Friday, March 9, 2012

ஓட்டு போடு ..... இல்லைன்னா

இப்ப இடைத் தேர்தல் வருது. ரெண்டு கட்சியுமே ஓட்டுக்கு ரூவா குடுக்குறவங்க. ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். இடைத் தேர்தல்ல ஜெயிக்கணு, இல்லாட்டா கவுரவம் போயிடும். இதுனால இடைத் தேர்தல்ல எப்பவுமே ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கும்.ரூவா குடுப்பாய்ங்க. சூடம் கொளுத்தி சத்தியம் வாங்குவாங்க.

இப்ப ஜெயிக்கலைன்னா பதவி போயிடும். நேரா கூப்பிட்டு டோஸ் விடுவாங்க. அதுனால எப்படியும் ஜெயிச்சாகணும்ல...

இப்ப 1 ஓட்டுக்கு ரூ.2000 + ஒரு மிரட்டல் .... ஓட்டு போடலைன்னா கரண்ட்டும் வராது, தண்ணியும் வராது.

நம்ம அரசியல்வாதிங்க என்ன ரேஞ்சில இருக்காங்க பாருங்க.

ரூவாயும் கொடுத்து ஒரு மிரட்டல் வேற ....... சூப்பர்ல ...