Friday, February 6, 2009

கேட்பாரில்லையா ............... ?

குருதி வெறி பிடித்த பிசாசுகளிடம்
இறுதி நாட்களில் பல உயிர்கள்
தமிழினத்தை அழிக்க

தான்தோன்றித் தனமான தாக்குதல்
இருக்கும் ஒரு மருத்துவசாலை - மீதும்
இடைவிடாத குண்டு வீச்சு

தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறென்ன அவர்களிடம்
இன வெறி பிடித்த
இலங்கை அரசைக் கேட்பது யார் ?

தீர்மானங்கள் போட்டால் அது
தீர்வாகுமா ஈழத் தமிழனுக்கு
கடை அடைத்தால்
கஷ்டங்கள் போய் விடுமா ?

மேடையில் முழங்கினால் ஈழத் தமிழன்
மேல்உலகம் செல்வது நின்று விடுமா ?

தொப்புள் கொடி உறவுகள் அரசியலாக்காமல்
தோணி ஏறி துயர்துடைக்க வரலாமே
வீடியோ பாருங்கள் ஈழத் தமிழனின்
விதவிதமான அவலங்கள், அழிவுகள், காரியங்கள்

உலகமே உறங்குது
உலக போலீஸ் அமெரிக்காவும் தான்
ஒபாமா சின்னப் பிள்ளையா
ஒன்றும் தெரியாமல் இருப்பதற்கு

ஐக்கிய நாடுகள் சபை எதற்கு
அநியாயங்களைக் கேட்பதற் கில்லையா ?
கடவுளுக்கும் கண்ணில்லை யென்றால்
காது கேட்கவில்லை யென்றால் ஈழத் தமிழன்
கண்களில் பெருகும் கண்ணீர்
காலத்தை வெல்லும்