Monday, May 4, 2009

சண்டையும் சமாதானமும்

உன் குத்துக்கள்
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது

முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு

காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று

தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்

மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....