Sunday, August 3, 2008

பாட்டும் காமெடியும்

திரைப்படப் பாடல்கள் மக்களை Complete ஆக Relax பண்ணுது. அத யாரும் மறுக்க முடியாது. அந்த காலத்து எம்.ஜி.ஆர்., சிவாஜி டூயட் பாடல்கள். M.S. விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் வந்த பாடல்கள் . ஜானகி, சுசீலா, P.B. சீனிவாஸ், TMS பாடல்கள் இன்னைக்கும் தாலாட்டக் கூடியவை.

அடுத்து வந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள், அடுத்து A.R. ரகுமானின் இசை, அதுக்கடுத்து ஹாரிஸ் ஜெயராஜ், இப்ப யுவன் சங்கர் ராஜா. சங்கர் - கணேஷ், T. ராஜேந்தர், S.A. ராஜ்குமார் இவர்களின் இசையும் மனதை மயக்கின.

கண்ணதாசன் பாடல் வரிகளுக்குப் பின்னர் வைரமுத்துவின் வைர வரிகள், T. ராஜேந்தரின் வரிகள், பா.விஜய், முத்துக்குமார், இன்னைக்கு பாட்டெழுத நெறய பேர் இருக்காங்க.

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும். வாழ்க்கைல சிரிக்கிறதுக்கு இன்னைக்கு இருக்க வாய்ப்புகள் ரொம்ப கம்மி. படங்கள்ல வர்ற காமெடி மக்களை சிரிக்க வைக்குது.

நல்ல கதையும், நல்ல காமெடியும், நல்ல இசையும் கலந்தா நிச்சயமா அது மிகப்பெரிய ஹிட். இது சரித்திரம். காமெடி படத்தோட வெற்றி ஒன்றி வரும்போது படத்தைப் பெரிய level-ல கொண்டு போகுது.

அந்த காலத்துல N.S. கிருஷ்ணன், அப்புறம் சந்திரபாபு, அதுக்கப்புறம் T.S.பாலையா, T.R. ராமச்சந்திரன், உசிலை மணி. நாகேஷ் காலத்துல காமெடி டிராக் படத்துக்கு அவசியமாயிருச்சு. குமரிமுத்து, என்னத்த கண்னையா, கல்லாபெட்டி சிங்காரம், லூஸ் மோகன், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், MRR வாசு இவங்களும் சிரிக்க வைச்சாங்க. காமெடில நாகேஷ்க்கு அப்புறம் கொடிகட்டிப் பறந்ததது கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் தான். அதுக்கப்புறம் விவேக், வைகைப் புயல் வடிவேல், வடிவேல் காமெடி தான் கவுண்டமணி-செந்திலுக்கு அப்புறம் டாப்.

கதாநாயகனே நகைச்சுவைல கலக்குனது ரஜினி மட்டும் தான். கமலஹாசனும் கல்யாணராமன், தெனாலி படங்கள்ல தூள் கிளப்பியிருப்பார்.

கரகாட்டக்காரன் படத்தோட மிகப்பெரிய வெற்றில காமெடியோட பங்கு அதிகம். அன்பே வாவின் வெற்றியிலும் நகைச்சுவையோட பங்கு கணிசமானது.

சந்திரமுகி படத்தோட வெற்றிய வரிசைப்படுத்தினா 1) ரஜினி 2) வடிவேல் காமெடி 3) ஜோதிகா. சந்திரமுகிக்கு அப்புறம் வந்த சிவாஜி பெரிய ஹிட் ஆகல. அதனால இப்ப ரஜினியோட குசேலன்ல வடிவேல் இருக்கார்.

ஆக பாடல்கள், நகைச்சுவை, மக்களை ரிலாக்ஸ் பண்ணுது. இது மறுக்க முடியாத உண்மை.

நகைச்சுவை நடிகைகள்ல நடிகர்கள் ஜொலிச்ச அளவுக்கு யாரும் பெரிய அளவுல வரலை.

மதுரம், மாதவி, சச்சு, ஆச்சி மனோராமா, கோவை சரளா இப்படி ரொம்ப சுருக்கமானவங்க தான். கோவை சரளாவுக்கப்புறம் காமெடி நடிகைகளே புதுசா வரலை.


முக்கியமானவங்க ஆச்சி மனோரமா. ஆயிரம் படங்களைத் தாண்டி அவங்க நகைச்சுவைல கொடிகட்டிப் பறந்த அளவுக்கு, குணச்சித்திர கேரக்டர்கள்லயும் வாழ்ந்து காட்டியிருக்காங்க.

வீட்ல Home theatre, VCD, Carல ஆடியோ, இரண்டு காதுலயும் வயர மாட்டிக்கிட்டு வாக்கிங் போகும்போது, சைக்கிள்ல போகும்போது, டூவீலர்ல போகும்போது, பாட்டு கேட்டுக்கிட்டு போறவங்க எண்ணிக்கை அதிகம். மக்கள் இசையை விரும்புறாங்க இது மிகப்பெரிய உண்மை.

காலர் டியூன், ஹலோ டியூன்னுன்னு செல்போன்ல பாருங்க, நீங்க ஒங்க மனசுக்குப் பிடிச்ச பாட்டை வச்சுக்கலாம். சினிமா பாட்டு மட்டுமல்ல, பக்திப்பாட்டும் தான். இசைமயம் நாடெங்கும்.

இயக்குநர் ஜீவரத்னம்

இவர் இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டர்.ஆஸ்கார் விருதுகள், தேசிய, மாநில விருதுகள் பெறுவதற்குத் தகுதியானவர். அதற்கான நேரத்துக்காக காத்திருக்கார். அப்படியெல்லாம் கிடையாது. இவர் இதுவரைக்கும் எத்தனை படம் குடுத்திருக்கிறார்ன்னுல்லாம் detail கிடையாது. 'மேகம்' னு ஒரு படத்தை டைரக்ட் பண்றார். அவர் வண்ணத்திரைனு ஒரு தமிழ் சினிமா வாரஇதழ் 17.07.2008-ல ஒரு பேட்டி குடுத்திருக்கார்.

அவர் சொல்லியிருக்கார். "எல்லா மதத்தினரும் கையெடுத்துக் கும்பிடும் கடவுள் மருத்துவர். அப்படிப்பட்ட மருத்துவர் நோயாளிகளின் நோயைக் குணப்படுத்தாமல், அவர்களின் மனதை ரணப்படுத்துவது நியாயமா? அப்பாவிகளைப் பற்றி நான் எடுத்திருக்கும் காட்சிகளால் நிறைய எதிர்பார்ப்புகள் வரும், தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவற்றை நியாயப்படுத்துவதற்காக தயாராக இருக்கிறேன். நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜீவரத்னம்.

என்ன மாற்றம் உண்டாகும்னு நெனக்கிறார். எல்லா நோயாளிகளும் டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்குறத விட்டுட்டு ஜீவரத்னத்துக்கிட்ட treatmentக்குப் போகப்போறாங்க, பாவம் டாக்டர்கள்லாம் ஈ ஓட்ட போறாங்க இப்படி ஒரு காட்சி அவர் மனசுல ஓடுதுன்னு நெனக்கிறேன்.

உலகத்துல புனிதமான தொழில் 1st ஆசிரியர் தொழில். 2nd டாக்டர் தான். அதுக்கப்புறம் தான் மத்த தொழில்லாம்.


School-ல பிளஸ்டூ முடிச்சு ரிசல்ட் வந்தவுடனே ஸ்டேட் டாப் Rankers குடுக்கிற பேட்டிய படிங்க ஜீவரத்னம். "நான் என்ஜீனியர் ஆகப்போறேன். நான் டாக்டருக்குப் படிச்சு மக்களுக்கு சேவை செய்யப்போறேன்." அப்டீன்னு தான் மாணவர்களோட பேட்டி இருக்குமே தவிர "நான் சினிமாக்காரன் ஆகப்போறேன்னு" சொல்றானா ஜீவரத்னம்.

இப்ப Train-ஐ எடுத்துக்கங்க. ரிசர்வ் பண்ற பாரத்தில If you are a Doctor Please mention அப்படின்னு போட்டிருக்கும். நீ சினிமாக்காரனா அப்படிங்கற வார்த்தைய Reservation பாரத்தில பாத்திருக்கீங்களா ஜீவரத்னம்.

Internation Airport-ல டாக்டர்னா தனி மரியாதை உண்டு. சினிமாக்காரனுக்கு கிடையாது. பிரகாச நடிகர் ஒரு தடவை Airportல அவஸ்தைப் பட்டிருக்கார்.

Medico legal கேஸ்ல டாக்டருடைய கருத்து தான் முக்கியமானதுன்னு சுப்ரீம் கோர்ட்லயே சொல்லியிருக்காங்க. சினிமாக்காரன் கருத்து சுப்ரீம் கோர்ட்ல எடுப்பாங்களா ஜீவரத்னம் ?.

Court-ல சாட்சி சொல்லப்போற டாக்டர், Court hall-ல வக்கீல்கள் போலீஸ் அதிகாரிகளோட உட்காருவாங்க. சினிமாக்காரன் சாட்சி சொல்லப்போனா அந்த மாதிரி உட்கார முடியாது ஜீவரத்னம்.

சினிமாக் காரங்களப் பத்தி எழுதுனா நாஸ்தியாயிரும் ஜீவரத்னம்.

"நான் சினிமாவுக்கு வந்ததே மது, மாது ஈஸியா கெடைக்கும்கிறதுக்கு தான்" இது டைரக்டர் லிங்குசாமி கொடுத்த பேட்டி.

வாளமீனு வயிற்றை Caravan-க்குள் தடவிய தயாரிப்பாளர்னு ஒரு News.

நடிகைங்கிறதே உலகத்தில முதல்ல தோன்றின தொழில செய்வதுக்கான visiting card தான். நட்பு நடிகை, கண்ணழகி நடிகைய பத்தி செய்திவராத நாள் இருக்கா?

அந்த நடிகை அந்த ஆஸ்பத்திரில போய் வயித்தைக் கழுவிட்டு வந்தார். இது சாதாரணமான News. கலைச்சேவைன்னு வெளிநாட்டில போய் என்ன செய்றீங்க ? எல்லாருக்கும் தெரியும்.

30 வருஷத்துக்கு முன்னால தவறான உறவுகளைப் பத்தி படமெடுத்தார் ஒரு பிரபல இயக்குநர். அந்த படத்தப் பாத்து கெட்டவங்க எத்தனை பேர் ?. நூறாவது நாள்னு ஒரு படம். அதைப்பாத்து தான் கொலை செஞ்சேன். இது ஒரு கொலையாளியின் வாக்கு மூலம்.

சமுதாயத்தை சீரழிக்கிறதுல முதல் இடம் சினிமாவுக்குத் தான் மிஸ்டர் ஜீவரத்னம்.

படம்கிறது ஒரு பொழுதுபோக்கு. திரைப்படத்துறையில இருக்கவங்க வானத்துல இருக்கவங்க இல்ல. நீங்களும் சராசரி மனிதன் தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகைப்புயல் வடிவேலு இவங்களை விட தனிநபர் வருமானம் ஈட்டக்கூடிய டாக்டர்கள் நெறய இருக்காங்க. உங்க சுயநலத்துக்காக, உங்கள் வருமானத்துக்காக, புனிதமான தொழில தவறா சித்தரிக்காதீங்க.

ஒங்க படம் வந்தபிறகு டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்காம யாராவது இருக்கப் போறாங்களா? பிரதமர் மன்மோகன் சிங் cataract ஆபரேட் பண்ணது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பண்ணது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்தது, தமிழகத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் எல்லாரும் மருத்துவம் பாக்குறது டாக்டர்கள் கிட்ட தான். சினிமாக்காரன் கிட்ட இல்ல.

சினிமாக்காரன் Hitch கூத்தாடி. அத மறக்காதீங்க Mr.ஜீவரத்னம். மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லுங்க. ஒங்க சுயலாபத்துக்காக சமுதாயத்தைச் சீரழிக்காதீங்க.

ஆசிரியரும், டாக்டரும் தான் உலக மக்களோட வாழ்க்கைக்கு அஸ்திவாரம். சினிமாக்காரன் இல்ல.

சினிமா தயாரிப்பாளர்கள்

இப்படி ஒரு இனம் இருக்கறத பத்தி இன்னைக்கு இருக்கற நடிகர், நடிகர், நடிகைகள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. இயக்குநருக்குள்ள மரியாதை தயாரிப்பாளருக்கு நிச்சயமா கிடையாது.

எம்.ஜ.ஆர், சிவாஜி மற்றும் அந்த காலத்து நடிகர்கள், தயாரிப்பாளருக்கு எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லுவாங்க. இப்ப அந்த மரியாதை கொடுக்கற நடிகர்கள் ஒரு சிலர் தான்.

சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய இருந்திச்சி. பழங்கால நிறுவனங்கள்ல இன்னைக்கு AVM, சத்யஜோதி பிலிம்ஸ், கலைப்புலி தாணுன்னு இருக்காங்க. AVMல வருஷத்துக்கு ஒரு படம் 3 அல்லது 4 படம் பண்ணுவாங்க, சத்யஜோதில வருஷத்துக்கு ஒரு படம் கண்டிப்பா பண்ணுவாங்க, கலைப்புலி தாணுவும் அடுத்தடுத்து படம் பண்ணுவார். இன்னைக்கு பாருங்க AVMல 3 இல்ல 4 வருஷத்துக்கு ஒரு படம் பண்றாங்க. அதே மாதிரி தான் சத்யஜோதியும், தாணுவும்.

இன்னைக்கு இருக்க படைப்பாளிகளை நம்பி கஷ்டப்பட அவங்க விரும்பலை. Companyயோட அடையாளத்துக்காகத்தான் இவ்வளவு இடைவெளி விட்டு படம் பண்றாங்க.

நடுவுல பெரிய அளவுல நெறய படம் பண்ணிய நிறைய தயாரிப்பாளர்கள் fieldட விட்டே ஒதுங்கிட்டாங்க.

K.T.குஞ்சுமோன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், திருடா திருடி கிருஷ்ணகாந்த், கஜினி சேலம் சந்திரசேகர், டைரக்டர் V.சேகர் இப்படி நெறய பேர் இருக்காங்க.

பழய திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் பண்ண தயங்குறாங்க. ஏன்னா, கதை கிடையாது, வெட்டி செலவு நெறய, குறிப்பிட்ட காலத்துல படத்தை முடிக்கிறது கிடையாது.

இப்போ சினிமா பண்ண வர்றாங்கன்னா, அதில சினிமாவ பத்தி அனுபவம் இல்லாதவங்கதான் கிட்டத்தட்ட முழுசும். தயாரிப்பாளர் புது டைரக்டர் ஒருத்தர்கிட்ட மாட்டுவான். ஒண்ணும் இல்லாத கதைய ஆஹா ஓஹோன்னு சொல்லி படமெடுக்க வச்சிருவார். தயாரிப்பாளரை சகல விதத்திலயும் கவனிச்சிருவாங்க. தயாரிப்பாளரும் மெய்மறந்து போய் காசை மட்டும் அள்ள\ளிக் கொட்டிக்கிட்டேயிருப்பார். மொதல்ல 1 கோடில முடிச்சிரலாம்பாங்க. அப்புறம் அந்தா இந்தான்னு 2, 3 கோடில கொண்டு வந்து விட்ருவாங்க. இதுல உண்மைல படத்துக்கு ஆன செலவு பாதிதான் இருக்கும். மீதிய ஒரு கூட்டமே பங்கு போட்டுருவாங்க.

படம் முடிஞ்சவுடனே பிஸினஸ் ஆகாது. சொந்தமா ரிலீஸ் பண்ணுவாங்க. பெட்டி 2 நாள்ல திரும்பி வந்துரும். இதான் அதிகமாக நடக்குது.

படம் தயாரிக்கிற ஆசைல இன்னொரு குரூப் 50 லட்சத்தை மட்டும் வச்சு ஆரம்பிச்சு, கடன் வாங்கி படம் எடுக்க, படம் Slowவா வளரும். கடைசில ஒன்னும் செய்ய முடியாம படம் டிராப் ஆயிரும்.

சினிமா தயாரிக்க வர்றவங்க சினிமாவ பத்தி நல்லா தெரிஞ்சி, கதை அறிவோட, வெட்டி செலவுக்கு வாய்ப்பு கொடுக்காம வந்தா நல்லா இருக்கும்.

சூப்பர்குட் பிலிம்ஸ் சவுத்ரி வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் தயாரிப்பைக் குறைச்சுட்டார். சூர்யா மூவிஸ் A.M.ரத்னம் வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் பீமாவுக்கு அப்புறம் சத்தமில்லாம இருக்கார். AASCAR ரவிச்சந்திரன் தான் இப்போதைக்கு தொடர்ச்சியா பண்ணிக்கிட்டிருக்கார்.

SAIMIRA இப்பதான் தயாரிப்புல எறங்குறாங்க. இன்னும் 2 வருஷம் கழிச்சுதான் அதைப்பத்தி சொல்ல முடியும்.

கதை இலாகா

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம் கதை, திரைக்கதை.

அந்தக் காலத்துல (Once upon a time) கதை இலாகான்னு டைட்டில் கார்டு போடுவாங்க. படத்துக்கான கதைய உருவாக்ககுறதுன்னு ஒரு Team இருந்துச்சு. கதை இலாகா தனியா இருக்கும். வசனகர்த்தா ஒருத்தர் இருப்பார். டைரக்டர் தனியா இருப்பார். படமும் நல்லா இருக்கும்.

அடுத்த காலகட்டம் கதாசிரியர் தனி. வசனம் தனி. டைரக்டர் தனி. கதாசிரியர் கிட்ட இருந்து கதைய வாங்கி ஒரு டைரக்டர் கிட்ட குடுத்து படம் பண்ணுவாங்க. அந்த periodலயும் படங்கள் நல்லா இருந்துச்சு.

அடுத்த கால கட்டத்துல தான், படங்களோட கதையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிச்சுது. கதை, திரைக்கத, டைரக்ஷன்னு எல்லாத்தையும் ஒரே ஆளு பாக்க ஆரம்பிச்சாங்க அப்படி ஜெயிச்சவங்க ரொம்ப கம்மி.

குறிப்பிட்ட நடிகருக்காக கதை பண்றாங்க. கதைல hero, தயாரிப்பாளர் தலையீடு இப்படி கதைய ஒக்கிடற வேலை நடக்குது. இப்ப கதைங்கிறதே இல்லாம போக ஆரம்பிச்சிருச்சி.

இப்ப வந்து நல்லா ஓடிக்கிட்டிருக்க சுப்ரமணியபுரம் டைரக்டர் ஒரு பேட்டில சொல்லியிருக்கார். எல்லா கதையும் எடுத்து முடிச்சாச்சு, கதைல கொஞ்சம் வித்தியாசம் தான் காமிக்க முடியும். இன்றைய படைப்பாளிகளின் கதை அறிவு, சிந்திக்கிற திறமை அவ்வளவு தான். அதனால் தான் படங்களோட தோல்வி.

சினிமாக்காறன்ட்ட technology இருக்கு. கதை இல்ல. கதை சொல்ல ஆள் இல்லாமலா இருக்காங்க? கதை கேட்கிறவனும் கதை அறிவு இல்லாம இருக்கான். படத்தோட தயாரிப்பாளரும் கதை அறிவு இல்லாம இருக்கான்.

இந்த டைரக்டர், இந்த Hero, இந்த Heroine அப்படின்னா கல்லா கட்டிரலாம்னு தான் படம் தயாரிக்க எறங்குறாங்களே ஒழிய, கதைய கண்டுக்கறதேயில்லை.

சினிமாக்காரனுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல கதய சினிமாவுல இல்லாதவங்கிட்ட தேடுங்க. கதை எழுதறதுக்கு சினிமா அனுபவம் தேவையில்லை.

நல்ல கதைகள் வரும் காலத்தில் தமிழ் சினிமா தலை நிமிரும்.

கதைக்கான concept நெறய இருக்கு, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல்.

சினிமா தவிர வேற வேலை இல்லையா ?

சினிமா தவிர வேற வேலை இல்லையா ?

அப்படி நெனக்காதே செல்லம். சினிமா மிகப்பெரிய மீடியம? நல்லதோ, கெட்டதோ சீக்கிரம் மக்களாண்டை பூயிரும்பா. சினிமா நூஸ் இல்லாமா பேப்பர் போடச்சொல்லு. ஒரு பத்திரிகையும் விக்காதுப்பா, தமிழனோட பிளட்ல அது மிக்ஸ் ஆயிருச்சுமே. அத எவனாலயும் மாத்த முடியாதுமா.

படத்த தியேட்டர்ல பாக்கலனாலும் Net-ல் திருட்டு VCD-ல படத்த பாத்ததுர்றானுவ. தமிழ்ப்பட Audio கேட்காம இருக்க முடியுமா?. நம்ம தலைவன் படம் ஜெயிச்சுதுன்னு வச்சுக்க, அப்பால நம்ம Heartல சந்தோஷம் பொங்கும் பாத்தியா, அதான்மா தமிழனோட அடிமனசு.

அப்புறம் சினிமாவா பத்தி ஏன் நெகட்டிவா எழுதுறன்னு கேட்குறியா, நெகடிவ்வ சுட்டி காண்பிக்கிறது கரீக்ட் பண்றதுக்குமா .


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி

உலகத்தை தமிழ் சினிமாவ காட்டி மயக்கனும் தலீவா, அதான் இந்த தொடரோட aimமா.

The standard of the Tamil cinema should raise above all the language films.

முனியப்பன் சினிமாவ பத்தி எழுதறத முடிச்சுட்டு வேற topic போயிருவான்.

தமிழ் சினிமாவப் பத்தி மட்டும் எழுதற writers பெருந்துளசி பழனிவேல், சுரா, ஜெ.பிஸ்மின்னு இருக்காங்க. முனியப்பன் போற போக்குல சினிமாவ touch பண்ணிட்டு போறவன். முனியப்பன் நெறய topic எழுதுவான். முதல் topic தான் தமிழ் சினிமா.