Wednesday, September 3, 2008

ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்

மாட்டினா, தப்பிக்க முடியாது, இது பழமொழி.

மதுரை டாக்டர் எக்ஸ்கிட்ட தவறான உறவு கொண்டவுடன் ஊசி போட வருபவர்கள் சிலர். பாதுகாப்புக்காக ஊசி போடுறாங்களாம்.

அப்படி மாட்டுன 2 பேர் 1) டாக்டர் எக்ஸ்சின் மிக நெருங்கிய உறவினர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவருடைய மருமகன் ஒரு காவல்துறை எஸ்.ஐ. அவர் இந்த மாதிரி தவறு செய்துவிட்டு டாக்டர் இன்னாரென்று தெரியாமல் ஊசி போட எக்ஸ்சிடம் வந்தார்.

2) டாக்டர் எக்ஸ்சின் தங்கச்சி மாப்பிள்ளையின் அத்தை மகனும் இதேபோல் டாக்டர் அடையாளம் தெரியாமல் இதே போல் தவறிழைத்து விட்டு ஊசிபோட வந்தார்.

பாலியல் தவறிழைப்பது மனித இயற்கை அதை செஞ்சுட்டு வந்து பாதுகாப்பு வேணுமாம் அதுக்கு ஊசியாம், நல்லாருக்கும்மா ?. அதுவும் முன்னபின்ன டாக்டர்கிட்ட தான் போய் ஊசிபோடுவாங்க, நம்மளை யார்னு தெரியாதுன்னு டாக்டர் எக்ஸ்கிட்ட ஊசிபோட்டு மாட்டுனவங்கதான் இவங்க ரெண்டு பேரும்.

சசிதரன் நாயர்

பேரை படிச்சவுடனே சொல்லிருவீங்க. இவர் மலையாளத்துக்காரன்னு கேரளாக்காரராயிருந்தாலும் இவர் படிச்சது சமஸ்கிருதம். சுமஸ்கிருத பேராசியரா துறைத் தலைவரா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இப்ப பணி மூப்படைந்துவிட்டார்.

இவர் மகனும் ஐ.ஏ.எஸ் மருமகளும் ஐ.ஏ.எஸ். ரெண்டு பேரும் டெல்லில பணியில் இருக்காங்க. இவர் மகள் கொச்சி பல்கலைக் கழகத்திலும் மருமகன் கொச்சி ஷிப்யார்டிலும் பணியில் இருக்காங்க.

ர்ட்டயர் ஆனவுடனே மகள் கூடயோ மகன் கூடயோ இல்ல சொந்த ஊரிலோ செட்டில் ஆக வேண்டியது தானே முறை முடியாதுங்கிறார்.

காரணம் மதுரையில் உள்ள அவர் சொந்த வீடு. தனக்கான வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டினார் சசிதரன் நாயர். ஆசையாய் கட்டின வீட்டை பிரிய எப்படி மனசு வரும் அவர் வீட்டை 87லட்சம் ரூபாய்க்கு விலைக்கு கேட்டாங்க. முடியாதுன்னுட்டார். அந்த வீட்டிலேயே கடைசி வரை இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அவர் அணு அணுவாய் ரசித்து கட்டிய வீட்டின் மேல் அவருக்குள்ள காதலை பாராட்ட வேண்டியதுதானே இயல்பு.

மாந்தி

நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.

சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.

ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.

எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம். வெளிகிரக தொடர்பு எப்படி உணடாச்சு எப்படி கட் ஆச்சு இதெல்லாம் பெரிய டாபிக்.

பில்லி சுனியம் செய்வினை

நம்ம தமிழனுக்கு உள்ள மோசமான குணம் தனக்கு பிடிக்காத ஆளை எப்படியும் கெடுக்கணும் கவுத்தனும்கிற மனப்பான்மை தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்கிறது அவங்களோட விருப்பம்

பில்லி சுனியம் செய்வினை எல்லாம் அடுத்தவனை கெடுக்கிறதுக்காக வைக்கிறது. இது அமானுஷ்ய விஷயம்கிறாங்க. மனித சக்திக்கு அப்பாற்பட்டதுன்னு எடுத்துக்குங்க. ஒருத்தனோட ஜாதகக் கட்டத்தில 5ம்
பாகமும் 9ம் பாகமும் பலவீனமா இருந்தா பில்லி சுனியம் வேலை செய்யும்கிறாங்க 5ம் பாகமும் 9ம் பாதமும் நல்லா இருந்தாலும் தசாபுத்தி மோசமா இருந்தா பில்லி சுனியம் பலிக்குமாம்.

பில்லி சுனியத்தின் ஆப்ரிக்க கண்டத்து அடிப்படை ஊடூ எனப்படுகிறது. கறுப்பு மாந்தீரிகம் எனப்படும் பிரபலமான ஆப்ரிக்க பில்லி சுன்யம் ஊடூவை அடிப்படையாக கொண்டது.

செய்வினை வச்ச வீட்ல எதாவது ஒரு பக்கம் கைய காட்டி அந்த எடத்த தோண்டுவாங்க. அந்த எடத்துல ஒரு தகடு இருக்கும். இதை மோசடி மாந்திரீகம்கிறாங்க.

பில்லி சுனியம் செய்வினை வைக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க வச்சத எடுக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க.

பில்லி சுனியம் செய்வினை நீக்கிறதுக்குன்னே தெய்வீக திருத்தலங்கள் (கோயில்கள்) 3 இருக்கு அங்க போய் சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்தாலே தெய்வீக நிவாரணம் உறுதி.அந்த தலங்கள் 1) திருச்சி அருகே உள்ள குணசீலம் ஊரில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாசன் 2) வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோளிங்கர் ஊரில் உள்ள மலையில் வீற்றிருக்கும் பெருமாள்-யோகநரசிம்மர் 3). கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.

நீதியரசர் ஸ்ரீனிவாஸன்

நீதிபதியுடைய கடமை நியாயமான தீர்ப்பை சொல்வது. ஒரு மேற்கொளை எடுத்துக்காட்டி தீப்பு சொல்பவர்கள் மிக அரிது. இவருடைய தீர்ப்பு பரபரப்பான தீப்பு. அதை இந்த பக்கத்தின் கடைசியில் சொல்கிறேன்.

அதற்கு முன் இவரைப் பற்றி சில வரிகள் ஆச்சாரமான பிராமண குடும்பம். நீதிமன்றத்துக்கு வரும் போது குடிக்க வெள்ளி கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார். தலையில் டர்பன். மிகவும் எளிமையானவர் நேர்மையானவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பின்னர் பதவி உயர்வில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த போது இவர் தீப்பளித்த வழக்குதான் பிரபலமான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு.

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கூடுதல் தளங்களை கட்டியதாக பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது விதிமுறைகளை மீறி கட்டிய தளங்களை இடிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி நீதியரசர் ஸ்ரீனிவாஸன்.

தீர்ப்பில் கூடுதல் தளம் கட்ட அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த ஓட்டல் வழக்கின் தீர்ப்பின் எதிரொலிதான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம். ஆளும்கட்சியாளர்களின் அராஜகத்துக்கு பலியான 3 விவசாய கல்லூரி மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள்.

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட மன்னனும் கெடுக்கக் கூடியவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெட்டுப்போவான் நியாயமான மேற்கொள். அதுவும் செல்வி ஜெயலலிதாவின் குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லை என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார் நீதியரசர் ஸ்ரீனிவாசன்.

முதலமைச்சர் பதவியில் இருப்பவரை விமர்சிப்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் அவர் செய்த தவறுக்கு தலைமைப் பதிவியில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது நீதிபதியின் சிறப்பை காண்பிக்கிறது.