Thursday, January 1, 2009

CASE SHEET (தாய்-மகன்)

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை இன்னைக்கும் மக்கள் பயப்படுற வியாதி. மஞ்சள் காமாலை வந்தா பாதிப்பேர் என்ன, முக்காவாசிப் பேர் நாட்டு மருந்து சாப்பிடப் போயிருவாங்க.

புதுத் தாமரைப் பட்டில கண்ணுல மருந்து ஊத்துவாங்க. அச்சம்பத்துல தலைல பத்து போடுவாங்க, காரைக்குடில உள்ளுக்கு மருந்து கொடுத்து "வயித்தால (Diarrhoea) போகும். பயப்படாத" அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க. உசிலம்பட்டி பக்கத்தில முன் கைல (Forearm) wrist-க்கு பக்கத்துல வட்டமா சூடு போடுவாங்க.

ஆங்கில வைத்தியம் தனி. முனியப்பன் பாத்த தாயும் மகனும் அசத்திட்டாங்க. தாய்க்கு வயசு 80, மகனுக்கு வயசுக்கு 60. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மஞ்சள் காமாலை. இரத்தத்தில பிலிருபின் அளவு அதிகமாக இருக்கறதால ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்றார் முனியப்பன். ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் ரூம்.

மஞ்சள் காமாலைக்கு முக்கியமா ரெஸ்ட் தேவை, அதுனால முனியப்பன் ஸ்ட்ரிக்டா ரெண்டு பேருக்கும் சொல்லிட்டார். ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, அவங்கவங்க ரூம்லயே இருக்கணும்னு. தாய்-மகன் எதிர் எதிர் ரூம். அப்படியிருந்தும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம 10 நாள் ஓடுது. இரத்தத்துல ரெண்டு பேருக்குமே பிலிருபின் 10க்கு மேல, மஞ்சள் காமாலை டூமச். அதுனால தான் ஒருத்தரை ஒருத்தர் பாக்க தடா, அப்புறம் ரெண்டு பேருக்கும் சுகமாச்சு, அப்பத்தான் ரெண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க விட்டார் முனியப்பன்.

முனியப்பன் டூமச் கண்ட்ரோலா இருக்கக் காரணம் தாய்-மகன், ரெண்டு பேரும் நல்லபடியாகனும்னு தான். அதே மாதிரி தாய் மகன் ரெண்டு பேரும் முனியப்பன் பேச்சை இம்மி பிசகாம கடைப் பிடிச்சு நல்லா சுகமா வீட்டுக்குத் திரும்பினாங்க.

தாய்ப்பாசம், பிள்ளைப் பாசம் ரெண்டையும் தாண்டி, தாய் மகன் ரெண்டு பேரும் இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

ஒரு ரூபாய் டாக்டர்

ஒத்த ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை குடுக்க முடியுமா ? குடுத்தார் 1980களில் ஒரு டாக்டர். அவர் பேரே ஒரு ரூபா டாக்டர், அவர் மருத்துவத் தொழில் பாத்தது மேலப்பாளையம் திருநெல்வேலி. அவர் பேரு டாக்டர் சாகுல் ஹமீது.

திருநெல்வேலில எல்லா டாக்டரும் அந்த காலகட்டத்துல 3 ரூபாய் அல்லது 5 ரூபாய்க்கு ஊசி போட்டுக்கிட்டிருந்த நேரம், இவர் மட்டும் 1 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். அப்ப சிறப்பு மருத்துவர் கூட பீஸா 10 ரூபாய் தான் வாங்கிட்டிருந்தாங்க. கைல காசு இல்லைன்னா .... ஃப்ரியா ஊசி போட்டு, கைல செலவுக்கும் காசு குடுப்பார்.

முனியப்பன் நெல்லைய விட்டு வந்து 25 வருஷமாச்சு. இப்ப டாக்டர் சாகுல் ஹமீது எப்படியிருக்கார்னு விசாரிச்சுப் பாத்தா, டாக்டர் மேற்படிப்பா MS படிச்சு ஆபரேசன் பண்ணிகிட்டு நல்லா இருக்கார்னு சொன்னாங்க.

இப்ப திருநெல்வேலி பேட்டைல அவர் இருக்கார்.