Tuesday, February 23, 2010

ஆப்பரேஷன் பண்ணிட்டீங்களா - அஞ்சுகம்

குபீர் சிரிப்பலைகள் எதிர்பாராமல் என்றாவது எழும். சிரிப்பை யாராலும் அடக்க முடியாது.

முனியப்பனின் பால்ய பருவத்தில் அடிக்கடி சளி, இளைப்பு காரணமாக அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டியிருந்தது. மூன்று Course ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அவருக்கு போட்ப்பட்டது. ஒரு couse என்பது 90 ஊசி. ஆக 3 x 90 = 270 ஊசிகள். ஸ்டெரப்டோமைசின் ஊசியின் பக்க விளைவு Ototoxicity செவி கேட்கும் திறனை குறைத்து விடும்.

இப்பொழுது ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி அதிகம் பயன்படுத்துவதில்லை. அப்படியே ஸ்ரெப்டோமைசின் போட நேரிட்டாலும் 45 ஊசிதான். நெடு நாள் குணப்படுத்த முடியாத MDRTB க்கு மட்டும் ஊசி. அவ்வளவுதான். ototoxic என்பதால்தான் இந்த கட்டுப்பாடு.

270 ஊசி முனியப்பனுக்கு என்ன பாடுபடுத்தியிருக்கும். செவி கேட்கும் திறன் சற்று குறைவு.

16.02.10ந் தேதி குண்டு குமார் ஊசி போட வந்திருக்கார். அப்பொழுது அஞ்சுகம் என்ற நோயாளி ஊசி போட வருகிறார். அவர் செவி கேட்கும் திறன் முற்றிலும் குறைந்தவர். முனியப்பன் குமாரிடம் " நமக்கே காது சரியா கேக்காது, இந்த அம்மாவுக்கு சுத்தமா கேக்காது" என்று சொல்லி விட்டு அஞ்சுகத்தை பரிசோதனை பண்ணி treatment எடுக்கிறார்.

அடுத்தநாள் 17.02.10 அதே போல குண்டு குமார் ஊசி போட வந்த நேரத்தில் அஞ்சுகமும் ஊசி போட வருகிறார். அஞ்சுகம் தனக்கு உள்ள வியாதி முதல் நாள் இருந்ததுக்கு இப்பொழுது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினார்.

"இப்ப ஒங்களுக்கு காது நல்லா கேட்குது. காது ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா"

அடக்க முடியாத பொறுக்க முடியாத சிரிப்பு குமாருக்கு, முனியப்பனுக்கு சிரிப்பை கிளப்பி விட்ட அஞ்சுகமும் சிரிப்பில் சேர்ந்து கொள்ள ஒரே சிரிப்பு.

இந்த மாதிரி சிரிக்கும் சமயங்கள் மனசு இலகுவாயிருக்கும். நடிகர்கள் மாதிரி, மருத்துவர்களை கவனிக்கும் நோயாளிகள் உண்டு. அதில் ஒருவர்தான் அஞ்சுகம்.

Tuesday, February 9, 2010

இசை அரசி பேரன் பொறந்தாச்சு

இசை அரசி பேரன் பொறந்தாச்சு

இசை அரசி மதுரைல ஒரு தபால் துறை ஊழியரா பணியில இருந்தாங்க.

அவங்க வீட்டுக்காரரு உடற்பயிற்சி ஆசிரியரா அரசு மேல்நிலைப் பள்ளியில வேலைப் பாக்குறார். பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணு. 2 குழந்தைகள் அவங்களுக்கு பிள்ளைகள் வளர்றாங்க. பொண்ணு PG முடிச்சு B.Ed., பண்ணுது. பையன் +2 முடிச்சு காலேஜ்ல மொத வருஷம்.

ஒரு குடும்பம் நல்லா இருக்குறது கடவுளுக்கு பிடிக்காதுல்ல. தண்ணி தொட்டி கழுவ போன மகன், மேல 3வது மாடியில இருந்து தவறி விழுந்துர்றான். பெத்த பிள்ளை ரத்த வெள்ளத்துல, தலை காயத்தோட உயிரில்லாம ... பெத்த தாயால எப்படி தாங்க முடியும்? இசை அரசி அதிர்ச்சியில உறைஞ்சுர்றாங்க. அவங்க வீட்டுக்காரரும் அதே நிலைதான். ஒரு வருஷம் ஆகுது. இசை அரசியோட கணவரும் போய்ச் சேந்துர்றார். அடுத்தடுத்து ரெண்டு உயிரிழப்பு. அதுவும் சாகக்கூடிய வயசு கெடையாது. இசை அரசி கடுமையான அதிர்ச்சியில இருக்காங்க.

முனியப்பனை பார்க்க வந்தா அழுதுருவாங்க. அழுகவிட்டு, ஆறுதல்படுத்தி அனுப்பிருவார். அவங்க மகளுக்கு அரசு வேலை கெடைச்சு ஆசிரியராயிர்றாங்க. மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மருமகனும் அரசு ஆசிரியர். மொதல்ல இசை அரசிக்கு பேத்தி பொறக்குது.PG முடிச்சு B.Ed.,

இசை அரசி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வர்றாங்க. அப்புறம் முனியப்பனை பாக்க வர்றப்போ அழுக மாட்டாங்க. கண்ணு மட்டும் கலங்கும். இப்ப அவங்க பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தை பிறக்குது. ஆண் குழந்தை பேரனை பார்த்ததும் இசை அரசி சந்தோஷமாயிர்றாங்க. பேரன் வடிவில மகன் அவங்களுக்கு தெரியிறான்.

எல்லா குடும்பத்துலயும் உள்ள பழக்கம் இது. உயிருக்கு உயிரானவங்க இறந்த பிறகு, அடுத்து பொறக்குற குழந்தை வடிவில அவங்க தெரியிறது ஐதீகம்னு கூட சொல்லலாம்.

மகன் பேரன் வடிவில வந்து இசை அரசிக்கு புத்துணர்ச்சியை குடுத்திருக்கான். வாழ்க்கை சந்தோஷமா, சலிப்பில்லாம போறதுக்கு ஒரு பிடிப்பு வேணும். பேரன்கிற பிடிப்பு இசை அரசியை இனிமே கண்கலங்காம பாத்துக்கும்.