Tuesday, March 15, 2011

1 கோடியே 26 வட்சம். BPO

1 கோடியே 26 வட்சம். BPO

முனியப்பனின் நோயாளிகளில் ஒருவர் S. இந்தியாவிலேயே ஆள் பலம் அதிகமான மத்திய அரசு வேலைல S இருக்கார். அவருக்கு காலேஜ் படிக்கிற 2 பொண்ணுக, லேட்டா பொறந்த பய 1st படிக்கிறான். அப்ப தற்செயலா Clinic வெளிய காய்கறி வாங்கப் போன எடத்துல முனியப்பன் கிட்ட S சொன்னார். "BPO ஆரம்பிச்சிருக்கேன்" னு.

முனியப்பன் கேட்டார் "ஒங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையே. எப்படி ரன் பண்றீங்க?" S. மச்சினன் இருக்கான், அவனும் நானும் பாத்துக்கறோம்.

முனியப்பன் "எத்தனை பேர் வேல பாக்குறாங்க"
S, "100 பேர் வேல பாக்குறாங்க". முனியப்பன் " எப்படி சம்பளம் போடுறீங்க". S. "Income வருது".

முனியப்பனுக்கு ஒரே ஆச்சர்யம் மாசம் 25 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருத்தர், தனியா பெரிய அளவுல மாசம் 4 லட்ச ரூவா சம்பளம் கொடுக்ற அளவுக்கு வந்திருக்காரேன்னு. S ன் மனைவி Ladies Tailor. தனியா டெய்லரிங் கடை வச்சு அதுல 5 பேர் வேல பாக்குறாங்க.
டெய்லரிங் 12 வருஷமா ஓடுது. சிறுகச் சிறுக ரூபாய் சேத்து S தொழில் ஆரம்பிச்சுருக்கார்ன்னு ஒரு தோற்றம் முனியப்பனுக்கு.

அப்புறம் உலகம் பூரா பொருளாதார வீழ்ச்சி வருது. அப்ப ஒரு நாள் காய்கறி கடைல Sஜ மீட் பண்ண முனியப்பன் கேட்டார், "ஒங்களுக்கு எதும் பாதிப்பு இருக்கா ?" S. "அதெல்லாம் ஒண்ணுமில்ல".

ரொம்ப நாள் கழிச்சு S முனியப்பன் Clinic வர்றார். லீவு வேனும். அவர் வேல பாக்குற மத்திய அரசு துறை மருத்துவமனைல Sick பண்ணியிருக்கார், 1 மாசம். அதுக்கப்புறம் 8 மாச லீவு வேணும்னார். முனியப்பன் "ரொம்ப நான் ஒங்கள பாக்கலியே" S. "மிசஸ் Uterus ஆப்பரேஷன் சென்னைல பண்ணோம். அதுலருந்து சென்னைல தான் எல்லாரும் இருக்கோம்னார். S வேல பாக்குற துறை விடுமுறை. மெடிக்கல் சர்ட்டிபிகேட்ட்டுக்கு தனியா form வேனும். அத வாங்கிகிட்டு நாளைக்கு வாங்க. போட்டுத்தாரேன்னு முனியப்பன் சொன்னார். சரின்னு S கெளம்பிட்டார்.

S கெளம்பிப் போன 40 நிமிஷம் கழிச்சு ஒருத்தர் வந்தார். "Intelligence wing" ல இருந்து வாரேன். S வந்தாரா" ன்னு கேட்கவும் முனியப்பன் "ஆமா, என்ன விஷயம்" னு கேட்டார். Intelligence "S ஆபிஸ்ல பணத்தை எடுத்துட்¡ர்". முனியப்மபன் "எவ்வளவு பணம்" Intelligence " 1 கோடியே 26 லட்சம்" தொகைய கேட்ட ஒடனே முனியப்பனுக்கு ஆச்சர்யம் இவ்வளவு பெரிய அமெளண்டா ? முனியப்பன் திருப்பி ஒரு தடவை Amount எவ்வளவு கேட்டார், S அவ்வளவு பெரிய தொகைய சுட்டார்ன்னு நம்ப முடியல.

Intelligence வரிசையா சொன்னார். " S ன் மனைவி 2010 February ல வெளிநாட்டுக்கு Escape" S ரூபாய விட்டது BPOல தான். S December 2009ல காணாம போனவர். 16.09.2010 ல மதுரைக்கு வந்து Autoல சுத்திக்கிட்டிருக்கார். S வந்த தகவல் கெடைச்சு S அ பாலோ பண்ணிக்கிட்டிருக்கோம்னார் Intelligence. S இருந்த வீடை பத்தி முனியப்பன்கிட்ட தகவல் வாங்கிக்கிட்ட Intelligence அடுத்த நாள் காலைல S வந்தா அவர் வந்த தகவல் S கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாள் Sம் வரல. Intelligence ம் வரல. S escape ஆயிருக்கானும்.இல்ல கோழிய அமுக்குற மாதிரி S அ Intelligence அமுக்கியிருக்கனும்.

மனிதனுடைய அழிவுக்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூணூல எதாவது ஒண்ணுதான். நல்லா இருந்த S திடீர்னு இப்படி தவறான பாதைல எப்படி போனார்னு தெரியல.