Friday, November 26, 2010

மழை ஸ்கூல் அமர் அஷீ

அதிகமா மழை பெஞ்சா ஸ்கூல் பிள்ளைக கஷ்டப்படக்கூடாதுன்னு அரசாங்கமே லீவு விட்டுருவாங்க.

இப்ப மதுரைல தீபாவளிக்கப்புறம் மழை பெங்சுசிட்டேயிருக்கு.அதுலயும் இந்த 4 நாள் மழை ஊத்திக்கிட்டிருக்கு. செவ்வாய்க்கிழமை கவர்ன்மெண்ட்ல லீவு விட்டாங்க.புதன்கிழம ஸ்கூல்ல லீவு விட்டாங்க. அந்த ரெண்டு நாளும் பகல்ல மழை பெய்யல.

வியாழக்கிழம காலைல இருந்து மழை. அமரும் அஷீவும் ஸ்கூலுக்கு கெளம்பி போயிட்டாங்க. 11 மணிக்கு பிள்ளைகளை கூப்பிட்டு போங்கன்னு ஸ்கூல்ல இருந்து sms. அஷ¥வும் அமரும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சு.

அமர் "லீவுன்னு சொல்லிட்டாங்கன்னா மழை பெய்ய மாட்டேங்குது", லீவு விடலேன்னா மழை பெய்யும்பா" அப்படின்னு சொன்னார்.

வெள்ளிக்கிழமை காலை இருந்து மழை. நம்ம ஜோக் குட்டி, "மழை பெஞ்சுகிட்டே இருந்தா, லீவு விட்ருவாங்களான்"னு அஷ¥வுக்கே உள்ள Trade mark சிரிப்ப விட்டார்.

ஸ்கூல் லீவு விடல. மழை பெஞ்சுகிட்டே இருக்கு. இப்ப அமரும், அஷ¥வும் ஸ்கூல்ல.

அமருக்குத்தான் வருத்தம் "ஸ்கூல்ல படிப்பு போயிருச்சு, எழுத முடியாது, Friends அ பார்க்க முடியாது.

மழை ஸ்கூல் லீவு அஷ¥, அமர் contrast கருத்துக்கள்

விருந்தும் மருந்தும் 3 நாளைக்குதான். School நாள்ல, School லீவு விட்டா எப்படி தாங்க முடியும் அமருக்கு.

Saturday, November 20, 2010

கல்யாணத்தை நிறுத்து - TVMC

கல்யாண மேடைல மணமகன், மணமகள், நடத்தும் அய்யர், மேடைக்கு முன்னால வாழ்த்த வந்திருக்கும் ஆட்கள், கெட்டி மேள சத்தத்தோடு அய்யர் தாலி எடுத்துக் குடுக்கும் போது தலைக்கு மேல தாய்மாமன் "உய்ய்ய்" னு பறந்து வந்து கல்யாணத்த நிறுத்துன்னா எப்படி இருக்கும் .

"ஆ" ன்னு மயக்கம் போட்ட பெண்கள், பயத்துல நடுங்கி சத்தம் கொடுத்த பெண்கள் அதிகம். பய்ப்படாத ஆண்களும் இல்லை.

இதெல்லாம் எங்கன்னு பாக்குறீங்களா.

மணமகன், மணமகள், அய்யர், தாய்மாமன் எல்லாமே எலும்புக்கூடு. இருட்டு ரூம்ல மேடைல மட்டும் வெளிச்சம். பின்னால இருந்து தலைக்கு மேல எலும்புக்கூடு, ஸ்டீரியோ எப்க்ட்ல பறந்து மேடைக்கு வந்தா எப்படி இருக்கும். அரட்டிட்டாங்க.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவ கண்காட்சி 1977ல.

இந்த அமைப்பு Dr.ஜெயகர் ஜோசப், Dr.ராஜ்குமார் பண்ணது.

எலும்புக்கூடு கல்யாணம் 1977 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண்காட்சில டாப் நிகழ்ச்சி.

எலும்புக்கூடு மணமகனும், மணமகளும் எலும்புக்கூடு அய்யர் எடுத்துக் கொடுக்க மால எல்லாம் மாத்துவாங்க, சிரி சிரின்னு சிரிச்சு ஆர்வமா பாத்துக்கிட்டிருந்த Audience பின்னால இருந்து தலைக்கு மேல தாய்மாமன் எலும்புக்கூடு பறந்து வந்த உடனே டர்ராயிருவாங்க.

Monday, November 15, 2010

நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா - அமர்

முனியப்பன தன்னோட வீட்டுக்கு Phone பண்ணா, Phone அ எடுத்து ஒரு Recorded voice மாதிரி "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்" னு ஆரம்பிச்சது, முனியப்பனுக்கு ஆச்சர்யம் "என்னடா புதுசா இருக்கேன்னு" Rcorded voice மாதிரி தொடருது "தற்சமயம் எந்திரன் படம் பார்த்துக் கொண்டிருப்பதால் சிறது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்" அமர் இப்படி சொல்லிட்டு Phone அ வச்சுட்டார். முனியப்பனுக்கு பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரே சிரிப்பு

இந்த அமர்தான் முனியப்பனை பாத்து ஒரு குண்டை வீசினார், "நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா?"

"ஏம்ப்பா"

அமர் "நீ தின்னுட்டு ஒக்காந்துக்கிற, அப்புறம் எப்படி கலோரி வெயிட் ஏறும், சாப்பிடறத செலவழிக்கனும்"

முனிய்பபன் அப்படி ஒண்ணூம் வெயிட் கெடையாது. 60 Kg இருக்க வேண்டிய ஆள் 62 kg, அதனால ஒரு சின்ன தொந்தி அந்த excess 2 kg தொந்தி அமர் கண்ல பட்டு, முனியப்பனுக்கு advice பண்ண வச்சிருக்கு.

மாமான்னா அமர், அஷ¥வுக்கு அவ்வளவு பாசம். சிறு வயசிலயே Health Awareness வந்திருக்கு பாத்தீங்களா அது ரொம்பப் பெரிய விஷயம்.

Tuesday, November 9, 2010

புதிய பதிவர் / புதிய ஜூவா

புதிய ஜூவா / இப்ப தினமணி குடும்பத்தில் பணிபுரியறார். 20 வருஷம் தொழிலாளியா வேல பாத்துட்டு, இப்ப 6 வருஷமா தினமணி. அவர் தன்னோட தொழிலாளி ஞபாகத்தை

http://pudiyathozhilaly.blogspot.comல எழுதுறார். தன்னோட அனுபவங்கள புக்கா போடுற ideaவும் அவருக்கு இருக்கு.

புதிய ஜூவா வேற யாரும் இல்ல, முனியப்பனோட 1973/1974ல ஒண்ணா படிச்சவர். புதிய ஜூவாவின் தொழிலாளி அனுபவங்களை நாமளும் பாப்போம். வருக, வருக புதிய ஜூவா.