Sunday, January 18, 2009

முனியப்பனின் யானைக் கனவுகள்

கனவுகளும், பலன்களும்

இது எந்த அளவுக்கு உண்மை ?

முனியப்பனுக்கும், யானைக்கும் எந்த பிறவில, என்ன தொடர்போ தெரியலை. முனியப்பன் கனவுல யானை வரும். பொதுவா அதிகாலை கனவு தான். சின்னப் பிள்ளைல இருந்தே முனியப்பன் கனவுல யானை வரும். அப்பல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. இப்ப ஒரு 15 வருஷமாத்தான் அந்த யானைக் கனவுகளை அலசிப் பாக்குறார் முனியப்பன்.

யானை கனவுல வரும், லேசான கனவா என்ன ? யானை முனியப்பனை ஓட ஓட வெரட்டும். சமயத்துல, பயத்துல முனியப்பன் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சு கூட ஒக்காந்திருவார். அப்ப ஹார்ட் படக்படக்னு துடிக்கும். படக் படக் நிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு பயங்கரமா கனவு இருக்கும்.

சமயத்துல ஒத்த யானை வெரட்டும். சில சமயம் ஒரு யானைக் கூட்டமே முனியப்பனைக் கனவுல வெரட்டும். கனவுல யானை துரத்த, முனியப்பன் ஓட, சும்மா செம thrillஆ இருக்கும். Hollywood படமே எடுக்கலாம். செம chase.

இப்படித்தான் 1995 கடைசில, கனவுல, யானை & யானைக் கூட்டம் முனியப்பனை துரத்துச்சு. ஒரு மூணு மாசம் அப்பப்ப துரத்தும். தினசரி கெடையாது. 1996 பிப்ரவரி வரைக்கும். 1996 பிப்ரவரி 16ந் தேதி முனியப்பனோட ரோல்மாடல், அவுக அப்பா K.வேலுச்சாமி B.A., B.L. தமிழக அரசு நீதித்துறை நீதிபதி (ஓய்வு) மரணத்தைத் தழுவுறார்.

அப்புறம் கனவுல யானையக் காணோம். மறுபடியும் 1999ல யானை கனவுல வருது, ஒரு மூணு மாசம் அப்பப்ப gap விட்டு.1999 ஏப்ரல் 14ந் தேதி முனியப்பனோட பெரியப்பா போய்ச் சேந்துர்றார். அப்பத்தான் முனியப்பன் யானைக் கனவை அலசி, ஆராய்ஞ்சு பாக்குறார். "யானை கனவுல வந்தா, நம்ம வீட்டு ஆளு ஒண்ணு அவுட்ரா."

அப்புறம் யானைக் கனவக் காணோம். 2002 ல மறுபடியும் யானைக் கனவு. இந்த தடவை யானை என்ன செய்யுது ? முனியப்பன் வீட்டுக்குள்ள வந்து ஹால்ல ஒக்காந்துக்குது. முனியப்பனுக்கு ஒரே நடுக்கம். என்ன ஆகுமோன்னு பயம். பயந்தது மாதிரியே மே 11ந் தேதி அவரோட அன்புத்தம்பி மூர்த்தி இறந்துர்றார்.

மறுபடி 2005ல யானைக் கூட்டம் முனியப்பனைக் கனவுல துரத்துது. முனியப்பன் என்ன செய்வார் ? அவரும் ஓடுறார். 2003 மார்ச்ல முனியப்பனோட சித்தப்பா அவுட்.

07.01.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. ஒரு யானை முனியப்பன் வீட்டு முன்னால வந்து நின்னுக்கிட்டு "நீ வீட்டை விட்டு வெளிய வா பாப்பம்"னு முனியப்பனுக்கு சவால் விட்டுக்கிட்டிருக்கு. என்ன ஆகப் போகுதோன்னு முனியப்பனுக்குக் கவலை. இந்தத் தடவை பகல் கனவு. பகல் கனவு பலிக்காதும்பாங்களே, அப்படின்னும் ஒரு யோசனை, முனியப்பன் மனசுக்குள்ள ஓடுது. இருந்தாலும் கனவுல யானை, அதான் பயம். நெனச்ச மாதிரியே 09.01.09ந்தேதி முனியப்பன் அப்பாவோட தங்கச்சி அவுட். இந்தத் தடவை ரொம்ப speed. கனவு வந்த ரெண்டு நாள்ல result.

கனவுல யானை வெரட்டுனா முனியப்பனோட தந்தை வழி உறவுல ஒரு இறப்பு நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை.

இளவயது மரணங்கள்

தாய்தந்தை வளர்த்த பின்
தானே வளர்ந்து
ஒரு வேலை கிடைத்து
ஒரு வழியாக செட்டில் ஆகும் சமயம்

அனைவரும் ஆவலோடு அவன் வளர்ச்சியை
அவனை ஆசையாய் எதிர்பார்க்கும் நேரம்
அவன் மரணம் இளவயதில்
அது அனைவர் உள்ளத்தையும் உருக்குகிறது

உயிரை இழக்கும் அவன்
உயிரை எடுக்கும் காலன் கொடியவன்

முப்பது வயது முருகானந்தம்
மூளையில் புற்று நோய்
அன்பான காதலியையும்
அத்துடன் குடும்பத்தையும்
மரணத்தால் தவிக்க விட்டவன்

இருபத்தேழு வயது முருகேசனுக்கு
இடியோபதிக் திராம்போ சைட்டோ னிக் பர்ப்யூரா
மூளையில் கட்டுப்படுத்த முடியாத இரத்தக் கசிவு
முடிவில் மரணம்

முப்பது வயது மகேந்திரன்
மூளையில் கட்டி
மனைவி மகளை
மரணத்தால் பிரிந்தான்

24 வயது ராஜேஸ்வரியை மரணத்தால்
இரு பிள்ளைகளிடமிருந்து பிரித்த Blood Cancer

மாடியில் இருந்து தவறிவிழுந்து
மரணத்தைத் தழுவிய ராம்குமார் I yr B.com

மேல்நாட்டில் வேலைக்குச் சென்று
மேல்உலகம் சென்ற மோகன் குமார், கார்த்தி, வினோத்

சொல்லிக் கொண்டே போகலாம்
சொல்ல முடியாத இளவயது மரணங்கள்
என்ன பிழை செய்தார்கள் இவர்கள்
எதற்காக இறைவா இளம்வயதில் பறிக்கிறாய் ?

இது போன்ற இளவயது மரணங்களால்
இறைவா உனக்கு என்ன அல்ப சந்தோஷம்

படைப்பவனும் நீ
பாதியில் அழைப்பவனும் நீ
இனி இந்த விளையாட்டு போதும்
இதயங்கள் நொறுங்காமல் குடும்பங்கள் சிதையாமல்
காப்பது உன் வேலை
கலங்க வைக்காதே இனி ........

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் சிவனாண்டி

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்

சிவனாண்டினா ... உடனே சின்னப்பையன்னு நெனச்சுராதீங்க. இவர் 80 வயசு பெருசு. மதுரைல பைபாஸ் ரோட்ல ஒரு எடத்துக்கு காவல்காரரா ரொம்ப வருஷமா இருக்கார். இந்த வயசுலேயும் தானே பொங்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை

அவரோடது. அடுத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்ல அவர் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. சிவனாண்டி ஒடம்புக்கு சுகமில்லைன்னா நேரா கெளம்பி முனியப்பன் கிட்ட வந்துருவார். முனியப்பன் அவருக்கு வைத்தியம் பாத்து அவர் பீஸ் குடுத்தா வாங்கிக்குவார். பீஸ் குடுக்கலைன்னாலும் விட்ருவார். சிவனாண்டி பீஸ் குடுத்தாலும் 10 ரூபா தான் குடுப்பார். இப்ப கொஞ்ச நாளா அந்த 10 ரூபாவும் குடுக்கிறது இல்லை. இப்ப ஒருநாள் சிவனாண்டி ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார்.

வைத்தியம் பாத்து முடிச்சிட்டு கெளம்பும் போது நேரா முனியப்பன்கிட்ட வந்தார் சட்டைப் பைக்குள்ள கைய விட்டார். ஒரு Carry bag; அதை எடுத்தார். அந்த Carry bagல நாலு முட்டை, "நாட்டுக்கோழி முட்டை சின்ன வெங்காயம் சேத்து, ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க"ன்னார். முனியப்பன் ஒரு நொடி அசந்துட்டார். நம்ம மேல பெருசு இவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு.

இப்ப முனியப்பன் வீட்ல நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்; சிவனாண்டி வந்துட்டார்னா. கிராமத்து மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி.