Sunday, August 22, 2010

உனக்கு ரெண்டு மூஞ்சி - அஷீ

டேய் குட்டிப் பையான்னு முனியப்பனை கூப்பிடும் அஷீக்குட்டி ஒரு ஜோக் குட்டி.

இப்படிதான் ஒரு நாளு அஷீக்குட்டிக்கு முதுகு அரிக்குது. முதுக சொரிஞ்சு விட சிக்குனது முனியப்பன்தான். அஷீக்குட்ட முதுக சொரிஞ்சுவிட்ட முனியப்பன் கைய எடுத்துர்றார். ஒடனே அஷீக்குட்டி "சொரிஞ்சு விட்டுகிட்டே இருடா" ங்கவும் ஒரே சிரிப்பு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் school லீவுங்கறதால அஷீ , அமர், முனியப்பன் மூணு பேரும் இளநீ குடிக்க போவாங்க. அஷீ ரொம்ப slow வாத்தான், அதுவும் ரசிச்சு எளநீ குடிக்கிற ஆளு. முனியப்பன் " என்ன ஒரு மணி நேரமா எளநீ குடிக்கிற" அப்படின்னா, "10 மணி நேரம் குடிப்பேன்" ஒரே அடியா போட்ருவார்.ஒரு நாள் லீவு time. அஷீவும், அமரும் ஓடிப்பிடிச்சு வெளையாண்டுக்கிட்டிருக்காங்க.மதிய நேரம். முனியப்பன் ஓய்வு எடுக்கிற நேரம், முனியப்பன் படுத்து கெடக்கிறார். திரு திருன்னு ஓடி வந்த அஷீக்குட்டி முனியப்பன் கூட தானும் படுத்து ஒரு Bed sheet அ எடுத்து முனியப்பனையும் சேத்து பொத்தி படுத்துட்டார். பெறகு "அண்ணன் வருவான், ஒனக்கு ரெண்டு மூஞ்சின்னு அவன்கிட்ட சொல்லிருன்னு சொல்லிட்டார் இப்ப முனியப்பன், அஷீ மூஞ்சி மட்டும் தெரியுது."பின்னாலயே அமர் வந்துட்டார். "அஷீ வந்தானா" "இல்ல" "அப்ப ரெண்டு
மூஞ்சி இருக்கு" "எனக்கு ரெண்டு மூஞ்சி" "ok" அப்படின்னு சொல்லிட்டு அமர் போயிர்றார். அஷீவும் முனியப்பனும் பேசாம படுத்துக் கெடக்காங்க. அமர் திரும்பி வர்றார். அதே கேள்வி, அதே பதில். இதே மாதிரி 2 தடவைக்கு அப்புறம் கட்டில்ல ஏறி பெட்ஷீட்டை தூக்கி அமர் "இந்தா இருக்கான்டா" ன்னு சொல்லவும் , அஷீ எந்திரிச்சு ஓட, அமர் பின்னால வெரட்டிக்கிட்டு ஓட, அவங்க வெளையாட்டு தொடருது. டேய் வாடா போடாங்கிறது அன்பின் மிகுதி.