்து சனங்களுக்கு மனசுல இருக்கது அப்படியே வெளிய வந்துரும்.
Monday, January 30, 2012
Subscribe to:
Posts (Atom)