Friday, September 17, 2010

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்க பாண்டி மதுரைல உள்ள கட்டிட காண்ட்ராக்டர்கள்ல ஒரு பெரிய லெவல் ஆள். அவருக்கு காய்ச்சல் அடிக்குது.முனியப்பன் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றார். 102 டிகிரி. அடுத்தநாளும் வர்றார். அன்னைக்கும் 102. முனியப்பன் தங்கபாண்டிய இன்னம் 2 நாளைக்கு
Rest எடுக்க சொல்றார்.

தங்கப்பாண்டி முனியப்பனின் நண்பரும் கூட .சிரிச்சிகிட்டே தங்கப்பாண்டி "நாளைக்கு ஊருக்கு போகனும், Rest எடுக்க முடியாதுங்கிறார்". முனியப்பன் "ஒரு நாள் Rest எடுத்துட்டு அடுத்த நாள் போங்கன்றார்". தங்கபாண்டி நாளைக்கு தூத்துக்குடிக்கு வர்றதா வாக்கு கொடுத்திட்டேன். 15 வருஷமா பேசாம இருந்த தங்கச்சிப் பாக்க ஊருக்கு போறேன்றார். வர்றதா சொல்லியாச்சு போகாமா இருந்தா நல்லா இருக்காது அப்படிங்கிறார்.
கருகிய உறவு துளிர் விடும் போது அதற்கு குறுக்க நிக்க முடியுமா? நிக்கலாமா?

தமிழனின் பலமே உறவுகள்தான். அப்படிப்பட்ட உறவுகள் சிதைந்து சின்னாபின்னாமாயிருக்கும் இந்த காலகட்டத்தில் முறிந்த உறவை
மீண்டும் மலரச் செய்யும் தங்கபாண்டி மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.