Sunday, June 28, 2009

கொடியவள் நீ ...

காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ

கரம்பற்றி கைகோர்த்தது
கைவிடவா....?

நீ கவிழ்த்தது கப்பலை அல்ல
என் இதயத்தை
சிதறு தேங்காய் போல்
சிதறியது என்மனக் கோட்டைகள்

நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ

என் இதயத்தை
ஏன் ரணகளமாக்கினாய் ... ?

காதலிக்க ஒருவன்
கைப்பிடிக்க ஒருவன்
நீயும் ஏன்
பத்தோடு பதினொன்றாகிப் போனாய்....?