Wednesday, July 7, 2010

நாகராஜின் சிரிப்பு. ரிப்போர்ட்டருக்கு நன்றி

அகதி மாணவன் நாகராஜின் பரிதவிப்பு தினத்தந்தி நாளிதழிலும், ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழிலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த செய்தி தமிழக முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி நலனுக்காக அவர்களை பொதுப்பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை (GO) பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அகதி மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பிற்கான கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ளலாம். அகதி மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால் அவர்களுக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும்.

அகதித் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கும் இந்த அரசாணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அகதிகளின் அடிப்படைத் தேவைகளை மட்டும் கவனித்த தமிழக அரசு இப்பொழுது அகதி மாணவர்களின் உயர் கல்வியில் தனது முத்திரையைப் பதித்திருப்பது நல்ல நிகழ்வு. இந்த ஆரம்பம் ஈழத் தமிழர்களிடமும் தொடர வேண்டும்.

தனி ஒரு ஆளாக உயர் அதிகார்கள், அமைச்சர் வரை தன்னுடைய உயர் படிப்புக்காகப் போராடி, அகதி மாணவர்வளுக்கான கல்வி வசதியை கொண்டு
வந்த நாகராஜூக்குத்தான் இந்த பெருமை. இந்த ஆண்டு இதனால் பலன் பெறப் போவது 21 அகதி மாணவர்கள். மருத்துவம் படிக்க நாகராஜ் விரும்பியதால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம், நாகராஜீக்கான மருத்துவப் படிப்பபுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு SRM மருத்துவக் கல்லூரியில் நாகராஜிக்கு படிப்புக்கு இடம் வாங்கி சேர்த்து விட்டிருக்கிறது. ஆக அகதித் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிப் பிறந்திருக்கிறது.