Wednesday, December 3, 2008

Case Sheet (எங்கப்பா செத்துட்டார் ...... நீங்க இருக்கீங்க)

முனியப்பன்கிட்ட 42 வயதுக்காரர் ஒருத்தர் X, மூஞ்சி, கை, கால் வீங்கி வர்றார். செக் பண்ணி பாத்தா, இரத்த அழுத்தம், ஹார்ட் பெயிலியர். ஒடனே முனியப்பன் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இதயநோய் நிபுணர்ட்ட அனுப்புறார். அங்க பெட்ல
அட்மிட் பண்ணி, 5 நாள் வச்சிருக்காங்க. சுகமாகி வீட்டுக்கு X வந்துர்றார்.

சிகரெட் குடிக்கக் கூடாது. திரவ அளவு ஒரு நாளைக்கு 1 லிட்டர் உப்பு கூடாது. முட்டை, மட்டன் கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் Xக்கு. முனியப்பன் கிட்ட வருவார், செக் அப் பண்ணிக்கிருவார். நார்மலாயிருக்கும். Xன் பையன் 5 ஆம் வகுப்பு மாணவன். முனியப்பன் Xஅ அட்வைஸ் பண்ணும் போது கவனமா கேப்பான். முனியப்பன் X கிட்ட "நானும் ஹார்ட் பேஷண்ட் தான். உணவுக் கட்டுப்பாடு மாத்திரைல இருக்கேன்" அப்படிம்பார்.

ரெகுலரா வந்துக்கிட்டிருந்த X, அதுக்கப்புறம் ஆளைக் காணோம். திடீர்னு ஒருநாள் மூஞ்சி மொகரையெல்லாம் வீங்கி முனியப்பன்கிட்ட வர்றார். சிகரெட், திரவ உட்கொள்ளளவு கட்டுப்பாடு இல்லை, மாத்திரை சாப்பிடலை, மறுபடியும் முனியப்பன் இதயநோய் சிறப்பு மருத்துவர்கிட்ட Xஅ அனுப்பி வைக்கிறார், அட்மிட் ஆகி அஞ்சு மணி நேரத்தில் ஆள் அவுட்.

10 நாள் கழிச்சு டெத் சர்டிபிகேட் வாங்க வர்றாங்க, X மகனும், அம்மாவும். X மகன் முனியப்பன்கிட்ட கேட்டான்,

"ஒங்களுக்கும் இதய வியாதி, எங்கப்பா செத்துட்டார், ...... நீங்க இருக்கீங்க"

அவனோட மனசுல உள்ள தாக்கத்தை எப்படி சொல்றதுன்னு அவனுக்குத் தெரியலை.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (அக்ஷ்யா ட்ரஸ்ட்டும், ராமய்யாவும்)

எல்லா ஊர்லயும் புகலிடமின்றி இருக்கும் புறக்கணிக்கப் பட்டோர் நிறையப் பாத்திருப்பீங்க.

இவங்கள்ல அதிகம் மனநிலை பாதிக்கப்பட்டவங்க தான். அவங்க பொறந்து வளந்த இடம் வேற. இப்ப இருக்க இடம் வேற. எதைப்பத்தியும் கவலை இல்லாம எதாவது ஒரு உடைல இருக்காங்க. அவங்க சாப்பிட்டாங்களா? என்ன செய்றாங்கன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிறதில்லை. திரும்பிக் கூட பாக்கிறது கிடையாது.

அதுக்குன்னு மதுரைல ஒருத்தர் பொறந்திருக்கார் பாருங்க....... அவர் பேரு கிருஷ்ணன். B.Sc., ஹோட்டல் மேனஜ்மென்ட் படிச்சுட்டு பெங்களூரில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்ல வேலைக்குப் போனார். போய்ட்டு லீவுல மதுரைக்கு வரும் போது ஒரு காட்சிய பாக்குறார்.

In June 2002, While coming down the bridge near Periyar Bus stand, Madurai, Krishnan lost himslf totally on seeing a horrifying condition of a man eating his own excreta. When Krishnan realised, the old man was suffering from acute hunger, then he bought food & offered. The man held Krishnan's hands which passed on high voltage energy.

கிருஷ்ணன் பெங்களூருவுக்குப் போறார். மனசுல அசை போடுறார். வேலை பாக்க முடியலை. மனசுக்குள்ள மணி அடிக்குது. This is not your place. Your job is to look after the needy and deserving hungry.

கிருஷ்ணன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு, மதுரைக்கு வந்து, புறக்கணிக்கப் பட்டோருக்கு உணவு வழங்க ஆரம்பிச்சார். மொதல்ல வெளிய ஹோட்டல்ல வாங்கிக் குடுத்தார். அப்புறம் தானே சமையல் பண்ணி குடுக்க ஆரம்பிச்சார். வேன்ல போய் சாப்பாடு குடுக்கிறார். ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு 2003 ல இருந்து...

செப்டம்பர், 2007ல் இருந்து 3 வேளை சாப்பாடு 200 பேருக்கு, அவங்க இருக்க இடத்துக்கு மாருதி ஆம்னி வேன்ல போய் குடுக்குறாங்க. ஒருநாள் செலவு ரூ. 8000 ஆகுது. பொருளாதார உதவி நிறைய பேர் செய்றாங்க.

கிருஷ்ணன் ஒரு சமையல்காரர். ரெண்டு உதவியாளர்கள், ரெண்டு பெண் ஆயாக்கள், ரெண்டு டிரைவர்கள் இதான் அவங்க டீம்.

மூணு வேளை சாப்பாடும் நேரம் தவறாம, பிரேக் இல்லாம குடுக்குறாங்க. முழுநேர வேலையே இதான். அவரோட

ஈ மெயில் : ramdost@sancharnet.in
வெப்சைட் : www.akshayatrust.org


ராமய்யா


மதுரைல இவரும் பொது சிந்தனை உள்ளவர். அக்ஷயா ட்ரஸ்ட் சாப்பாடு குடுக்குறாங்க... நாம டீ குடுப்போமே அப்படின்னு யோசிச்சார். சைக்கிள்ல தலைல ஒரு தொப்பி, கண்ணாடியோட இவர நீங்க காலைல 6.30க்கு ஒருத்தருக்கு டீ ஊத்தி குடுத்துகிட்டு இருக்கறதப் பாக்கலாம். 01.01.2006ல இருந்து சொந்தக் காசுல டீ வாங்கி, கெட்டில்ல கொண்டு போய், கொறைஞ்சது இருபது பேருக்கு குடுக்குறார். ஒரு நாள் செலவு ரூ. 50 (ஐம்பது) மட்டும். இவர் BSNL ஊழியர். டீ ஊத்திக் குடுத்துட்டு வேலைக்குப் போயிடுவார். ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை.



ராமய்யா, 11, சுந்தரம்மாள் இல்லம், கிழக்குத் தெரு, பொன்மேனி, மதுரை - 16
மொபைல் : 94428 82911

ரெண்டு பேர்ல யார் சிறந்தவங்க .. கிருஷ்ணனா ? .... குசேலனா ? அப்படின்னு பட்டி மன்றம் வேண்டாம்.

ரெண்டு பேரும் சமூகச் சிந்தனையோடு, எந்த வித பிரதிபலனும் இல்லாம செயல்படுறாங்க. இவங்களோட உதவி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்டோ ருக்குத் தான் போய்ச் சேருது. பிச்சைக்காரர்கள், மனநிலை நன்றாக உள்ளவர்கள், உழைக்கக் கூடியவர்கள் இவர்கள் list ல் கிடையாது.