Sunday, May 20, 2012

ஹெல்மெட் தொடர்ச்சி .....

கண்ணப்பன் மதுரை கமிஷனரா இருந்தவர். பிப்ரவரி, 2012ல மதுரைல டூவீலர் ஓட்டுற போலீஸ் எல்லாரும் தலைல ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட விட்டார். பிப்ரவரி 29ல இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுற பொது ஜனத்தை பிடிச்சு ஃபைன் போட ஆரம்பிச்சாங்க. மார்ச் 5ந் தேதிக்குள்ள மதுரைல டூவீலர் ஓட்டுற எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிட்டாங்க.

எங்க பாத்தாலும் ஹெல்மெட் தலை தான். ஹெல்மெட் போடலைன்னா போலீஸ் பிடிக்கும்... அப்புறம் ஃபைன் ... இப்படியே ஏப்ரல் 15 வரைக்கும் ஓடுச்சு. கண்ணப்பன் ஐபிஎஸ் மதுரைல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போனார். இப்ப யாரும் ஹெல்மெட் போடுறது இல்ல. போலீசும் பிடிக்கிறது இல்ல. எல்லாமே LAW ENFORCING AUTHORITYய பொறுத்துத் தான்.