Tuesday, November 18, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (குடிகாரன் - நம்பர் 1)

இவர் குடிகாரர்களில் நம்பர் 1 ஆ செலக்ட் பண்ண காரணம் இருக்கு.

இவர் ஒரு கரைவேட்டி மந்திரியின் மைத்துனர். மந்திரி இவருக்கு லாரியெல்லாம் வாங்கிக் கொடுத்தார். லாரிய வச்சு இவர் என்ன பொழைக்கவா போறார். குடிச்சே லாரியக் காலி பண்ணிட்டார்.

அப்பப்ப முனியப்பன் கிட்ட வருவார். 30 ரூபாய் வாங்கிட்டுப் போவார். எங்க? குடிக்கத்தான். இப்படியே போய்க்கிட்டிருந்துச்சா;

ஒரு நாள் காலைல 6.30க்கு முனியப்பன் வீட்டுக்கு வந்தார். முனியப்பனைப் பாத்த ஒடனே அழுக ஆரம்பிச்சார். "என் மக செத்துப் போச்சுன்னார்." வாங்கன்னு சொல்லி அவரை டூவீலர்ல பின்னால ஒக்கார வச்சு முனியப்பனும் கூடக் கெளம்பினார். பொறவு கேதம்ல.

பெரியார் பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் ரவுண்டானா வந்ததும், வண்டிய நிப்பாட்ட சொல்லி, "மாலை வாங்க ரூவா குடுங்க"ன்னு கேட்டு 50 ரூவா வாங்கிட்டுப் போனவரு .... போனவரு தான்.

முனியப்பன் 15 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கெளம்பி போயிட்டாரு. 3 மாசம் கழிச்சு முனியப்பன் ஆபிசுக்கு மேற்படியான் வந்தாரு. மொதல்ல அவருக்கு ஒரு அடியப் போட்டாரு முனியப்பன்.

குடிக்க காசு வேணும்கிறதுக்காக தன்னோட மகள் செத்துப்போயிட்டதா சொல்லி காசு வாங்கினார் பாருங்க. குடிப்பழக்கம் மனுஷனை எப்படில்லாம் பேச வைக்குது பாருங்க... குடிக்க ஒரு காரணம் மக செத்துப் போயிட்டா. கொடுமைடா சாமி ......

முனியப்பன் ஓபனிங் பேட்ஸ்மேன்

முனியப்பன் ஸகூல் நாட்கள்ல தான் கிரிக்கெட்டப் பரவலா விளையாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு இருக்க கிரிக்கெட் பைத்தியத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதுல முனியப்பனும் ஒருத்தர்.

பள்ளிக்கூடம் லீவு விட்டா போதும். கிரிக்கெட் ஸ்டெம்ப், மட்டை, பந்து எடுத்துக்கிட்டு முனியப்பன் கோஷ்டி கெளம்பிடும்.

அவர் சொந்தக் கிராமத்துக்கு லீவுக்குப் போவார். அங்கயும் 40 வருஷத்துக்கு முன்னாடியே கிரிக்கெட் விளையாட்ட ஆரம்பிச்சு வச்சுட்டார். முனியப்பன் ஒரு ஆல்ரவுண்டர். மட்டையும் அடிப்பார், பந்த வீசி விக்கட்டையும் சாச்சிருவார். முனியப்பனின் கிரிக்கெட் கூட்டாளிகளில் ஒருவர் இடது கை ஆட்டக்காரர் உலக நாயகன்.

முனியப்பன் விளையாடுற நேரம் மட்டும் தான் விளையாடுவார். மத்தபடி படிக்கப் போயிருவார். ஸ்கூல் முடிச்சு காலேஜ்க்கு போனார். காலேஜ் டீம்ல செலக்ட் ஆயி 'அவுட்' ஸ்டாண்டிங் பேட்ஸ்மேனாயிட்டார். அதாங்க மேட்ச்ல விளையாடாம வெளிய நிப்பாங்களே அவுட் ஸ்டாண்டிங் அதான். அதுக்கப்புறம் முனியப்பன் சீரியஸா படிக்க ஆரம்பிச்சார்.

மறுபடியும் கிரிக்கெட் வெளையாட ஒரு சந்தர்ப்பம் கெடைச்சது. காலேஜ் ஸ்போர்ட்ஸ் மீட்ல ஒரு அணிக்காக வெளையாண்டார். இவர் தான் ஓபனிங் பேட்ஸ்மேன். பேட் மாட்டி, கார்டு மாட்டி, ஸ்டம்ப் முன்னாடி நின்னு சுத்தி ஃபீல்டிங் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பாத்துட்டு மொத பந்த எதிர் கொண்டார். வந்தது யார்க்கர். அண்ணன் என்ன செய்வாரு, அவுட் தான்.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (பாதுகாப்பான உடலுறவு)

உடலுறவை எப்படி பாதுகாப்பா வச்சிக்கணும்கிற டாபிக் இல்லை இது.

டாக்டர் எக்ஸின் நோயாளிகள் ஒரு தம்பதி. திரு & திருமதி என அப்படி வச்சுக்குவோம்.

திரு என்ன பண்றார் ?. இன்னொரு பொம்பளயோட தொடர்பு வச்சிக்க ஆரம்பிக்கிறார். இது ரொம்ப நாள் நடக்குது. யாரும் திருமதி கிட்ட இதப்பத்தி சொல்லல. ஏன்னா குடும்பம் கெட்டுப் போயிரும்ல.

இப்படியே போய்க்கிட்டிருக்கும் போது திரு ரெண்டு மூணு கிரிமினல் கேஸ்ல சம்பந்தப்படறார். நீதிமன்றத்தில் அவரோட உயிருக்குப் பாதுகாப்பாக ஒரு போலீஸை நியமிக்க உத்தரவு போடுறாங்க. 24 மணி நேரமும் திருவுக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் கூடவே இருக்காங்க.

திரு போலீஸ் பாதுகாப்போட செட்டப் வீட்டுக்குப் போய்ட்டு வர்றார். பாதுகாப்பு போலீஸ் ஒருத்தர் மனசு கேக்காம திருமதி கிட்ட விஷயத்தை சொல்லிர்றார். பிறகு கேக்கனுமா கலவரத்தை. செட்டப் வீட்டுக்கு போற திருமதி ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சா தெருவே நாறுது.

பிறகு ஒருநாள் திரு & திருமதி டாக்டர் கிட்ட வர்றாங்க. கிளினிக் வாசல்ல திரு, திருமதியை டூ வீலரை விட்டு இறக்கி விடுறார். திருமதி திருவை சத்தம் போடுகிறார். 'டேய் ஒன்னை வெட்டிக் கொல்லாம விட மாட்டேன்டா'. திரு டூ வீலரை எடுத்துப் பறக்கிறார்.

டாக்டர் எக்ஸ் திருமதியை அமைதிப் படுத்துகிறார். அப்பொழுது திருமதி செட்டப் விஷயம் தனக்கு இப்பொழுது தான் தெரியும் என்று சொல்லி நடந்த விவரங்களைக் கூறுகிறார். சொல்லி முடித்து 'பாதுகாப்பான உடலுறவு' என்று போலீஸ் துணையுடன் திரு செட்டப் வீட்டுக்கு சென்று வந்ததைக் கூறினார். போலீஸ் பந்தோபஸ்து எதுக்கு யூஸ் ஆகியிருக்கு பாருங்க !