Tuesday, January 6, 2009

CASE SHEET (நச்சுக்கொடி)

முனியப்பனும் நச்சுக்கொடியும்

பிரசவ நேரத்துல மொதல்ல தண்ணிக்குடம் உடையும், அடுத்து பிள்ளை பிறக்கும். கடைசியா நச்சுக்கொடி என்ற நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறும். இது Normal Procedure. சமயத்துல நச்சுக்கொடி வெளியேறாமா நச்சுக்கொடி உள்ளேயே இருந்துக்கிடும். Retained Placenta. அதை வெளியேத்தணும். ஆச்சா, இதுல நம்ம முனியப்பன் எங்க வர்றார் பாருங்க ...

முனியப்பன் அப்ப இளம் மருத்துவர். அப்பத்தான் மருத்துவம் படிச்சு முடிச்சு Private practice ஆரம்பிக்கிறார். எடம் நெல்லை மாவட்டத்துல ஆராம்பண்ணை கிராமம். Note பண்ணிக்குங்க, நம்மாளு ஒரு கிராமத்துல 3 வருஷம் மருத்துவம் பாத்திருக்கார். கிராமப்புற மருத்துவம்.

அந்த கிராமம் முஸ்லீம் சமுதாயத்தினர் பெருமளவு வசிக்கிற கிராமம். மிகவும் பக்தியான Orthodox முஸ்லீம் கிராமம். அப்ப ஒருநாள் அங்க ஒரு பொண்ணுக்கு டெலிவரி. பிரசவம் அரசு ஆஸ்பத்திரில உள்ள உதவி செவிலியர் பாக்குறாங்க. பிள்ளை பிறந்துருச்சு, நச்சுக்கொடி வரலை. எவ்வளவு முயற்சி பண்ணியும் வரலை. "என்ன செய்யலாம், முனியப்பனைக் கூப்பிடு". முனியப்பனைக் கூப்பிட்டு விடுறாங்க.

முனியப்பன் உபகரணங்களோட அவங்க வீட்டுக்குப் போனா 100 - 120 பேர் வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ள 20 - 30 பெண்கள். முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிச்சவர் இல்லையா, தொழில்ல, ஜகஜ்ஜால கில்லாடி. ரெண்டு நிமிஷத்துல நச்சுக்கொடிய (Placenta) வெளியே எடுத்து அவங்க கைல குடுத்துட்டு வந்துர்றார். அவங்களுக்கு பரம திருப்தி.

அந்தக் கிராமம் தான், முனியப்பனுக்கு கிராமத்து மக்களோட பாசத்தையும், அன்பையும் சொல்லிக் கொடுத்தது. இன்னைக்கு 24 வருஷம் கழிச்சும், அங்க போய்ட்டு வர்றார் முனியப்பன்.

O&G பிரசவம் பாக்கறதுல கெட்டிக்காரர்கள் ஆண் மருத்துவர்கள் தான்.

ஆதி காலத்து Dr. நோபிள் அப்புறம் G.பழனிச்சாமி, பாஸ்கர் ராவ், Dr. பழனிவேல் இப்பொழுது Dr.கோபிநாத், Dr.ரத்தினகுமார், Dr.ஸ்ரீராம்குமார், Dr.குரியன் ஜோசப்

CASE SHEET (ஸ்டார்ட்டிங் டிரபிள்)

Two வீலர்ல ஸ்டார்ட்டிங் டிரபிள் வரும். Four வீலர்ல வரும். Lifeலயும் வரும்.
எப்ப... ?

வாழ்க்கைல முக்கியமான விஷயம் கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச உடனே பர்ஸ்ட் நைட். அங்க வர்ற ஸ்டார்டிங் ட்ரபிள்தான் இந்த டாபிக். எல்லாருக்கும் இது வராது. ஏன்னா மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை. ஒரு சிலருக்குத் தான் இது.

அதுல ஒரு சிலர் முனியப்பன்கிட்ட கல்யாணத்துக்கு அடுத்த நாளே வந்துருவாங்க. சார், அண்ணே அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுவாங்க. வீர விளையாட்டுல்ல, அதுல ஃபெயில் ஆனா எப்படி இருக்கும் ...? மானப் பிரச்சனை.

பொதுவா பயம், செயல்படுறதுல குறைபாடு, அறியாமை இதுல ஒண்ணு தான் இருக்கும். கொஞ்சம் பயத்தைப் போக்கிட்டோ ம்னா போதும். அன்னைக்கே கரெக்டாயிரும். சுருங்கிப்போய், பதறிப்போய் வந்த மூஞ்சி, அடுத்து வரும் போது புன்னகையோடு மலர்ந்திருக்கும் பாருங்க, கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இமயத்தில் கொடி நாட்டிய சந்தோஷம்.