Monday, July 16, 2012

பெருச்சாளி தான் கட்டிலை ஆட்டுதுன்ணு - குமார்

11.04.2012ல மதியம் 2 மணிக்கு இந்தோனேசியாவில பூகம்பம்.

அதே சமயத்துல நம்ம மதுரைல பாருங்க ...

குமார் நம்ம முனியப்பன்ட்ட 20 வரு­மா இருக்க ஆளு. மத்தியானம் அவர் வீட்ல கட்டில் ஆடியிருக்கு. கட்டில பெருச்சாளி தான் பிடிச்சு ஆட்டுதுன்ணு நம்ம குமார் நௌச்சுட்டார்.

நடராஜன் ... நம்ம முனியப்பன் கிளினிக்குக்கு அடுத்த வீட்ல இருக்கவர். அவர் வீட்லயும் கட்டில் ஆடியிருக்கு. கட்டிலுக்கு அடியில யாரோ இருக்காங்கன்ணு நௌச்சுட்டார்.

குருவம்மா ... நம்ம செல்வியோட பாட்டி. அவங்க வீட்ல தரையில படுத்திருக்காங்க... தாலாட்டுற மாதிரி ஒரு சொகம்.

இவங்கள்லாம் மதுரைல ஏற்பட்ட நில அதிர்வை வித்தியாசமா உணர்ந்தவங்க.

இந்தோனேசியாவில பூகம்பம், சுனாமி வரப் போகுது, மதுரைல நில அதிர்வு அப்படின்ணு டிவில பாத்து அபார்ட்மெண்ட்ல கட்டில் ஆடின உடனே, வீட்டை விட்டு ஓடி வந்து, அபார்ட்மெண்டுக்கு வெளியே வந்து நின்னவங்க எஸ்.எஸ்.காலணி மற்றும் எல்லீஸ் நகர்ல.

இவங்க அனுபவம் பாருங்க ... வேற மாதிரி ஒரு பயம்... ஒரு பாதுகாப்பு நடவடிக்கை.

குமார், குருவம்மா, நடராஜன் எல்லாம் லைஃப கேசுவலா எடுத்துக்கிறவங்க.