Tuesday, May 12, 2009

பேப்பர் சீனிவாசன் - எதுக்குன்னு புரியலை

பேப்பர் சீனிவாசன். பேப்ர் போடுறவன். 32 வயசு. பேப்பர் ஏஜென்சி எடுத்து நாளிதழ்கள், வார இதழ்கள், வீடுவீடாப் போடுறவன். பெட்டிக் கடை வச்சிருக்கான். அதுலயும் நாளிதழ், பத்திரிகைகள். பெட்டிக்கடை வச்சா சிகரெட், மிட்டாய் விக்கணும்ல, உண்டு. மெயின் தொழில் பேப்பர், புக்.

மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.

தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.

முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).

ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).

இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?