Monday, October 11, 2010

பகல் கொள்ளை

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.

முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.

8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.

அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.

"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .

சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.