Thursday, April 30, 2009

வழக்கொழிந்த பழக்கங்கள்

தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.

இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.

ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.

பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.

பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.