மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
Tuesday, April 27, 2010
Subscribe to:
Posts (Atom)