தொப்புள் கொடி உறவுகள்
கைகொடுக்கும் எனக் காத்திராமல்
தமிழக அரசியல்வாதிகள்
தமிழினப் பற்றை அறிந்தபின்
தானே சிலிர்த்தெழுந்த
தமிழீழ மக்களே.........
உங்கள் உணர்வுக்கும்
உங்கள் துடிப்புக்கும் வணக்கம்.
உள்நாட்டில் வேதனையுறும்
உடன் பிறப்புகளுக்காக
அயல் நாட்டில்
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே
உலகை உலுக்கும்
உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு
என்னால் முடிந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல
என்னைப் போன்ற பலரின் வாழ்த்தும் உண்டு
காலம் கற்பிக்கப் போகும் பாடம்
கண்டிப்பாக உண்டு ராஜபக்சேக்கு
வேதனைகள் தீரும்
விடியல் உண்டு
தமிழினம் மீளும்
தமிழீழம் மலரும்
Saturday, April 11, 2009
Subscribe to:
Posts (Atom)