Friday, June 18, 2010

ஆம்பளைக்கும் வெட்கம் வரும் - கருப்பையா

வெட்கம்கிறது பெண்களுக்கான ஒரு சிறப்பம்சம். இலக்கியங்கள்ல, அந்தக் காலத்துல இந்தக் காலத்துல எந்தக் காலத்துலயும் மாறாத ஒரு சிறப்பியல்பு.

ஆம்பளைக்கு வெட்கம் வராதுன்னு யார் சொன்னது?

முனியப்பனின் நெடுநாள் வாடிக்கையாளர் கருப்பையா. அவர் குழந்தைக் குட்டி, அவர் தம்பிகள் குடும்பங்கள் எல்லாம் முனியப்பனிடம் மருத்துவம் பார்பவர்கள்.

கருப்பையாவுக்கு 3 வருஷம் முன்னால முடக்கு வாதம் (RHEUMATODI ARTHRITIS) வந்து படுத்த படுக்கையாயிட்டார். சுத்தி உள்ள ஆட்கள்லாம் அவர் போய்ச் சேர்ந்துடுவார்னு முடிவு பண்ணிட்டாங்க. முனியப்பன் கருப்பையாவ போய்ச் சேர விட்டுருவாரா?

இப்ப கருப்பையாவுக்கு 60 வயசுல ஆம்பளையாட்களுக்கு வர்ற அந்தரங்க பிரச்சனை. முனியப்பன்கிட்ட தன்னோட பிரச்சனையை சொன்னார். முனியப்பன் அவர பரிசோதிக்கிறதுக்காக அடுத்த ரூம்ல ஒக்காரச் சொன்னார். கருப்பையா வள்ளிகிட்ட டாக்டர் என்னைய டெஸ்ட் பண்ண வரப்போறார்னு சொல்றார். வள்ளி கருப்பையா மகள்.

முனியப்பன் கருப்பையா இருக்க ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிட்டு வேட்டிய அவுருங்கன்னு சொன்ன உடனே, கருப்பையா "அட நீங்க வேற" ன்னு வெட்கப்பட்டார் பாருங்க. அவருக்கு அவ்வளவு சிரிப்பு, வெட்கம். நெடுநாள் பழக்கம். விசுவாசம் வேற. அதான் அந்த வெட்கம்