Sunday, July 20, 2008

சினிமா விளம்பரங்கள்


எந்த ஒரு பொருளுக்கும் Marketing தேவை.

சினிமா வியாபாரிகளைக் கேக்கவே வேணாம். Advertising-ல தூள் கிளப்புறாங்க. படம் பூஜை போடுறதுக்கு விளம்பரம், Shooting போறப்ப விளம்பரம், படப்பிடிப்பில் அப்படின்னு விளம்பரம், விரைவில் இசை வெளியீடுன்னு விளம்பரம், இதெல்லாம் சரித்தான். Marketing Strategy.

இந்த விளம்பரங்கள் படத்தப் பத்தின எதிர்பார்ப்ப கூட்டுதுன்னு நெனக்கிறாங்க. அந்த விளம்பரத்திலேயே படத்த பத்தி சினிமா பாக்குற மக்கள் தெரிஞ்சுக்கறாங்க. இந்தப் படத்த பார்க்கலாம், இதப் பார்க்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிக்றாங்க.

இதுக்கிடைல படம் தயாரிப்புல இருக்கும்போதே படத்தோட டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர்னு பத்திரிகைல பேட்டியப் பாத்தீங்கனா சூப்பரா இருக்கும். "இந்தப்படம் Direct பண்றது, இப்படி ஒரு தயாரிப்பாளர் கெடச்சது என்னோட அதிர்ஷ்டம்" இது டைரக்டர். 'எனக்கு மொதல் படமா இருந்தாலும், எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து என்னை Shape பண்ணி பெரிய லெவலுக்கு கொண்டு போறதுக்கு உழைச்ச டைரக்டர மறக்கமாட்டேன்'. இது Hero. Heroine பொதுவா வெளிமாநிலமாத்தான் இருக்கும். Heroine பேட்டி "நான் என்னோட தாய்மொழில 3 படம் பண்ணியிருக்கேன். டைரக்டர் கதை சொன்னப்பவே ரொம்ப பிடிச்சுப்போச்சு" அப்படிம்பாங்க இந்த பேட்டிகள் அறிமுக நடிகர், நடிகை, புது டைரக்டர், புது தயாரிப்பாளர் படத்துக்கு.

பெரிய நடிகர், டைரக்டர் Production Companyனா பேட்டிய பாருங்க. நடிகர் "இப்படி ஒரு கதைக்காக wait பண்ணிட்டிருந்தேன். என் Film Career ல இது ஒரு டர்னிங் பாய்ண்ட்". நடிகை பொதுவா ஒரு முன்னணி நடிகையாதான் இருப்பாங்க. "கிளாமர் ரோல் மட்டும்னு நினைக்காதீங்க. என் கேரக்டர்ல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. படத்தோட அவுட்லைன் மட்டும் கேட்காதீங்க." இப்ப டைரக்டர் "இந்த ஹீரோவுக்காக இந்தக் கதையை ரெடி பண்ணி 7 வருஷம் காத்துக்கிட்டிருந்தேன். அவரும் பிஸி, நானும் பிஸி. ரெண்டுபேரும் சேர்ந்து இந்தப்படத்த பண்ண ஆரம்பிக்கிறதுக்கு இவ்வளவு நாள் ஆயிருச்சு. அவருக்கு அவ்வளவு பியூட்டிபுல் கதை. இந்தப்படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்". தயாரிப்பு நிறுவனமும் பெரிய நிறுவனமாகத்தான் இருக்கும். "நடிகர், டைரக்டர், கதை முடிவான உடனே Shooting ஆரம்பிச்சிட்டோம். படம் நல்லா வரணும்கிறதுக்காக நல்லா செலவு பண்ணியிருக்கோம். படம் பிரமாதமா வந்திருக்கு. உலகம் பூரா ஒரே டயத்துல ரிலீஸ் பண்றோம். 1000 பிரிண்ட் போடறோம்."

படம் பூஜையிலிருந்து படம் திரைக்கு வர்றவர பேட்டிகள். இதுக்கு இடைல பெரிய நடிகர் படம்னா படத்தோட கதை இதுதான்னு சொல்லி பத்திரிகைல கற்பனை வெளியீடுகள் வேற.

படம் தியேட்டருக்கு வந்த பிறகு பாருங்க, விளம்பரத்த, அதிலேயே படம் புட்டுக்கிச்சுன்னு சொல்லிரலாம்.

1) மக்கள் வெள்ளம் அலைமோதும்
2) ஹாலிவுட் படங்களை மிஞ்சிய வசூல்
3) சூப்பர் டூப்பர் ஹிட்டு
4) முந்திய சாதனைகளை முறியடித்தது
5) தாய்க்குலங்கள் கூட்டம் அலைமோதும் (பொம்பளை ஆளுக இப்ப படம் பாக்க வர்றதே ரொம்ப கம்மி)
6) குடும்ப உறவுகளை மையப்படுத்தி அழகாக கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்
7) நடிகரின் விசுவரூப வெற்றி
8) முதலிடம் கொடுத்த டிவிக்கு நன்றி
9) இது மாதிரி கதை வந்ததேயில்லை - நன்றி ஒரு வாரப்பத்திரிகை

Saturday, July 19, 2008

சினிமா டிக்கட்

முனியப்பன் பக்கங்கள் (5)

சினிமா டிக்கெட் எப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும்.

1990 வரைக்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புன்னு பிரிச்சு ஒவ்வொரு Class-க்கும் தனித்தனி ரேட் வச்சிருப்பாங்க. Ticket Counter ல ஒரு rate எழுதி வச்சிருப்பானுக. Counterல அந்த rateக்கு தான் ticket

படம் House Full ஆன ஒடனே Black Marketல தியேட்டருக்கு வெளியே ticket விக்கிறதுக்குன்னே ஒரு group இருந்துச்சு. இடம் கிடைக்காதவங்க கள்ள மார்க்கெட் டிக்கெட்ட வாங்கிட்டு படம்பாக்க போவாங்க. 1990ல டிக்கெட் விலயை கூட்டனும்னு அரசாங்கத்துக்கு கோரிக்கை வச்சாங்க. தியேட்டரில் படம் பாக்க கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி கொடுத்துச்சு. Counter-ல எழுதியிருக்க ரேட்டுக்கே டிக்கெட்ட குடும்பாங்க. படம் house Full ஆனா black ல டிக்கட்ட வாங்கி பாப்பாங்க. இது 2001 வரைக்கும் தொடர்ந்துச்சு. Black-ல ticket விக்கறவனை Police பிடிச்சுட்டு போகும்

2001ல புதிய தமிழக அரசு அழைத்தவுடனே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்லாம் போய் அரசாங்கத்து கிட்ட போய் முறையிட்டாங்க. எங்க தொழில் ரொம்ப நசிஞ்சி போச்சு. அதனால திரைப்படம் வெளியிட்ட மொத ரெண்டு வாரத்துக்கு தியேட்டர்ல டிக்கட் கட்டணம் இல்லாம நாங்களே ஒரு நுழைவு கட்டணத்தை நிர்ணயிச்சு வாங்கிக்கிறோம்னாங்க. தமிழக அரசும் கட்டணத்தை கூட்டி மொத ரெண்டு வாரம் மட்டும் கூடுதலா வசூல் பண்ணிக்கலாம்னு உத்தரவு போட்டுச்சு.

Black Market யே காணோம் ஒழிஞ்சு போச்சு. தியேட்டர் கவுண்டர்லயே பகல் கொள்ளை, ராத்திரிக் கொள்ளை, கூட்டுக் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டானுவ. Black Market காரன விட சம்பாதிக்க ஆரம்பிச்சானுக. கொள்ளையடிக்கிறதுக்கு ஒரு limitடே இல்லை.

உச்ச நட்சத்திரம் படம்னா 400 ரூபா வரைக்கும் விக்கிறானுக. தியேட்டர் கவுண்டர்லயே ticket சீட்டுல நுழைவு coupon மட்டும் தான் எழுதியிருக்கானுக. ஆனா அதுல டிக்கட் இவ்வளவுன்னு ரேட் கிடையாது. படம் ரிலீஸ் டயத்துல 100 ரூபாய்க்கு குறைச்சு டிக்கெட்டே குடுக்கிறதில்ல. கூட்டம் குறைஞ்ச பிறகும் டிக்கெட் கவுன்ட்டர்ல என்ன ரேட் எழுதியிருக்கோ அதை விட double ரேட்தான் வாங்குறாங்க. இத படத்தை தியேட்டரை விட்டு தூக்குற வரைக்கும் செய்றாங்க. இத அரசாங்கமும் வேடிக்கை பாக்குது.

உச்ச நட்சத்திரத்தின் கடைசியா வந்தா சத்ரபதி படத்தோடOpening Show Ticket தலைநகர்ல ரூ1500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு)

இப்படி இருக்கும் போது எப்படிய்யா படம் பாக்க தியேட்டருக்கு போவானுக ....?

திரைப்படங்களின் வாழ்நாள்

முனியப்பன் பக்கங்கள் (4)

ஒரு காலத்துல திரைக்கு வந்த அத்தனை படமும் குறைஞ்சது 25நாள் ஓடும். நல்ல படம்னா, 100 நாள் 175 நாள். அது MGR, சிவாஜி காலம். எல்லா ஊர்லயும் ஓடி முடிக்க 3 வருஷம் ஆகும். ரஜினி, கமல் ஆரம்ப காலங்கள்ல அப்ப கூட இதே நிலை இருந்துச்சு சினிமா தான் மக்களுக்கு ஒரே பொழுது போக்கு.

அப்புறம் படிப்படியா திரைப்படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரமே வெளியேற ஆரம்பிச்சது. நல்ல படங்கள் மட்டும் 50நாள் 100நாள் 175நாள் ஓட ஆரம்பிச்சது TV-ல, DD-ல திரைப்பட நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் திரைப்படம். மக்கள் இந்த ரெண்டு நேரமும் தெருவுல கூட நடமாடமாட்டாங்க.

அடுத்த காலகட்டம் 2நாள் 3நாள் ஓடக் கூடிய படங்கள்லாம் வர ஆரம்பிச்சது. பெரிய நடிகர்களின் படங்களும் 100 நாளை தாண்ட முடியாம போயிருச்சு. வெள்ளி விழா படங்களோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சது. அப்ப தனியார் சேனல்கள் நிறைய ஆரம்பிச்சாங்க. முக்கியமான நிகழ்ச்சியா எல்லா சேனல்லயும் திரைப்படங்கள், பாட்டுகள், கிளிப்பிங்ஸ் இடம் பெற ஆரம்பிச்சது. தியேட்டர்ல கூட்டம் குறைய ஆரம்பிச்ச உடனே, திரையுலகினர் எல்லாம் சேந்து TV மேல பழிய போட்டாங்க. எங்க வாழ்க்கையை TV கெடுத்துருச்சு அப்படின்னு பேச ஆரம்பிச்சாங்க.

TV-ல சினிமாவ காட்டுனதால தியேட்டர்ல கூட்டம் குறையல. உண்மை என்னன்னா இந்த கால கட்டத்துல மக்கள் சினிமா பாக்குறத குறைக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா ஒட்டு மொத்தமா தமிழ்நாட்ல உள்ள பிள்ளைக எல்லாம் Engineering, Medical, MBA, MCA -னு படிக்கிறதுல வாழ்க்கைல முன்னேற ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க Transport வசதிகள் வேன் டாக்ஸி அதிகமாச்சு. ஜனங்கள்லாம் கோவில், குளம், பிக்னிக்னு டூர் அடிக்க ஆரம்பிச்சாங்க. சினிமாவ மக்கள் மறக்க ஆரம்பிச்சு தமிழ்நாட்ல பாருங்க எல்லா ஜனமும் சம்பாதிக்க பொழைக்க ஆரம்பிச்சாங்க. டீக்கடை பெஞ்சுல ஒக்காந்திருக்கது வெட்டியா திரியறது எல்லாம் ரொம்பக் கொறைஞ்சிடுச்சி. எல்லாரும் வேலைபாக்க பொழைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது சினிமாக்காரனுக்கு புரியல TV-வந்து அவனுக வாழ்க்கையவே சீரழிச்சுட்டதா நெனக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்த காலகட்டம் பெரிய நடிகர்களோட படங்களே 20நாளைக்கு அப்புறம் காத்து வாங்க ஆரம்பிச்சிருச்சி ஒரு காட்சிக்கு 150பேர் வந்தாலே மிகப்பெரிய விஷயம். காட்சிய பாக்க ஆளில்லாம 4பேர் 5பேர் வந்தா எப்படி show காட்டுவான்? தியேட்டர்ல show வையே cancel பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 100 படம் வந்தா 10 படத்துக்கு போட்ட காசு திரும்பி வந்தாலே பெரிய விஷயமாயிருச்சு

மக்கள் ரொம்ப வெவரமாயிட்டாங்க. சினிமா ரசிகன், சினிமா பாக்கறவங்கன்னு ரெண்டு பிரிவா ஆயிருச்சு. சினிமா ரசிகன் அவனோட நடிகன் நடிச்ச படத்தை மட்டும் கண்டிப்பா பாத்துருவான். மத்த படத்த பாக்குறது ரெண்டாம்பட்சம். சினிமா பாக்குறவங்க குரூப் இருக்கு பாத்தியளா ரொம்ப ரொம்ப வெவரமானவுக. படம் தயாரிப்புல இருக்கும் போதே இந்தப்படத்தை பாக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணிருதாக

அப்ப அதிர்ச்சி வைத்தியம் சினிமாக்காரனுக்குத் தானவே வேணும். கண்டபடி படம் எடுக்கறத நிப்பாட்டி ஒழுங்கா படம் எடுத்தா படம் பாக்க வருவானுவ

மூணு வருடம் வாழ்நாளா இருந்த திரைப்படத்தோட இன்றைய வாழ்நாள் 100 நாட்களுக்குள் முடிந்துவிடுகிறது.

Friday, July 18, 2008

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் பக்கங்கள்(3)

முனியப்பன் தமிழ்நாடு அரசு சார்பா நடந்த AIDS AWARENESS நிகழச்சிக்காக மதுரைல நடந்த ஒரு மீட்டிங்ல சிறப்பரையாற்றினார் கூட்டத்துல மதுரை மாவட்டத்துல உள்ள 80 பள்ளிகளின் ஆசிரியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முனியப்பன் பேசி முடிச்சதும் ஒரு ஆசிரியை கேட்டார் ஒரு அதிரடிக் கேள்வி, தமிழர் பண்பாடு தொன்மையானது, ஒருவனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் உள்ளது. அப்புறம் தமிழ்நாடு ஏன் இந்தியாவுல AIDS அதிகமா உள்ள மாநிலமா இருக்குன்னு கேட்டாங்க, முனியப்பன் பதில் சொன்னார் பாருங்க, மேடம் நீங்க நெனக்கிற கலாச்சாரம் ரொம்ப கம்மியான ஆளுங்ககிட்டதான் இருக்கு தகாத உறவுகள் அதிகமாக இருக்கதாலதான் அதிகமா இருக்குன்னார்.

இந்த ஒழுக்கக்குறைவு எப்படி வருதுன்னு பாருங்க TV சினிமால வர்ற சம்பவங்கள் நிச்சயமா மக்களோட மனச பாதிக்குது.

ARINDHAM CHAUDRY பத்தி கேளுங்க ஒரு பயலுக்கும் தெரியாது (ஒரு சிலரைத் தவிர) ஒரு சினிமா Star பத்தி கேளுங்க. அந்த Star பத்தி Detail ஆ சொல்லுவாங்க அப்படி இருக்கும்போது நடிகர்களின் தனிப்பட்ட வாழக்கையும் சினிமா ரசிகனுக்கு தெரியுது.

1) பழைய காலத்து சாம்பார் காதல் மன்னன் (3 பேரை திருமணம் செய்தவர்)

2)சட்டைய மாத்துற மாதிரி கணவர்களை மாற்றிய லட்சுமிகரமான நடிகை அவருக்குத் தப்பாமல் பிறந்த ஐஸ்வரிய நடிகை.

3) கற்பு நடிகையை ரகசிய தாலி கட்டி கைவிட்ட திலக நடிகர், உடனே சுந்தர இயக்குநரை கைபிடித்த கற்பு நடிகை.

4) முதலில் ஒரு நடிகர் இயக்குநரை திருமணம் பண்ணி அவரை விட்டுவிட்டு, ஒரு வெளிநாட்டுக்காரரை கைபிடித்து ஒரு குழந்தை பெற்று, அவரையும் விரட்டிவிட்டு ஒருகட்டுமஸ்தான Body guard நடிகருடன் வாழ்க்கை நடத்தி வரும் நடிகை.

5) கட்டுமஸ்து நடிகர் மட்டும் லேசானவரா ஒரு பெண்ணை காதல் மணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற, பின் ஒளி நடிகையின் அக்காவுக்காக படமெடுத்து அந்த நடிகையால் குடும்பத்தை சட்ட பூர்வமாக பிரிந்து அந்த நடிகையையும் கைவிட்டு இப்பொழுது வாழ்கையில் ரயில் பயணத்தில் இருக்கிறார்.

சினிமா ரசிகன் மட்டுமல்ல, உலகத் தமிழன் அனைவரும் பார்க்கும் திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலில் ஒரு மனிதன் தவறுவதற்கு அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சினிமா, சினிமா நட்சத்திரங்களின் பங்கும் அடங்கும்.

லேட்டஸ்ட் சினிமா கிசுகிசு உதட்டோ டு உதடு கவ்வி லவ்விய நயன நடிகையும் விரல் வித்தை நடிகரும் பிரிந்து மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கின்றனர். இது மீடியாக்களால் பரபரப்பாக Flash செய்யப்படுகிறது.

முனியப்பன் பக்கங்கள்(2)

முனியப்பன் பக்கங்கள்(2)

நம்ம சினிமா ஆளுங்கள பாருங்க, remake-ல இறங்கிட்டாங்க, படமே remake. பழயபடத்த remake பண்றது, தெலுங்கு படத்த remake பண்றது, பழய பாட்ட remake பண்றது, அப்ப originality என்னாச்சு? அதான் பு ரியலன்னு இல்ல, அவங்க கற்பனை வத்திருச்சா, யோசிக்கிற திறமை இல்லையா?

நம்மாளுகளுக்கு ஒரு கதையோட அவுட்லைன மட்டும் சொல்லுவோம். இது நிசமா நடந்த உண்மைச் சம்பவம்

A 27 year Old woman was run over and killed by a train and her 30 year old lover injured as they stood kissing on a rail track in the Siberian city of Novosibirsk

இத படமாக்குற காதாசிரியர் டைரக்டரோட பேட்டி 'இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மைச் சம்பவத்தை படமாக்கணும்னு அதுக்கான கதைக் கருவை யோசிச்சிகிட்டிருப்பதான் இந்த சம்பவம் பத்தின news என் கண்லபட்ருச்சு. இத படிச்ச ஒடனே என்னால என் கண்ணுல கண்ணீர் வர்றத நிப்பாட்ட முடியல, எவ்வளவு வேதனை இருந்தா ரயில்வே டிராக்ல முத்தத்தை பரிமாறிக்கிட்டு ரெயில்ல அடிபட்டு வாழ்க்கைய முடிச்சிருக்கும் அந்தப்பொண்ணு.

இந்த outline ஐ வச்சி யோசிக்க ஆரம்பிச்சேன், காட்சிகள் தண்ணால வந்து விழுந்துகிட்டே இருக்கு ரெண்டே நாள்ல கதை, திரைக்கதை வசனத்தை எழுதிட்டேன். லைலா-மஜ்னு ரோமியோ-ஜீலியட், அம்பிகாபதி-அமராவதி வரிசைல நம்ப வீரமணி-வேலம்மா சரித்திரம்ங்க.'

இப்படி போகுது அவரோட பேட்டி, நீங்க கொஞ்சம் யோசிச்சு இந்த outlineஅ இப்ப இருக்க நம்மாளுக எப்படி சினிமாவுல கொண்டு வருவாங்கன்னு சொல்லுங்க......

முனியப்பன் பக்கங்கள்

முனியப்பன் பக்கங்கள்(1)

எல்லாருக்கும் வணக்கமுங்கோ. இதுப் பொய்ப்பேருன்னு சின்னப் பிள்ளைக்கும் தெரியுமுங்கோ. என் நண்பர் பேரை (எனக்கு 10 வயசு மூத்தவருங்க) இந்த தொடருக்காக எனக்கு நானே வச்சுக்கிட்டேங்க.

இந்தப் பக்கம் இருக்கறதே எனக்கு இப்பதானுங்க தெரியும், அதான் இவ்வளவு லேட்டு, இந்தப் பக்கத்துல என்ன எழுதலாம்னு யோசிச்சுப் பார்த்தேன், தமிழனைப் பத்திதான் எழுதனும்னு முடிவு பண்ணினேங்கோ.

தமிழனுக்கு என்ன தெரியும், வீரம், காதல், கிரிக்கெட், சினிமா இது நாலு தானுங்க எல்லா பயலுக்கும் தெரியும். விவசாயம், படிப்பு, தொழில பத்தி எழுதலன்னு நினைக்காதீங்க. அதெல்லாம் சம்பாத்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்பட்டதுங்க.

தமிழனோட அடிமனசில ஆழமா பதிஞ்சு இருக்க நாலுதான் காதல், வீரம், கிரிக்கெட்டு, சினிமா. இதில எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சினிமாவைப் பத்தி மட்டும் எழுதப்போறேனுங்க.